புதன், 12 செப்டம்பர், 2012

ஏன் அணு உலை வேண்டாம்?சில காரணங்கள்

ஒரு சில ஊடகங்களும் காங்கிரசு கனவான்களும் கூறுவது என்னவெனில் கூடங்குளம் அணு உலை நிறுவபட்டுவிட்டால் தமிழகத்தில் இருபத்துநாலு மணி நேரமும் எல்லாரும் ஏசியை நிறுத்தாமல் ஓட்டும் அளவுக்கு மின்சாரம் கிடைக்குமாம்...
இந்த அணு உலையின் நிறுவு திறன் 1000MW.இவர்கள்(மேற்சொன்ன அறிவுஜீவிகள்) கூறுவது என்னவெனில் இந்த ஆயிரத்தில் நானூறு மெகாவாட் தமிழகத்துக்கு போனால் போகிறதென தருவார்களாம்...அதை வைத்து மின் பற்றாக்குறை என்ற வார்த்தையையே அகராதியில் இருந்து எடுத்து விடலாமாம்...சிப்பு வருது சிப்பு...
எந்த ஒரு மின் உற்பத்தி நிலையமும்(அணு அல்லது அனல்) அதன் முழு கொள்ளளவில் இயக்கப்படாது...உதாரணத்திற்கு நீங்கள் ஒரு டூ வீலர் வைத்துள்ளீர்கள்...அதில் அதிக பட்ச வேகம் நூறு kmph எனவைத்து கொள்வோம்.என்றாவது நாம் அதில் அதன் அதிகபட்ச வேகத்தில் செலுத்தியிருக்கிரோமா??செலுத்தினால் என்னாகும் என நமக்கு தெரியாதா?அதே நிலைதான் ஒரு அணு உலை அல்லது அனல் உற்பத்தி எநதிரதுக்கும் பொருந்தும்.
ஒரு வேளை ஆயிரம் மெகாவாட் திறனில் இயக்கினால் அதிகபட்ச வெப்பம் வெளிப்படும்.சிறு விபத்து வந்தால் கூட அதை தடுக்க முடியாமல் போகும்.அதனால் எப்போதும் அதிகபட்சம் 40-50% விழுக்காடு திறனில்தான் இயக்கப்படும்.அதாவது அதிகபட்சம் கிடைக்கபோவது 600MW.இதை ஒரு வாய் தண்ணீர் கூட தர மனமில்லாத  பக்கத்து மாநிலங்கள் பிய்த்து போட்டது போக அதிகபட்சம் ஒரு 250 MW கிடைக்க வாய்ப்புள்ளது.அதுக்குத்தான் இம்புட்டு ரகளையா?
சரி அந்த அணு கழிவுகளை என்ன செய்வர்?ம்ம...ஹ்ம்ம்...பேசப்படாது...கூடங்குளம் அணு உலை வந்தால் தமிழகம் மின்சாரத்தில் ஜொலிக்கும்...நீங்களே பார்க்கத்தானே போகிறீர்கள்?

வெள்ளி, 4 மே, 2012

Cape Fear 1962 Vs Cape Fear 1991

               இது இரண்டு படங்களின் தொழில்நுட்ப அம்சங்களையோ அல்லது நடிகர்களின் நடிப்பையோஒப்பிடும் முயற்சி அல்ல.இது வெறும் கதாபாத்திரங்களின் தன்மை வேறுபடுதலை ஒப்பிடும் ஒரு முயற்சியே!
              மேலும் உலக சினிமா பத்தி எழுத கருந்தேள்,கொழந்த,உலக சினிமா ரசிகன் போன்றோர் ஓவர் டைம் போட்டுகினு எழுதுவதால் அதை எதிர்பார்த்து இங்கே வந்தால் ஏமாற்றமே என முன்பே சொல்லிகொள்கிறேன்.

கேப்  பியரின் கதை சுருக்கம் ஒரு குற்றவாளிக்கு(மாக்ஸ் கேடி) தண்டனை பெற்று தரும் வழக்கறிஞர்(சாம் பவ்டன்).அவரின் குடும்பத்தை பழி வாங்க முயலும் அந்த குற்றவாளி.
கேப் பியர் 1962 படத்தில் நடித்த க்ரிகரி பெக் மற்றும் ராபர்ட் மிட்சம் ரீமேக்கிலும் சிறிய கதாபாத்திரங்களில் வந்து போகின்றனர்.


இதில் குற்றவாளியாக வரும் மாக்ஸ் கேடி விடுதலைபெற்றபின் நேரடியாக வழக்கறிஞர் சாம் பவ்டனை சந்திப்பதே முதல் காட்சியாக வருகிறது.அவர் அந்த சம்பவத்தை அவருக்கு நினைவு படுத்துகிறார்.பின்னர் அவர் செய்யும் டெர்ரரான  விஷயங்களே மிச்ச படம்.
             எனக்குபடம் பார்க்கும்போது தோன்றியது மேக்ஸ் தன்னை தானே சேமுக்கு நினைவூட்டாமல் சில்மிஷங்களை செய்திருந்தால் இவர்தான் செய்தார் என்பதை கண்டுபிடிக்கவே திணறி இருப்பார்கள்.இவர் தன்னை தானே முதலில் காட்டி கொண்டதே இவர்தான் அனைத்து காரியங்களையும் செய்கிறார் என்பதை சேமுக்கு ஊர்ஜிதப்படுத்துவதாக உள்ளது(ஹீ ஹீ கேடியை விட கேடித்தனமாக யோசித்து விட்டோமோ என்று பின்னால் தோன்றியது).
1962 இல் வந்த படத்தில் கதாபாத்திரங்களின் தன்மை எப்படி?கேடியை தவிர அனைவரும் அக்மார்க் ஒழுக்க சீலர்கள்.எனக்கு பொதுவாகவே ஒரு கதாபாத்திரம் நல்லவனா கெட்டவனா என வகைபடுத்துவதே பிடிக்காது(இப்படி வகைப்படுத்தாத காரணத்தாலேயே ஓடிய படங்கள் ப்ள.Dabangg ஒரு உதாரணம்).நிஜ வாழ்க்கையில் இவன் அக்மார்க் நல்லவன் இவன் ரொம்ப கெட்டவன் என சொல்லும் வண்ணம் யாரும் இருப்பதாக எனக்கு தெரிந்தவரையில் இல்லை.
ஒவ்வொருவரும் blend of bad and good.இதுதான் என் கருத்து.
       இவன் நல்லவன் இவன் கெட்டவன் என வகைப்படுத்துவது படத்தின் சுவாரஸ்யத்தை குறைக்கும் என நினைக்கிறேன்.
      1962 இல் வரும் படத்தில் சேமின் மகள்(சிறுமியும் அல்லாமல் குமரியும் அல்லாமல் ஒரு ரெண்டுங்கெட்டான் வயதுதான் இரண்டு படங்களிலும்) ரொம்ம்ம்ப நல்லவள்.சிறுமிக்கே உரிய குனங்களுடனேயே அவர் படைக்கபட்டுளார்.அவருக்கு மன சலனங்கள் எதுவும் இல்லை.டீன் ஏஜுக்கே உரிய ரெண்டுங்கெட்டான் தன்மை  எதுவும் படத்தில் இல்லை.ஒருவேளை இது இறுக்கமாக அப்போது அமலில் இருந்த production code (1967 இல் இருந்து தளர்த்தப்பட்டு வேறு முறை அமல்படுத்தப்பட்டது) காரணமாக அவரை ஒரு சலனமற்ற சிறுமியாக படைத்திருக்கலாம்  என்பது என் எண்ணம.

   ஆனால் 1992 இல் வரும் அதே சிறுமி cum குமரி கதாபாத்திரம் மிக மிக இயல்பாக உள்ளதாகவே தோன்றுகிறது.அந்த டீன் ஏஜ் வயதிற்கே உரிய ஆர்வம(வேறு எது மீது?செக்ஸ் மீதுதான்) மாற்று பாலின ஈர்ப்பு போன்றவை மிக இயல்பாக கையாளப்பட்டது என்றே கூறுவேன்.Danielle (அதான் சேமின் மகள்) மாக்ஸ் கேடியுடன் பேசும் காட்சிகளே அதற்கு உதாரணம்.அவள் கேடியுடன் பேசும்போது அவள் கண்களில் தெரியும் ஒருவித ஈர்ப்பு புதிதாக தெரிந்து கொள்ள நினைக்கும் ஆர்வம என பலவும் காணலாம்.
      குற்றம் என்பதே ஒரு சாரார் மட்டுமே செய்வதல்ல.எதிராளியும் சிறிது ஒத்துழைப்பு தராமல் குற்றம் நிகழ்வது சற்றே கடினம் என கொள்ளலாம்.இந்த சிறுமி அவளாக ஆர்வபட்டு கேடி கூப்பிட்டவுடன் அவனிடம் சென்று பேசுவது இதற்கு ஒரு சிறு உதாரணம்.ஆனால் 1962 இல்வரும் படத்தில் அப்படிப்பட்ட ஒரு காட்சி இல்லை.அவள் கேடியை கண்டவுடன் மிரண்டு ஓடுகிறாள்.அவ்வளவு நல்லவளாக காட்டபடுகிறாள்.


        நான் சொல்வதில் ஏனோ ஆணாதிக்கம் பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உளறப்படுவது அது இது என அளக்க வேண்டாம்.இது இரண்டு பாலினத்தாருக்கும் பொருந்தும்.

       1962 இல் ஒரு டிபிகல் மிடில் கிளாஸ் குடும்பம் கேடியை கொன்றாவது வாழ்வை நடத்த எத்தனிக்கும் ஒரு போக்கு தென்படும்.1992 இல் வந்த படத்தில் அந்த வழக்கறிஞரின் குடும்பத்தாரும் சற்று சலனப்படவர்கலாகவே சித்தரிக்க படுகின்றனர்.Production code தொல்லை இல்லாமல் இருந்தது ஒரு காரணமாக கூட இருக்கலாம்.யாரும் அக்மார்க் நல்லவனும் இல்லை அக்மார்க் கெட்டவனும் இல்லை என்பதே நிதர்சன உண்மை.எல்லாவற்றையும் சந்தேகி என்பது மார்க்ஸ் வாக்கு.எது எப்படி இருந்தாலும் இரண்டுமே க்ளாசிக்காகி விட்டது என்பதை மறுக்க இயலாது.

புதன், 2 மே, 2012

இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ளவா

எப்படிஇருந்தாலும் ஓலக்க சாரி ஒலக நாயகன் படம் வந்தப்புறம் எல்லாரும் பிரிச்சி மேயத்தான் போகின்றனர்!ஆனால் இன்னும் படம் வருவதற்கு முன்பே இப்படி அண்ணாத்த மாட்டிகிட்டாரே?உச்...உச்...உச்...


புதன், 21 டிசம்பர், 2011

ஒலக சினிமா எடுக்க ஒன்று கூடிய தமிழ் இயக்குனர்கள்-பாகம் 2

சென்ற விவாதத்தின் தொடர்ச்சியாக இந்த பதிவு!தனிப்பட்ட முறையில் இதை எடுத்துகொண்டு டென்சன் ஆகிறவர்கள் ஒரு வேலியம் மாத்திரை போட்டுகொள்ளலாம்!இது ஜாலிக்கு!
************************************************************************************
இப்போது பங்கேற்பவர்கள் செல்வராகவன்,அமீர்,மணிரத்னம்,கமல் ...
*
முதலில் செல்வராகவன் வருகிறார்:
கவுண்டர்: யோவ் இது ராத்திரி நேரம் இப்போ என்னா கூலிங்க்ளாஸ்?
செல்வா:  அது வந்து....
செந்தில்: அண்ணே அவுரு கண்ணு ஏன்னே அப்படி இருக்கு?
கவுண்டர்: ஆமா தீபாவளி நேரத்துல சும்மா இருந்திருக்கணும்!எந்த பிகரு கிட்டையோ போய் ரூட்டு போட்டிருக்கார்!அவ பட்டாச கொளுத்தி கண்ணுல போட்டுட்டாளாம்!
செல்வா: பப்ளிக் பப்ளிக்!தொழில் ரகசியம் வெளியே சொல்லாதீங்க!
கவுண்டர்: சரிங்க்ணா நீ கண்டின்யூ
செல்வா: ஹீரோ தம்பி "பாடி பில்டர்" தனுசு!முப்பது நாள் சேவிங் பண்ணாம நடிக்கிறாரு!
கவுண்டர்: ஏன் ப்ளேடு வாங்க காசில்லையா?
செல்வா: இட்ஸ் பீலிங்க்ஸ் மேன்!"நான் சொன்னதும் வெயில் வந்துச்சா நான் சொல்லல மழை வந்துச்சா" அப்படின்னு பாடுறான்!
கவுண்டர் : ஏன் ஹீரோ வானிலை ஆய்வு மைய ப்யூனா?
செல்வா: எகதாளம் பேசாதீங்க சார்!
கவுண்டர்: நீ தப்புத்தாளம் போடாம இரு!கண்டின்யூ
செல்வா: ஹீரோயின் பச்சா பங்கொபாதயாய்!
கவுண்டர் : என்னா? பாத்தியா பாக்கலியா?
செல்வா: இது பேருய்யா!
கவுண்டர் : நா ஏதோ சரக்குன்னு நெனச்சேன்!சரி சொல்லு
செல்வா: ஹீரோ படுக்கையிலேயே உச்சா போகுறார் அப்புறம் he  farts!
கவுண்டர்: யப்பா கப்பு தாங்காம ஹீரோயின் ஓடி போயடுராளா?ஆஹா!நிச்சயமா ஆஸ்கர்  விருதே   கிடைக்கும்!ஓங்க தம்பி லுங்கிய தூக்கிக்கினு நடு ரோட்டில் ஆடியதுக்கே தேசிய விருது கெடச்சுதே!
கவுண்டர்: ஆஸ்கர் விருதுக்கு டயலாக் ரெடி பண்ணி வச்சிகுங்க!"எல்லா புகழும் இறைவனுக்கே !எல்லா ஏழு கோடி சம்பளமும் எனக்கே"
செல்வா: தமிழின் இரண்டாவது ஸ்பால்டன் படம் இது!
கவுண்டர்  :ஏன் மொத  படத்த தூக்கிட்டு ஓடிட்டாங்களா?
செல்வா: அப்படின்னு சொல்ல சொல்லி நாலு பேருக்கு துட்டு கொடுத்திருக்கேன்!
கவுண்டர் : அட்ரா அட்ரா!ஆமா உன்னோட எல்லா படத்துலயும் யாருன்னா ஒருத்தர் மென்டலா இருப்பாங்களே!இதுல யாரு?
செல்வா: ஹீரோ சுவத்த பாத்து டாய் டாய் டாய் நான்தான் ரிவிட்டு குமாரு! அப்படின்னு கத்துறாரு
கவுண்டர்: அப்புறமென்ன?சுவர் இடிஞ்சி உழுந்துடுதா?
செல்வா:  சும்மா இருங்க!தமிழில் இது ரெண்டாவது ஸ்பால்டன் பிலிம்!
கவுண்டர்: யோவ எத்தன தபா இதையே சொல்லுவா?அப்போ மொதல் பிலிம ஆயா தூக்கினு போயிடுச்சா?
செல்வா: வேறொரு கத இருக்கு!சோழ மன்னனை நர மாமிசம் தின்னும் ஜந்துவா காட்றோம்!
கவுண்டர்: ஏற்கெனவே தமிழனை எவனும் மதிக்க மாட்றான்!இதுல இப்படி நீ காட்டுனா எவண்டா மதிப்பான்?சரித்திரம் தெரியலைன்னா மூடிகிட்டு இருக்கணும்!
செல்வா: நீங்க மொதல்ல இருந்தே வெவகாரமா பேசிகினு இருக்கீங்க!டாய் கொக்கி குமாரு கவுண்டருக்கு ஒரு கொக்கிய போடறா!
கவுண்டர்: ஐயோ எஸ்கேப்!
*

அடுத்து கமல்

கமல்:அல்லா ஜானே அல்லா ...(பாடி கொண்டு வருகிறார்)
கவுண்டர்: என்ன மூக்கால பாடுறீங்க?மூக்கடைப்பா?
கமல்: மிஸ்டர் ஐ.ஜி.ஆர் மாறார் ஐ ஆம் சூர் யூ ஆர் அவேர் ஆப தி பவர் ஆப தி ஸ்டேட் ஒப் தி ......
கவுண்டர்: எங்கனா மனப்பாடம் பண்ணிட்டு வந்துட்டீங்களா?
கமல்: மறார் கமாண்டிங் ஏரியாவில் இருக்கும் கவுண்டரை மாத்துங்க!இல்லன்னா தேர் வில் பீ டூ மச் எக்ஸ்ப்ளோஷன்ஸ்  இன் த  சிட்டி!
கவுண்டர்: ஐயோ இதென்னடா வம்பா போச்சு!
கமல்: ஆர்னால்ட் ஸ்வாசனேகர் சொல்வதைத்தான் கவுதம புத்தரும் சொல்றார்!
கவுண்டர்: உங்க படம் பாக்க வேணாம்னா?
கமல்: வெல் ஆ என் அடுத்த படம் சாந்தரூபம்!படம் முழுக்க சாந்தமா இருப்பேன்!
கவுண்டர்: படம் முடியும்போது பாந்தமா எல்லாரும் வெளிய போகிடுவாங்க!
கமல்: இதைதான் ஆகாசம்பட்டு சேஷாசலம் சொன்னார்!தஸ்தயெவ்ஸ்கி சொல்வதும் இதைதான்!
கவுண்டர்: எதை?என்ன பேசுறீங்கன்னே ஒன்னும் வெளங்கல!
கமல்:(மைன்ட் வாய்சில்)புரியகூடாதுன்னுதானே இப்படி பேசுறேன்!..
வெல் எனக்கு இந்த "இஷ்" பெயர்களில் நம்பிக்கை இல்லை!அப்படி வைக்க கூடாது தமிழன்!
கவுண்டர்: நீங்க உங்க பெண்களுக்கு அக்ஷரா ஷ்ருதி அப்படின்னு வச்சிருக்கீங்களே?
கமல்:(மைன்ட் வாசியில்)எந்த பால் போட்டாலும் கோல்  போட்டுடுரானே!
வெல் உயிர் போகுற வேளையிலும் தமிழ்ல பேச மாட்டான் தமிழன்!
கவுண்டர்: உங்க பொண்ணே  இப்போதான் தமிழ் பேச கத்துகிட்டு இருக்காங்களாமே?
கவுண்டர்: சார் ஒரு சந்தேகம்!அன்பே சிவம் படத்துல உயிர் போற வேளையிலும் தமிழ் பேச மாட்டீங்களான்னு கேக்குறீங்க!ஆனா உன்னை போல் ஒருவன் படத்துல முக்கால்வாசி இன்குலீசுலதான் நீங்களும் மத்தவங்களும்  பேசிகிரீங்க!ஏன் இந்த சுயமுரண்?
கமல்: வெல் ஊருக்குதான் உபதேசம்!

கவுண்டர்: அது ஏன்  சார் எப்பவுமே இந்து மத கடவுள்களையும்  இந்துக்களின் நம்பிக்கையையுமே கலாசுரீங்க?ஒ உங்க தலிவர் பெரியார் வழி செலெக்டிவ் நாத்திகமா?
கமல்:(மைன்ட் வாய்சில்) மத்த மதங்களை விமர்சனம் பண்ணா டப்பா டான்ஸ் ஆடிடுமே!வெல் ஐ ஆம் கிரிடிசைசிங் ஒன்லி மெஜாரிட்டி ரிலிஜியன்!
கவுண்டர்: என்னய்யா சொல்லுற?எனக்கு துளு மொழி தெரியாது!
கமல்: பாம் வெச்சிருக்கேன்!ஒரு குப்பனோ சுப்பனோ இதை செய்ய முடியுமா மிஸ்டர்  மாரார்?
கவுண்டர்: ஆமா தமிழ் படத்துல மட்டும் மோகன்லாலே போலீசா வராரு(மலையாள படம் போல)ஆனால் தெலுங்கு படத்தில் ஏன் வெங்கடேஷ் வரார்?தமிழனுங்கதான் இளிச்சவாயன்னா?
கமல்: (மைன்ட் வாய்சில்) உஸ்ஸ்...இப்போ எப்படியாவது எஸ்கேப் ஆகிடனுமே!
திடீரென்று அபிராமி அபிராமி அபிராமி என கூரிகொண்டே சுத்ஹி சுத்தி வருகிறார்!
கவுண்டர்: ஐயோ ஆள உடுங்க!

*
அடுத்து மணிரத்னம்

மணிரத்னம்: வெல்...மை நெக்ஸ்ட் பிலிம் அபவுட்...
கவுண்டர்: என்னதான் சொல்ல வரீங்க?
மணிரத்னம்: நான்...அடுத்த...படம்...எடுக்குறேன்....
கவுண்டர்: அது ஏன் எப்போ பாத்தாலும் ஒத்த வார்த்தையில்  பதில் சொல்றீங்க?
மணிரத்னம்: ஏன்னா எனக்கு தெரிஞ்ச தமிழ் அவ்வளவுதான்!
கவுண்டர்: என்னென்னமோ உண்மையெல்லாம் இப்போ வெளிய வருதுடா சாமி!
மணிரத்னம்: பாகிஸ்தானில் ஹீரோ பனமரத்துபட்டியில் ஹீரோயின்!
கவுண்டர்: இவ கல்யாணம் ஆகி அங்க போறா!அதான?
மணிரத்னம்: வாவ் ஹவ் டூ யூ நோ?
கவுண்டர்: ஆமா இதே கதைதான் ரோஜா படத்துல!
மணிரத்னம்: சரிவேண்டாம் அடுத்த கதை...ஹீரோ... ஹீரோயின்... காதல்... கல்யாணம்... தாலி... ஆணியில் தொங்குது!
கவுண்டர்: ஹீரோயின் அடிபட்டு கோமா ஸ்டேஜில்!ஹீரோ வந்து உருகுறார்!
மணிரத்னம்: சரி..அடுத்த கதை புஷ்கர் ஈ பைபா தீவிரவாதம் பத்தி....
கவுண்டர்: ஒண்ணு காதல் இல்லன்னா தீவிரவாதம்!இது தவிர வேறு எதனா கதை எடுக்கமாட்டீங்களா?ஆள உடுங்க சாமி!
மணிரத்னம்: பொன்னியின் செல்வன் எடுக்கலாம்னு.......
கவுண்டர்: ஐயோ வேணவே  வேனாம்!இதுக்கு சுகாசினி வசனம் எழுத வச்சி கொல்லுரதுக்கு நீங்க படம் எடுக்காமலே இருப்பது பெட்டர்!ஒரு நல்ல காவியம் தப்பிச்சிது!கல்கியின் ஆத்மா வாழ்த்தும்!அப்புறம் என் உங்க படத்துல எல்லாரும் தண்ணியில் "ஏதோ" விட்டது போலவே பேசுபவன் காதிலேயே  விழாதபடி பேசுறாங்களோ?
மணிரத்னம்:(மைன்ட் வாய்சில்)ரொம்ப கேள்வி கேக்குறானே!இப்படி சமாளிப்போம்!மை வைப் சுகாசினி இஸ் கமிங் டு ஆன்சர் யூ!ப்ளீஸ் வெயிட்!
கவுண்டர்: அய்யய்யோ அவுங்களா?ஆள உடுங்க!
 
*
அடுத்து  அமீர் 

அமீர்: என்னா மாமா சவுக்கியமா?
கவுண்டர்: யோவ யாருடா மாமா?
அமீர்: என்னா மாமா இப்படி கோவிச்சிக்குற?
கவுண்டர்: நிறுத்து!டப்பா டான்ஸ் ஆடிடும்!
அமீர்: அடுத்த படம் பாலியஸ்டர் வீரன்!
கவுண்டர்: ஆமா பருத்தி வீரன் பெயர் காரணம் என்ன?பொட்ட காட்டுல நடக்கும் கதையில் எங்கயா  பருத்தி விளையுது?
அமீர்: அம்புட்டு புத்திசாலியா ரசிகன்?இல்ல சித்தப்பு!
கவுண்டர்: யோவ மொதல்ல மாமா இப்போ சித்தப்பாவா?இந்த கொடுமைய கேக்க ஆளே இல்லையா?
அமீர்: மொரடனா ஹீரோ திமிர் புடிச்ச தலைக்கு என்னையே வெக்காத ஹீரோயின்!க்ளைமாக்ஸ் வந்து நாளு பேரு சேர்ந்து....
கவுண்டர்: போதும் இதுக்கு மேல சென்சார் ஆகிடும்!
அமீர்:நடுவுல போட்ஸி  படத்த உல்டா பண்ணி போகி அப்படின்னு ஒரு படம் நான் ஹீரோ!
கவுண்டர்: க்ளைமாக்சுலஒன்னைய போகி நெருப்பில் போட்டு கொளுத்திடுரானுங்களா?
அமீர்: ஐயோ உட்டா நீங்க என்னைய கொளுத்திடுவீங்க போல!ஆள உடுங்க!


வெள்ளி, 18 நவம்பர், 2011

ஒலக சினிமா எடுக்க ஒன்றுகூடிய தமிழ் இயக்குனர்கள் (ஒரு கற்பனை)

ஒலக சினிமா ஒலக சினிமான்னு எங்கு திரும்பினும் இதே பேச்சு இதே விவாதம்!!வெயில் படம் வந்தப்போ அது ஒலக சினிமான்னாங்க!!பருத்தி வீரன் வர சொல்ல அதை ஒலக சினிமான்னாங்க!!ஒவ்வொரு முறை ஒரு படம் வரும்போதும் கொய்யால இதுக்கு மேல எவனும் படம் எடுக்க முடியாது!!ன்னு அளப்புறசத்தம் காதை கிழிக்குது!உண்மையாக ஒலக சினிமா எடுக்க தமிழ் இயக்குனர்கள் ஒன்று கூடினால் எப்படி இருக்கும்? என்ற கற்பனையின் விளைவே இந்த கட்டுரை!!யாரும் டன்சன் ஆக வேணாம்!!சும்மா ஜாலிக்கு!! ;)
************************************************************************************

இதில் பங்குபெறுவோர்:பாலா,மிஸ்கின்,தியாகராஜன் குமாரராஜா(யப்பா மூச்சு முட்டுது.இனி இவரை த்யாகு என அழைக்கிறேன்),அமீர்,கவுதம் மேனன்,பாலாஜி சக்திவேல்,விஜய்(இயக்குனர்),மணிரத்னம் ,முருகதாஸ் .அப்புறம் கொஞ்சம் கலகலப்புக்கு தலைவர் கவுண்டமணி ,எஸ் ஜே சூர்யா மற்றும் அப்பாவி ரசிகன் .யார் பெயராவது விட்டு போயிருந்தா தெய்வ குத்தம் ஆக கருதி நூறு தபா எஸ் ஜே சூர்யா சுறா படத்தை பார்ப்பார்! ;)


************************************************************************************
இடம்: ஏதோ ஒரு இடம்
எல்லா இயக்குனர்களும் ஆஜர்  கவுதம் மட்டும்  லேட்டாக வருகிறார்.
கவுதம்: சாரி ஐ ஆம் எ லிட்டில் லேட் ஐ வாஸ் பிசி
அப்பாவி ரசிகன்: இது ஓங்க பட வசனமோ?ஒன்னியும் புரியல சார்!!
கவுண்டமணி: உக்கும்...பர்மா பஜார்ல நாலு இன்குலீஸ் பட டி.வி.டி வாங்க போனதனால இவுரு லேட்டு!!எப்படி சமாளிக்குராறு..அடன்காப்பா!!
அப்பாவி: சரி வந்த வேலைய பாக்கலாமா?
(எல்லாரும் மண்டையை ஆட்டுகின்றனர்)

முதலில் மிஸ்கின்

மிஸ்கின்: இப்போ நாம எடுக்க போற படம் பகாஷி பகோடா இயக்கிய ஜப்பான் படம்!!முதல் காட்சியிலேயே நான் அம்மணமா ஒடுரேன்!!அப்புறம்....
கவுண்டமணி: அப்புறம் எண்ண எல்லாரும் தேட்டர உட்டு ஓடிடுராங்களா?
மிஸ்கின்: குறுக்க  பேசாதீங்க!!அப்படியே லாங் ஷாட்ல ஒரு மெண்டல் ஆஸ்பிடல் அதை விட்டுட்டு வெளிய ஓடி வரான் நம்ம ஹீரோ!!
கவுண்டர்: ஆமா நீயேஅப்படிதான் தப்பிச்சு வந்தா மாதிரி இருக்கு...யோவ இது நைட் டைம் இப்ப கூட கூலிங் கிளாஸ் தேவையா?
மிஸ்கின்: உச...ஒரு ப்லோவா சொல்லும்போது குறுக்க  பேசாதீங்க!!
கவுண்டர்: சரி நெடுக்க பேசவா?
மிஸ்கின்: நான் எழுந்து போய்டுவேன்!!கொஞ்சம் அமைதியா இருங்க!!அப்படியே லாங் ஷாட் க்லோசப்பாமாறுது! முகத்தில் வியர்வையுடன் அம்மணமாக ஓடும ஹீரோ!!தூரத்தில் சைரன் ஒலி!ஹாஸ்பிடல் வேன்  துரத்துது!
கவுண்டர்: அப்புறமென்ன அவன் வேன்ல ஏறி போய்டுரானா?
மிஸ்கின் : இந்த காட்சியில் நான் நடித்ததை பார்த்தி ரெண்டு பெண் உதவி இயக்குனர்கள் ஓடி வந்து கட்டி பிடித்துக்கொண்டனர்!!
கவுண்டர்: இது சென்சர்ல போய்டும்!!ஆள உடு!!

அடுத்து பாலா

பாலா: முதல் காட்சியில் செம்பட்டை தலையுடன் ஒரு காக்கா

கவுண்டர் :அடங்கப்பா மனுசனுக்குதான் பழுப்பு டை காக்காவுக்குமா?அட்ரா அட்ரா!!
பாலா: அப்படியே சூம் அவுட் பண்ணா பனை மாற உச்சியில் நமது கதை நாயகன்

கவுண்டர் : கள்ளு திருடுரானா?
பாலா: சும்மா இருங்க!!அப்படியே தலை கீழா பர பரன்னுஉடும்பு மாதிரி கீழ இறந்குரான்!அவனுக்கு ஒரு கண்ணு இல்லை!!ஒரு காது கேக்காது ஒரு...
கவுண்டர் : அடங்கப்பா இன்னும் என்னென்ன கோளாறோ!!அவன் ஹீரோ இல்ல சீரோ!!
பாலா: சும்மா கிண்டல் பண்ணாதீங்க!!அப்படியே இரங்கி வந்ததும் தூரத்தில் ஒரு குரல் பாத்தா ரெண்டாவது ஹீரோ மொட்டை தலையோட அண்டர்வேருடன் ஓடி வரான்!
கவுண்டர்: ஐயோ எனக்கு பயமா இருக்கு
பாலா: நடுவுல ஒரு செம அழகான ஐயர பொண்ணு ரெண்டு போரையும் மாறி மாறி லவ் பண்ணுது!!அவள்கல்லூரிக்கு கொண்டு போகும் தயிர் சாதத்தை யார் சாப்பிடுவதுன்னு ரெண்டு ஹீரோவுக்கும் செம போட்டி.அடிதடியா மாறுது!!இவன் கொரவலைய அவன் கடிக்க அவன் .......
கவுண்டர் : ஐயோ உடுங்க சாமி!!


அடுத்து தங்கர் பச்சான்
தங்கர்: கதை நாயகிங்க தனது பேருக்கு பின்னால் உள்ள சாதிப்பெயர்களை துறக்க வேண்டும்!!
கவுண்டர்: அப்போஉங்க பேர்ல உள்ள பச்சான் என்னாங்கோ?

தங்கர்: போயா...கூ...முட்ட!!தமிழனுக்கு சூடு சொரணை இல்லை!!எங்க அய்யா பெரியார் ஒரு கன்னடரு அவரை தமிழர் தலைவனா ஏத்துகிட்டான் முட்டாள் தமிழன்!
கவுண்டர்: இப்போ என்னதாய்யா வேணும் உமக்கு?
தங்கர்: எனது கதை நாயகன் அம்பது வயசுக்காரன்!!கோவணம் மட்டுமே கட்டுவான்!!மேக்கப் இல்லை .கதை நாயகி அதான் அவ பொஞ்சாதி கீச்சு கொரலில் பேசுவார்!!
கவுண்டர் :ஆக மொத்தம் யாரும் சரியில்ல!!சரி உடுங்க!!


அடுத்து வெற்றி மாறன

வெற்றி மாறன: திச இஸ் தி ஏன்டா ஆப சாலமன் கரண்டி
கவுண்டர்: சரி உடு..நீங ரெபிடக்ஸ் இன்குலீஸ் கோர்ஸ் போறன்னு தெரியுது!!
வெற்றி: அடுத்து ட்ரைசைக்கிள தீவ்ஸ் என்கிற படத்தை சுட்டு குளிக்காதவன் அப்படின்னு ஒரு படம் எடுக்குறேன்!!

கவுண்டர்: இப்பவே கப்பு  தாங்கள!!
வெற்றி: கொசு சாரி தனுசு தான் ஹீரோ.பல வருசமா குளிக்காமலே இருக்காரு  .அவனோட அப்பா ஏண்டா நாயே குளிடா அப்படின்னு சொல்லியும் "குளிச்சு பாத்தேன் குளிக்க முடியல:" ன்னு பாடுறான் ஹீரோ!!
கவுண்டர் :இதென்ன சோப்பு விளம்பரமா?
வெற்றி: டோன்ட்  இன்டர்பியர்

கவுண்டர்: ஆ ஊன்னா இத சொல்லிடு!!
வெற்றி: பழைய நடிகை பஞ்சு அண்ணி கேரக்டர் தன கைக்குழந்தைக்கு பீ தொடச்சி விடும்  காட்சி உண்டு 
கவுண்டர்: அடங்கப்பா ஆள உடுரா சாமி!!

அடுத்து  கவுதம் மேனன்!!

கவுண்டர் : வாங்க.ஒ உங்களுக்கு தமிழ் புடிக்காதில்லை!!ஓகே கம யா!!
கவுதம்: கமிங் யா!!மை பிலிம் இஸ் அபவுட் டூ லவர்ஸ்.துண்டை தாண்டி வருவாயா!!
கவுண்டர்: ஏன் ஹீரோ பஞ்சாயத்து தலைவரா?
கவுதம்: வாட்ஸ் பஞ்சோத் வாட்ஸ் தட்?
கவுண்டர்: உக்கும்...சென்னைய உட்டு வெளிய போனாதான அதெல்லாம் கண்ணுக்கு தெரியும்!!
கவுதம்: வாட் கம எகெய்ன்!!
கவுண்டர்: ஒண்ணுமில்ல!!நீ சொல்லு!!
கவுதம்: மை ஹீரோ மெகானிகல் கிராஜுவேட்!இயக்குனர் சான்சுக்கு அலையுறான்!!
கவுண்டர்: பர்மா பஜார் போன நெறைய வெளிநாட்டு படங்கள் கெடைக்குது அதை காப்பியடிச்சு எடுக்கலாமே?
கவுதம்:(மைன்ட் வாய்ஸ் )நாம காப்பியடிப்பது இவனுக்கு எப்படி தெரியும்?பீ கேர்புல் நா என்னை  சொன்னேன்!!

 அடுத்து தியாகராஜன் குமாரராஜா அலையஸ் தியாகு 

 தியாகு: முதல் சீனே பாக்கி ஸ்ராப் அம்மணமா நிக்குறார்!அதை அப்படியே ஷெர்லாக் ஹோல்ம்ஸ் படத்தில் வரும் ஹான்ஸ் சிம்மரின் பின்னணி இசையை யுஅவனை வைத்து சுட்டு போடுறோம்(மக்கள் அதையும் ஒலக இசைன்னு சொல்வாங்க)
கவுண்டர்: டேய் நாராயணா இந்த ப்ளூ பிலிம் எடுக்க வேண்டியவநேல்லாம் தமிழ் சினிமாவுக்கு வந்து கொல்றானுங்க!

அடுத்து முருகதாஸ்

முருகதாஸ்: மொதல்ல கி.மு ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த காதி தர்மனை காட்றோம்.காதியின் மகத்துவத்தை ஊரெல்லாம் போய் சொல்றார்!கடைசியில் சிலுக்கு துணி வியாபாரிகள் அவருக்கு விஷம் கலந்த கஞ்சியை கொடுத்து கொன்னுடுறாங்க!
கவுண்டர்: ஐயோ இப்பவே தல சுத்துது!
முருகதாஸ்: தமிழ் படத்துல காதி தர்மன் தமிழன்.தெலுங்கு படத்தில் தெலுங்கன்.ஹிந்தி படத்தில் ஹிந்திகாரன்!ஆனால் தமிழ் நாட்டுல தமிழர் வரலாறு பாரீர்னு பொய் சொல்லி வியாபாரம் பண்ணுவோம்!
கவுண்டர்: நல்ல வேலை நீ காமாராஜர் பத்தி படம் எடுக்கல!அதுலயும் தமிழ் படத்தில் காமராஜ் தமிழர் தெலுங்கு படத்தில் தெலுங்கர்னு ஊரை ஏமாத்தியிருப்ப!
முருகதாஸ்: சரி வேறு ஒரு கதை சொல்றேன்.ஹீரோ Anorexia  nervosa  வந்து பத்து வருசமா பெட்ல கிடக்கார்!திடீர்னு கொலை செய்யப்பட்ட கதாநாயகி நியாபகம் வந்து வில்லனை கொல்றார்!ஹீரோவுக்கு சிக்ஸ் பேக்ஸ் காட்றோம்!
கவுண்டர்: யோவ பத்து  வருசமா படுத்து கெடந்தவனுக்கு எப்படியா சிக்ஸ் பேக்ஸ் இருக்கும்?
முருகதாஸ்:: அட நம்ம சனங்க முட்டாள் சார்!கஜினியில் தன்னை மறந்து இருந்தாலும் அவனுக்கு சிக்ஸ் பேக்ஸ் காட்டுனோம்!எவனும் இது எப்படி சாத்தியம்னு கேக்கலையே!
கவுண்டர்: அட்ரா அட்ரா!

அடுத்து சசிகுமார்:

கவுண்டர்: ஐயோ கரடி!
சசி: படம் பண்றோம்!முதல் காட்சியே சேவிங்பண்ணாதபுறம் நாலு பரதேசி தாடி வச்சிகினு சுத்துறானுங்க!அவனுங்களா கரடின்னு நெனச்சி சர்கஸ்ல புடிச்சிகிட்டு போகுது சர்கஸ் வெண்!அவர்களை மீட்கும் கதாநாயகன்!அது நான்தான்!
கவுண்டர்:ஏன் ஒன்னைய புடிக்கலியா?
சசி: நான் அப்போ ஓல பாய்க்குள்ள ஒளிஞ்சிருந்தேன்!
கவுண்டர்: ஆளா உட்ரா சாமி!

கவுண்டர் தலை தெறிக்க ஓடுகிறார்.வழியில் எஸ் ஜே சூர்யா நிலாவுக்கு டிங்கரிங் பார்த்து கொண்டிருக்கிறார்!பீதியடைந்து தொடர்ந்து ஓடி மறைகிறார்!

திங்கள், 14 நவம்பர், 2011

கழக கண்மணிகளின் "எங்கப்பன் குதிருக்குள் இல்லை"

ஸ்பெக்ட்ரம் ஊழலில் நட்டம "வெறும்" 2465 கோடி.கலைஞர் டிவியில் இதே விவாதம்தான்!எங்கப்பன் குதிருக்குள் இல்லை கதையா இருக்கு!முதலில் ஊழலே நடக்கவில்லைன்னு சொல்லிட்டு இப்போ "வெறும்" 2465 கோடி.என்கிறார்கள்!அப்போ ஊழல நடந்ததை ஒப்பு கொள்கின்றனரா  கழக கண்மணிகள்!மேலும் இந்த "வெறும்" 2465 கோடியாம்."வெறும்" என்றால் உங்கள் சொத்து மதிப்புக்கு அது "வெறும்" தான்!நீங்களே அதை கட்டிடலாமே? மேலும் இது முன்னாள் CAG அதிகாரி சொன்னது.எப்படி அரசாங்க பதிலாகும்?

வியாழன், 3 நவம்பர், 2011

இன்னும் என்னென்ன மாறப்போகுதோ?

சட்டமன்ற வளாகம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை,அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை என சென்ற ஆட்சியின் தடங்களை மாற்றுவதிலேயே அரசு தனது முழு சக்தியையும் விரையம் செய்கிறதோ என என்னும் அளவுக்கு தினம் ஒரு மாற்றம்.
சட்ட மன்ற வளாக மாற்றமாவது மக்களை அவ்வளவு பாதிக்காது.ஆனால் ஐந்து லட்சம் புத்தகங்கள்(அறிய பொக்கிஷம்னுதான் சொல்லணும்) கொண்ட ஆசியாவிலேயே ஒரு பெரிய நூலகத்தை மாற்றுவது என்பது மக்களுக்கு பெரும் இழப்புதான்.
இது குறித்து தனியார் தொலைகாட்சியில் விவாதம் நடந்தது.அதில் மக்கள் கருத்து தொளிபேசி மூலம் கேட்கப்பட்டது.பெரும்பாலான நேயர்கள் இதை எதிர்த்தனர்.இதை ஆதரித்தவர்கள் ஏன் அப்படி செய்தனர் என்றால் ஒரு செண்டிமெண்ட்!குழந்தைகள் நலம்!அவ்வளவுதான்!
தமிழ்நாட்டில் ஏற்கெனவே புத்தக வாசிப்பு ஊர் மெச்சும் அளவில்(!!!??) உள்ளது!இப்போது இது போன்ற நூலகங்கள் மக்களின் வாசிக்கும் பழக்கத்தை தூண்டக்கூடியவை.ஏற்கெனவே திராவிட அரசியலால் தமிழக மக்கள் சீரழிந்து புத்தக வாசிப்பே ஏதோ கிரிமினல் குத்தம் போலவும் தமிழ் எழுத்தாளர்கள் யார் என்றே தெரியாத நிலையிலும் தமிழே எழுத படிக்க வக்கில்லாதவர்கலாகவும்    உள்ளனர்!இப்போது இதையும் மாற்றி டி.பி.ஐ வளாகத்தில் இந்த ஐந்து லட்சம் புத்தகங்களை கொண்டு கொட்டி அடைப்பது(பின் வேறெப்படி இதை நான் சொல்ல?) கொஞ்ச நஞ்ச புத்தக வாசிப்பையும் இழுத்து மூடுவதுதான் அரசின் என்னமோ என ஐயமுற வைக்கிறது!
       நல்ல வேலை கருணாநிதி மழை நீர சேகரிப்பு திட்டம் கொண்டு வரவில்லை.அப்படி ஆகியிருந்தால் வீடு வீடாக ஜெ அனைத்து பைப்புகளையும் அறுக்கும் வேலையையும் செய்வாரோ என்ற பீதியை உண்டாக்குது!!என்னமோ நடக்குது!!மர்மமா இருக்குது!!நமக்கேன் வம்பு!

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

தமிழர்களின் முக்கிய கவலை: ஆரண்ய காண்டம் காப்பியாமே?

                  கடந்த சில மாதங்களாக ஆஹா ஆரண்ய காண்டம் போல ஒரு படம் ஒலக வரலாற்றிலேயே எடுக்கபட்டதில்லை!!ஒக்க மக்க எல்லார மூஞ்சியிலும் படத்தோட போஸ்டரை(அதில் எது  ஒட்டியிருந்தாலும்) தமிழ் சினிமாவை வசை பாடுபவனின் முகத்தில் தேய்க்க!!என்று படு "சாத்வீகமாக" மொக்கை படத்தை ஒலக சினிமா என கொண்டாடுவோர் சங்கம் அறிவுறுத்தியது!அதன்படி பலர் எங்கே தன முகத்தில் அந்த "எக்கச்சக்க" போஸ்டர்(அதில் எது  ஒட்டியிருந்தாலும்) தேய்க்கப்படும் என பயந்து ஆஹா அருமையான ஒலக சினிமா Eisenstein சமாதியில் இருந்து எழுந்து பாராட்டினார் என்கிறே ரேஞ்சுக்கு ஒரே அக்கப்போர்!இது நல்ல சினிமா இல்லைன்னு சொன்னா கொய்யால என்று அடிக்க வராத குறையாக எதிர்த்தோர் பலர்(ஆனாலும் இங்கு நான் படத்தை எதிர்த்து போட்டபோது அதை பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி :) ).
                இப்போ தமிழனுக்கு என்ன கவலைன்னா சிலர் இந்த ஆரண்ய காண்டம் ஏதோ ஒரு லத்தீன் அமெரிக்க சினிமாவின் உல்டா என கொளுத்திபோட ஐயோ வட போச்சே என வடிவேலு கணக்கா "வொய் ப்ளட்?சேம் ப்ளட்!!" என ஆறுதல் சொல்லிகினு திரியுறாங்க!!
               அதாவது இந்த படம் காப்பி அல்லது தழுவல்னா தமிழன் எல்லோரும் தலையை தொங்க போட்டுகனுமாம்!!ஆமா ஒன்றரை லட்சம் தமிழன் கொல்லப்பட்டான்!!ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவன் சாகடிக்கபட்டபோது, மூணு தமிழனை தூக்கு கயிற்றில் நிருத்தியுள்ளபோது தொங்காத  தமிழன் தலை இதுக்குதான் தொங்கனுமா?அட போங்கையா!!ஆரண்ய காண்டம் இல்லைன்னா அடுத்து ஒரு கிஷ்கிந்தா காண்டம் வராமலா போய்டும்?அப்போ அதை "இது வரை கண்டிராத ஒலக சினிமா" "தமிழ் சினிமாவை விமர்சிப்பவன் மூஞ்சியில பட போஸ்டர வச்சு தேய்!!" என்பது போன்ற ஆர்டர்களை அப்போ மீண்டும் கொடுக்கலாம்!!என்ன காதல்,வெயில்,பருத்தி வீரன்,சுப்ரமணியபுரம் இதெல்லாம் வரும்போது எல்லாரும் "இதான் ஒலக சினிமா இதுக்கு மேல எடுக்க ஒன்னியும் இல்ல" அப்படின்னு குத்தாட்டம் போடலியா?மனதை தளர விடாதீங்க!!ஒலக சினிமா என்கிற ரப்பர் ஸ்டாம்பை பத்திரமா வச்சிருங்க .அப்பப்ப வர படங்களுக்கு குத்திடுவோம்!!ஒலக சினிமா என சாப்பா குத்த சில  தகுதிகள் :
  • குளிக்காத பன்னாடைகள் இருக்கணும் 
  • சேவிங்  தவிர் (ரீசன்ட் ஆத்திச்சூடி)
  • அடிங்கோ....தா என்பது போன்ற மங்கள சொற்கள் வசனமாக நொடிக்கொருமுறை எல்லாராலும் சொள்ளப்படனும்.
  • ஒரு சிறுவன் அல்லது சிறுமி வயசுக்கு மீறி பெனாத்தனும்(அவர்களும் கெட்ட  வார்த்தை பேசினால் ஒலக சினிமா முத்திரை இன்னும் அழுத்தமாக குத்தப்படும்!!).
  • தவிர கக்கூஸ் போவது யூரின் போவது விபச்சாரி ரெட லைட் இதெல்லாம் காட்டினால் கூடுதல் மதிப்பெண்!!
  •  20Hz-2000Hz வரை பல்வேறு அலைவரிசைகளில் (frequency ) பேச வேண்டும்."யப்பா செத்த அவுரு தொண்டையில நீலகிரி தைலம் தேச்சு விட்டா தேவல" என்று சொல்ல வைக்க வேண்டும்!!
  • யாராவது ஒரு காட்சியிலாவது அம்மணமா நிக்கணும்!!ஆண்கள் நிப்பது இப்போதைய Trend.(ஒரு வேலை Gay club இல உள்ளவர்கள் இத்தகைய காட்சிகளை வைத்து தங்களின் "தாகத்தை" தனித்து கொள்கின்றனரோ?
  • சமீபத்தில் அவன் இவன் அம்மண சீன,ஜாக்கி ஷ்ராப் அம்மண சீன.பாவம் ஜாக்கி ஷ்ராப்  ஊர்மிளாவ வெறும் பனியனோடு ஓடவிட்டு ஆங்கிள் பாத்து ரசித்தவரை  இங்க கொண்டு வந்து இப்படி அசிங்கபடுத்திபுட்டேங்கலேடா!!செயங்கடா செய்ங்க!!

    திங்கள், 22 ஆகஸ்ட், 2011

    தமிழின விரோத "தி ஹிந்து" பத்திரிக்கையை மானமுள்ள தமிழர்கள் புறக்கணிப்பர்!!

       தி ஹிந்து பத்திரிகை போல ஒரு தமிழ் விரோத பத்திரிக்கை  ஆங்கிலத்தில் இல்லை!!ஆனா நம்மாளுங்க(குறிப்பா சென்னையில் இருப்போர்) அதை படிச்சாதான் டாய்லெட்டே வருது!! ரிட்டையர் ஆகி வீட்டில் மஞ்ச  பெயின்ட் அடிச்சி ஈசி சேரில்(நன்றி சுஜாதா) சாய்ந்து கொண்டு ஹிந்து படிக்காவிட்டால் அடுத்த கணமே நரகம் என்பது போல சீனியர் சிட்டிசன்கள் ஒருபுறம், இன்னொரு புறம் தமிழே தெரியாமல், தெரிந்தாலும் தெரியாத மாதிரி காட்டிக்கொண்டு இன்குலீசில் பேசும் பெண்கள் ஒருபுறம், மென்பொருள் அடிமைகள் மற்றொருபுறமென  ஹிந்துவை படிக்காவிட்டால் நாம் ஏதோ முட்டாள் என்பது போன்ற ஒரு  மாயையை உண்டாக்கி வைத்திருப்பது மானங்கெட்ட பொழப்பன்றி வேறென்ன?
                       ராஜபக்சே கையால் சிங்கள ரத்னா வாங்கிய தியாகி ஹிந்து ராம்!!அதெல்லாம் ஒரு பத்திரிக்கையா?ராஜபக்சேவின் பேட்டியை அடிக்கடி எப்படியாவது போட்டுவிடுவர்!!இரண்டு  வருடங்களுக்கு  முன் இந்த பத்திரிக்கையை படித்து கொண்டிருந்த பொது ராஜபக்சேவின் பேட்டி ஒரு முழு பக்க நீளத்துக்கு வந்திருந்தது!!அப்போது கிழித்து போட்டவன்தான்.இன்றுவரை நான் அந்த பத்திரிக்கையை  தொடுவது கூட இல்லை!! ராஜபக்சே பேட்டி மட்டுமல்ல சிங்கள ராணுவத்திற்கு விசுவாசமாக செய்தி போடுவதிலும் மேலும் ஈழ தமிழர்கள் அனைவரும் ஐந்து நட்சத்திர வசதிகளுடன் வாழ வைக்கப்பட்டுள்ளதாகவும் வாய் கூசாமல் பொய் சொல்லி கல்லா கட்டுவது இந்த பத்திரிக்கையின் பொழப்பு!!சுடுகாட்டில் அரசியல் செய்யும் பொழப்பு! மானமுள்ள சூடு சுரணையுள்ள தமிழர்கள் இதை செய்வார்கள் என்று நம்புகிறேன்!!

    திங்கள், 15 ஆகஸ்ட், 2011

    ஆரண்ய காண்டம் தமிழ் சினிமாவுக்கு கட்டப்பட்ட பாடை!!

                 தமிழ் சினிமா விமர்சனங்களை பார்த்தால் ஒன்று நன்றாக விளங்கும்.முதல் ரிவ்யூவை பொறுத்தே பின்னர் வரும் அனைத்து விமர்சனங்களும் அமைகிறது(அப்  கோர்ஸ் மாறுபட்டவிமர்சனங்களும் உண்டு).ஹிந்தி சினிமாவில் விமர்சனத்துக்கும் படத்தை மக்கள் ரசிப்பதற்குமான இடைவெளி முன்பெதுமில்லாது இப்போது மிக அதிகமாகிவிட்டது டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட பல பத்திரிக்கைகளிலும் விவாதிக்க பட்டது!!அதில் விமர்சனம் எழுதும் அறிவு ஜீவிகளின் ரசனை மக்களின் ரசனையை கருத்தில் கொள்ளாது இருப்பதாக சொல்லப்பட்டது!இன்ன பல காரணங்களும் உண்டு!
                 ஆனால் அதே விவாதங்கள் தமிழ் சினிமாவுக்கும் பாந்தமாக பொருந்துகிறது என்பதை உணர்த்திய படம் ஆரண்ய காண்டம்!ப்ளாகரில் எல்லாரும் ஆஹா ஓஹோ வென புகழ்ந்து தள்ளப்பட்ட படம்!சிலர் தமிழ் சினிமாவுக்கு மஞ்சள் நீராட்டு என ஓவராக விளித்தனர் !!!ஏய்யா பருத்தி வீரன் சுப்ரமணியபுரம் எல்லாம் வந்தபோதும் இதே தான சொன்னீங்க?எம்புட்டு தபா தமிழ் சினிமாவுக்கு மஞ்சள் நீர்?ஒருவேளை ovulation problem ஆ?எதுக்கும் ஒரு நல்ல Gynecologist கிட்ட தமிழ் சினிமாவ காட்டுங்க!!
                 படம் மொக்கையோ மொக்கை!!ஒவ்வொரு கதாபாத்திரமும் சாதாரண மனிதன் போல பேசுவதில்லைன்னு சபதம் செய்துதான் அட்வான்ஸ் மற்றும் கால்ஷீட் பேசியிருப்பாங்க போல!!சம்பத் மட்டுமே தனது அக்மார்க் குரலில் பேசுகிறார்(ரவி கிஷ்ணா கொரல பத்தி தனியா சொல்லனுமா?ஐயோ சாமி!!) மற்ற எல்லாரும் ஒன்னு அடி தொண்டையில் உறுமுகின்றனர் இல்லைன்னா கீச்சுன்னு கத்துறாங்க!
                வழக்கமான விஷயங்களை மாற்றி செய்தால் அதை உலகத்தரம் என்று சொல்ல சில சூடோ இன்டலெக்சுவல்கள்  (நன்றி ஆதவன்) வெறிகொண்டு அலைகிறார்கள்.அதென்ன உலகத்தரம் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு பண்பாடு கலாசாரம் மொழி இனம் அது இதுவென்று ஆயிரம் உள்ளது.இதில் எங்கு வருகிறது உலக தரம்?இதென்ன காரா?euro norm   barath  norm என்று சொல்ல?இசையை எடுத்து கொண்டால் அதென்ன உலக இசை?உலகத்தில் ஒவ்வொரு நாட்டின் இசை கருவியையும் ஒன்றாக இசைப்பதோ?இப்போது திரைப்படத்துக்கு வருவோம்!இதில் என்ன உலக தரம்?ஆஸ்கர் அமெரிக்காவின் அளவுகோல் கான்ஸ் ஐரோப்பிய நாடுகளின் சினிமாவை மையபடுத்தும் ஒன்று.உலக சினிமா எடுக்கிறேன் என்று ஏன் தமிழில் எடுத்து சாகடிக்கிரீர்கள்?சேகர் கபூர் போல ஆங்கிலத்தில் எந்த முயற்சியை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாமே?
            
              மற்ற நாட்டு படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு வியாதி என்னவெனில் ஒரு படம் பேரு வாங்குனா அதே போல அம்பது படம் வரும்!பருத்தி வீரன்(ஒரு சேவிங் பண்ண காசில்லாத குளிக்காத பன்னாடை அப்புறம் ஒரு தாவணி போட்ட பொண்ணு), சுப்ரமணியபுரம்(நாலு ஓதவாக்கரைகள் ஒரு தாவணி போட்ட பொண்ணு)   இப்படி எல்லா கருமாந்திரத்தையும் பாத்து சலிச்சு போச்சு!!இப்போ இதே ஆரண்ய காண்டத்தை போல அம்பது படம் எடுக்கப்படும்!!அப்போ இதே அறிவு ஜீவிகள் ஐயோ அம்மா ன்னு கூச்சல் போடுவார்(ஆமா நீங்க தூக்கி உடுறீங்க!!அனுபவிங்க!)
              படத்தின் முதல் காட்சியே மேட்டர் செய்வது.நான் என்னமோ அது கோஹினூர் காண்டம் விளம்பரம்னு நெனச்சுட்டேன்!!சிறு நீர் கழிப்பதையும்(இதற்கு முன்பே பல படங்களில்) காட்டி விட்டனர்!!அடுத்து மலம் போவதோ?சென்சார் அப்படின்னு ஒன்னு இருக்கா?இப்படி அருவருப்பான விஷயங்களை காட்டினாலே உடனே சில அறிவு கொழுந்துகள் ஆஹா ஓஹோ!!ன்னு சொல்வது இவர்கள் எத்தகைய அருவருப்பான மனதை உடையவர்கள் என்பது விளங்கும்!!இந்த அறிவு ஜீவிகளின் கக்கூசிலும் கேமரா வச்சி படமேடுக்கலாமே?!!
              மற்ற படி ஆரண்ய காண்டம் சரியான மொக்கை!!கெட்டவார்த்தை கேக்க நான் ஏன் படத்துக்கு போகணும்?கொழாயடிக்கு போனாலே போதுமே!!இப்படிதான் பொல்லாதவன் அப்படின்னு கொசு தனுசு நடிச்ச படம்  Bicycle Thieves படத்தின் அருவருப்பான பிரதி!ஏய்யா இந்த கொலை வெறி?வெற்றிமாறன் டுபுக்கு படத்தையும் எதிர்ப்பார்க்கும் சூடோ இண்டலெக்சுவல்கள் இங்கு உள்ளனர்!!ஐயோ ஐயோ!!
               அப்புறம் யுவன் சங்கர் ராஜா ஷெர்லாக் ஹோம்ஸ் படத்தின் ஹான்ஸ் சிம்மரின் இசையை வேறு சுட்டு ஆங்காங்கே பயன்படுத்துகிறார்!!இதான் உலக தரமோ?என்னவோ!!
               ஆனால் ஒன்று முடிவு செய்துவிட்டேன்.பட விமர்சனங்களை படித்து அதில் நல்லா இல்லை ன்னு சொன்னா ரொம்ப வசதியா போச்சு பாக்குற வேலை மிச்சம்!ஆஹா ஓஹோன்னா இனி பார்ப்பது பற்றி பரிசீலிக்கப்படும்!இந்த தெளிவை கொடுத்த விமர்சன அன்பர்களுக்கு நன்றியோ நன்றி!!உலக சினிமா உள்ளூர் சினிமா இந்த வேறுபாட்டை ஏற்று கொள்பவர்கள இலக்கியத்தில் மட்டும் தலித் இலக்கியம் பெண் இலக்கியம் ஆகிய வேறுபாட்டை நிராகரிப்பது ஏனோ?!!!என்னவோ பண்ணட்டும்  ஆளை விடுங்க.தமிழ் சினிம்மான்னாலே கடும் அலர்ஜி இருந்தது .இப்போது அது இன்னும் அதிகரித்து விட்டது!!
              அப்புறம் ஏதோ எல்லாரும் சொல்வதுக்கு மாற்று கருத்து சொல்வது நான் என்னமோ ஹிட்ஸ் வாங்க செய்ததாக நினைத்தால் எனக்கு கவலையில்லை!!இந்த ஹிட்ஸ்,இன்ட்லி,தமிழ்மணம்,பொறந்த நாளு நம்பர் ஒன ரேன்க் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையே இல்லை!!நான் நினைத்ததை சொல்லியிருக்கிறேன்.அம்புட்டுதேன்!


    வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

    கண்டிப்பாக படிக்க வேண்டியது!!

    http://allinall2010.blogspot.com/2011/08/blog-post_3567.html
    ************************************************

    திங்கள், 8 ஆகஸ்ட், 2011

    திமுக அல்லைகையான கவிஞர் -2

    முதல் பாகத்தில் போட்டிருந்த படமே முழு சாரம்சத்தையும் சொல்லிவிட்டாலும் இன்னும் சிலவற்றை சேர்க்க வேண்டியுள்ளது.
                        இவுரு முகநூலில் (அதான் Facebook) கணக்கு வைத்துள்ளார்.அதில் தினம் குறைந்தது மூன்று ஸ்டேடஸ் என்கிற பதிவை போடுவதுண்டு!அதில் என்ன சொல்வார் என்றால் திமுககாரர்கள் எல்லாரும் நாட்டுக்காக உழைத்து களைத்து உறங்கி கொண்டிருக்கும் வேளையில் அதிகாலையில் கைது என்பது ஒரு சித்ரவதை என திருவாய் மலர்ந்துள்ளார் கவிஞர்!
                                  இவருடைய பழக்கம் என்னவெனில் மேலே சொன்னதுபோல ஏதாவது திமுக ஜால்ரா பதிவை போட்டுவிடுவார்.அதற்கு வரும் பின்னூட்டங்களை பார்த்துகொண்டே வருவார்.யாரவது எதிர்ப்பாக (அதாவது உண்மையை) கருத்து சொல்லிவிட்டால் இவர் என்ன செய்ய வேண்டும்?அதற்கு மாற்று கருத்து இருந்தால் அதை சொல்லி தனது நிலையை விளக்க வேண்டும்.இதுதான் பதிவுக்கான நியாயமாக இருக்க முடியும்.ஆனால் கவிஞர் என்ன செய்வார் என்றால் "நான் போட்ட ஸ்டேடஸ் வெறும் Parody தான்.இதற்கு இவ்வளவு சீரியஸாக பின்னூட்டம் போடுபவர்களை பாத்தால் எனக்கு பயமாக உள்ளது(ஆமாய்யா உண்மைய சொன்னா பயமாத்தான் இருக்கும் பொய்யர்களுக்கு).இப்படி நீங்கள் செய்தால் நான் நிஜமகவுமே படு தீவிரமான பதிவுகளாக போட வேண்டி வரும் என மிரட்டும் பாணியில் சொல்லி பின்னூட்டத்திற்கு பதில் போடும் பொறுப்பிலிருந்து நழுவி விடுவார்!!(ஒ அப்போ நீங்க உயிர்மையில் எழுதும் தலையங்கங்களும் அதே போல சும்மானச்சிக்கா?சரி இது தெரியாம பல பேரு உங்க சும்மானச்சிக்கி புத்தகத்த வாங்கி வேறு படித்து கொண்டிருக்கின்றனர்!!ஐயோ ஐயோ!!பேசாம முரசொலிமை   அப்படின்னு மாத்திடுங்க சஞ்சிகையின்  பேர!!)
                இது எப்படி இருக்குதுன்னா வடிவேல் ஒரு நகைச்சுவையில் சொல்வது போல "நான் சொன்னது பூரா உண்மைன்னு நீங்க நம்பிட்டீங்க!ஐயோ ஐயோ".இதுபோல உள்ளது கவிஞரின் நிலை.அது சரி வடிவேலுவும் திமுகதானே!!
                 இம்மாத காலச்சுவடில் கண்ணன் கவிஞரின் அருமை பெருமைகளை பட்டியலிட்டுள்ளார்(கண்டிப்பாக படிங்க).அதில் சில:
      -கனிமொழியின் கணவர் அரவிந்தனின் முதலீட்டில்தான் கவிஞரின் அந்த பதிப்பகம் தொடங்கப்பட்டது(ஒ இப்போ புரியுது விசுவாசத்துக்கு காரணம என்னான்னு!!)
      -காலச்சுவடு கூட்டம் நடக்கும்போது அது நேரத்தில் நடக்கிறது என்பதை சில புல்லுருவிகள் மூலம் தெரிந்து கொண்டு அப்போது அந்த குழுவில் இருந்த கனிமொழிக்கு தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி கொண்டிருப்பாராம்!!ஆஹா என்னே கிறுக்கு புத்தி!!இன்னும் பல விஷயங்கள் ஆழமாக இம்மாத காலச்சுவடில் உள்ளது!
                Last but not least: அப்புறம் இவருக்கு வேண்டியவர்களுக்கு விருது கொடுக்க அவர்களை தொடர்ந்து இவரின் அல்லக்கையாக தக்கவைத்துக்கொள்ள இவர் கையாளும் முறை வெக்ககேடானது!சுஜாதா விருதாம்.உங்களுக்கு  வேண்டியவர்களை கவுரவிக்க ஏய்யா ஆண்டுதோறும் சுஜாதாவை சாகடிக்கிரீர்கள்?சுஜாதா  இருந்திருந்தால் "உனக்கு வேண்டியவர்களை தக்க வைத்துகொள்ள என்னை ஏன் வருடா வருடம் எக்ஸ்யூம் செய்கிறீர்கள்?" என கேட்டிருப்பார்!ஐயோ இதெல்லாம் ஒரு பொழப்பா?

    ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

    இந்தியா அடிமை நாடில்லையா?

            இந்தியா அமெரிக்காவின் அடிமை அமெரிக்காவின் மற்றுமொரு காலனி என்று கூறியபோது என்ன இப்படியெல்லாம் சொல்றீங்கன்னு கேட்டவர்களுக்கு இப்போது ஒரு கேள்வி.அமெரிக்கா திவால் ஆகும் தருணத்தில் (S&P இன் AAA லிருந்து AA+)   சீனா சரியான கேள்வியை(டாலர் குறித்து) அல்லது வெகுநாளாக அடக்கி வைக்கப்பட்ட பிரச்னையை எழுப்பியுள்ளது(சிலர் சீனா அமெரிக்காவின் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளதால் இந்த பிரச்சனை எழுப்புகிறது எனலாம்.எப்படியும் இந்த பிரச்சனை எழுப்ப தைரியம் வேண்டுமே!!அது இந்தியாவுக்கு உள்ளதா?இது கவலை அளிக்கிறது என முதலை கண்ணீர் வடித்துள்ளார் அமெரிக்காவின் துணை அரசின் மந்திரி பிரணாப் முகர்ஜி!!(சரி அப்போ வூட்டுக்கு போய் அழு.விலைவாசியையும் குறைக்க வக்கில்லை.என்னத்துக்குதான் நீ இருக்க?ஒம்புல்லை வேற அரசியலுக்கு கொண்டு வந்துட்ட!!ஒனக்கே ஒன்னும் தெரியல!!இதுல அவன் வேறயா?).
                    ஏற்கெனவே இந்தியா இரான் எரிவாயு குழாய் அமைக்க முயற்சித்த அப்போதைய எரிவாயு மந்திரிகளான மணிசங்கர் ஐயர் மற்றும் நட்வர் சிங் ஆகியோர் "அமெரிக்க விருப்பங்களுக்கு" எதிராக செயல்பட முயற்சித்ததால் அமெரிக்காவின் அழுத்தத்தின் பெயரிலேயே அந்த இரண்டு மந்திரிகளும் வேறு துறைக்கு மாற்றப்பட்டனர்(அதாவது ஓரம்கட்டப்பட்டனர்).இந்த ஒரு உதாரணமே இந்தியாவின் மந்திரிகளை தீர்மானிப்பது யார் இந்தியாவின் விருப்பங்களை முடிவு செய்வது யார் என விளங்கும்!
                       உலகத்தின் எல்லா வணிக பரிமாற்றங்களும் டாலர்களிலேயே  நடப்பது இரண்டாம் உலக போருக்கு  பின்னர் கட்டாயமாக்கப்பட்டது.அமெரிக்காதான் சுவர்க்கம்!!டாலர்தான் கடவுள் என்ற ஒரு மாயை அமெரிக்க ஆட்சியாளர்களால் உண்டாக்கப்பட்டது.பின்னர் பல பிரச்சனைகள் பொருளாதார வீழ்ச்சிகள் வந்தபோதும் இதே மாயை காப்பாற்றப்பட்டது!!ஆனால் இப்போ முகத்திரை கிழிந்து அமெரிக்கா மூழ்கும் நிலை!!என்ன செய்யபோகின்றனர் மன்மோகன் கோஷ்டி (மாண்டேக் சிங் உள்ளிட்டோர்)!!!அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி என்றாலே இந்தியாவிலும் வேலை இழப்புகள் இருக்கும்.இப்படி ஒருநிலைக்கு காரணம் 1991இல் கொண்டு வரப்பட்ட பொருளாதார கொள்கை காரணம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்!!தெரியாத வரை ஆள்வோருக்கு நல்லது!

    ஞாயிறு, 31 ஜூலை, 2011

    திமுக அல்லக்கையான கவிஞர்


    கனிமொழி புத்திரன் சாரி மனுஷ்ய புத்திரன்(அப்போ நாம எல்லாம் மிருக புத்திரன்களா?) டுபுக்குமை சஞ்சிகையில் கனிமொழிக்கு ஜால்ராவோ ஜால்ரா அடித்திருக்கிறார்.அது மட்டுமன்றி அவரை பற்றி எழுதிய மற்ற சஞ்சிகைகள் பத்திரிகைகள் எல்லாவற்றையும் இடித்திருக்கிறார்!!திமுக தலைமை இவுரு ஜால்ரா பாட்டு(அதுவும் இவுரு முகநூலில் அதான் Facebook இல முரசொலி ரேஞ்சுக்கு திமுக பல்லவி தினம் பாடி மொக்க பிளேடால ஆட்டை அறுக்கும் வேலை செய்து வருகிறார்) சகிக்கல தயவு செஞ்சி இவருக்கு ஒரு கவுன்சிலர் போஸ்டாவது கொடுத்துடுங்க!!நாங்களும் நிம்மதியா இருப்போம்!!

    புதன், 27 ஜூலை, 2011

    ஆட்சியாளர்களுக்கு வியாதியோ வியாதி!!

    (நன்றி தினமணி )

     (இது gif file அதனால் மேலே உள்ள படத்தை சொடுக்கி பார்க்கவும்.அப்போதுதான் animation தெரியும்!!)

    செவ்வாய், 26 ஜூலை, 2011

    கேஸ்ட்ரோவும், ஊழல பெருச்சாளியும்!!

    "History will absolve me,former minister quotes Castro"-ஆ ராசா நீதிமன்றத்தில் சொன்னது.நீயும் Castro வும் ஒண்ணா?அவுரு பல வருஷம் காட்டிலேயே அடிப்படை வசதி இல்லாமல் போராடியவர் நாட்டுக்காக!!நீ?ஊழல பண்ணி நாட்ட சொரண்டிபுட்டு பேச்ச பாரு!!அவுரு ஜெயில்ல எத்தனை சித்ரவதைகளை அனுபவித்தார் தெரியுமா?ஒனக்கு கொசு கடியே பெரிய சித்ரவதைதான்!!நாராயணா இந்த கொசு தொல்ல தாங்களா!!தெனம் ஒரு கத அளக்குறான்!!எங்க போய் முடிய போகுதோ!!

    ஞாயிறு, 24 ஜூலை, 2011

    மாமா என்ன தெரியலை?

    கல்மாடிக்கு ஞாபக மறதி நோயாம்!!அது சரி அவரிடம் போய்  "மாமா என்ன தெரியலை?நான்தான் கீழ்மாடி ஓங்களோட  பத்து பங்களாவ எனக்கு எழுதி தரதா சொன்னீங்க.எப்போ எழுதி குடுக்க போறீங்க?

    வியாழன், 21 ஜூலை, 2011

    இந்தியாவை சுற்றும் வல்லூறு!!

    ஹிலாரி கிளிண்டன் இங்கு வந்து என்னத்த கிழித்தார் என சிலர் கேட்கலாம்.ஆந்திர மாநிலத்தில் 1200   ஏக்கர் பரப்பளவில்ஒரு "முக்கிய புள்ளி" க்கு சொந்த மான இடத்தில் யுரேனியம் இருப்பதை கண்டுபிடித்தார்.ஆனால் நைசா அதை மறைத்துவிட்டார்!!அப்புறம் அது அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டது.ஆக இப்போது யுரேனியதுக்கு போட்ட அணுசக்தி ஒப்பந்தம் வேஸ்டு!!!இங்கே உள்ள யுரேநியமே போதுமானது.இதை அமெரிக்கா தெரிந்து கொண்டது.சின்ன வல்லூறு ஹிலாரி உடனே இங்க வந்து சீட்டுல துண்டை போடும் விதமாக இங்கு வந்து  போயுள்ளார்.அது தவிர இந்தியா தனது சந்தையை  இன்னும் அமெரிக்காவுக்கு நல்லா தொறந்து உடனுமாம்!!(இதென்னா ஏ படமா?)அப்போதான இன்னும் ஓட்டுக்கா  நாட்டை சுரண்ட  முடியும்!!!

              எல்லாத்துக்கும் மேலே அணு விபத்து இழப்பீடு சட்டத்தை இன்னும் நீர்த்து போக வைக்கனுமாம்.அப்போதான் அமெரிக்க பணம் கொழுத்த பண்ணிகள் நாட்டை சூறையாட முடியும்!!அமெரிக்க நிறுவனங்கள் அணு உலைகளுக்கான உபகரணங்களை வழங்கும்.அதன்மூலம் எதாவது அணு உலைகளில் விபத்து என்றால் இவர்கள் அதற்கு இந்திய அரசு நிர்ணயித்துள்ள 1000கோடி(முன்பு அது 500 கோடியாக இருந்து பின்னர் கடும் எதிர்ப்பினால் உயர்த்தப்பட்டது).ஆக இங்கு அணு உலை விபத்து ஏற்பட்டு பல லட்சம் மக்கள் இறந்தாலும் அமெரிக்க பண முதலைகள் அதற்கு ஒரு பைசா தரமாட்டார் என்பதையே ஹிலாரி கிளிண்டன் இங்கே சொல்லிவிட்டு போயுள்ளார்.இதை எதிர்க்க வக்கில்லாத அமெரிக்க அடிவருடி மன்மோகன் சிங் அரசு வழக்கம் போல இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு "ஆமாஞ்சாமி" போட்டிருக்கிறது.இதென்ன ஆச்சரியம்?ஏக்கெனவே டவ் கம்பெனி போபால் விஷ வாயு விபதுக்கே இன்னும் சரியான நீதியோ நிதியோ குடுக்கலியே!!மக்கள் அணு விபத்தில் செத்தால் அமெரிக்காவிலிருக்கும் ஒபாமா மற்றும் ஹிலாரி கூட்டத்துக்கு என்ன கவலை?தங்கள் பிள்ளைகளின் படத்தை காரிலோ அல்லது ஆபீசிலோ ஒட்டி வைத்து மகிழ்வர்(டிபிகல் ஹாலிவுட் கிளீஷே இது!!பிச்சைகாரன்  கக்கூசில் பிள்ளைகளின் போட்டோவை ஒட்டி வைத்து தடவுவான்.அமெரிக்க சனாதிபதி தனது மேஜையில் தன பிள்ளைகளின்  போட்டவை வைத்து தடவுவார்.ஆமா இதென்ன உலக சாதனியா?புள்ளை  பெக்குறது?தலைய வலிக்குது இந்த காட்சியை பார்த்து!!)

    புதன், 20 ஜூலை, 2011

    அரசின் புல்லரிக்க வைக்கும் கொள்ளுகை!!!

    பெட்ரோல் டீசல் கேஸ் மண்ணெண்ணெய் இதுக்கெல்லாம் உடனே விலையேற்றம் ஆனா கோடி கோடியா கொள்ளையடிக்கும் ஐபிஎல் லுக்கு வரி விதிக்க அரசு பரிசீளிக்குதாம்!!நாசமா போக!!மக்கள் செத்தாலும் கார்பரேட்டு கபோதிங்க வாழனும் அதான் அரசின் கொள்ளுகை

    திங்கள், 18 ஜூலை, 2011

    சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்துங்கள்

    சமசீர் கல்வியை அமல்படுத்த உயர்நீதி மன்றத்தின் ஆணையை கோடி வணக்கத்தோடு வரவேற்கிறேன்.இதை கருணாநிதி கல்வின்னு பாக்காமல் மேல்முறையீடு செய்து மேலும் மூக்குடைபட்டுகொள்ளாமல் இப்போதே அமல்படுத்துங்கள் சமசீர் கல்வியை!!இது ஜெயா அரசுக்கு குட்டு கருணாநிதிக்கு ஷொட்டுனெல்லாம் சொல்லி மேலும் அரசியல் படுத்தாமல் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனே அமல்படுத்தவேண்டும் சமச்சீர் கல்வியை.
           சமச்சீர் கல்வியை அமல்படுத்த மறுக்கும் தனியார் பள்ளிகள் மற்றும் நைசாக சி பி எஸ் இ ஆக மாற்ற முயலும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். மற்றும் பழைய பாடத்திட்ட  புத்தகத்துக்கென பல ஆயிரம் பிடுங்கிய காசை திரும்ப வழங்க அரசு உத்தரவிட வேண்டும்.இதை மறுக்கும் எந்த பள்ளியின்  அங்கீகாரத்தையும் அரசு  ரத்து செய்துவிடலாம்!
         பல ஆயிரம்  பள்ளி(கொள்ளை) கட்டணத்துக்கும்  அரசு ஒரு முற்றுபுள்ளி வைக்க இதுவே சரியான நேரம்.