புதன், 12 செப்டம்பர், 2012

ஏன் அணு உலை வேண்டாம்?சில காரணங்கள்

ஒரு சில ஊடகங்களும் காங்கிரசு கனவான்களும் கூறுவது என்னவெனில் கூடங்குளம் அணு உலை நிறுவபட்டுவிட்டால் தமிழகத்தில் இருபத்துநாலு மணி நேரமும் எல்லாரும் ஏசியை நிறுத்தாமல் ஓட்டும் அளவுக்கு மின்சாரம் கிடைக்குமாம்...
இந்த அணு உலையின் நிறுவு திறன் 1000MW.இவர்கள்(மேற்சொன்ன அறிவுஜீவிகள்) கூறுவது என்னவெனில் இந்த ஆயிரத்தில் நானூறு மெகாவாட் தமிழகத்துக்கு போனால் போகிறதென தருவார்களாம்...அதை வைத்து மின் பற்றாக்குறை என்ற வார்த்தையையே அகராதியில் இருந்து எடுத்து விடலாமாம்...சிப்பு வருது சிப்பு...
எந்த ஒரு மின் உற்பத்தி நிலையமும்(அணு அல்லது அனல்) அதன் முழு கொள்ளளவில் இயக்கப்படாது...உதாரணத்திற்கு நீங்கள் ஒரு டூ வீலர் வைத்துள்ளீர்கள்...அதில் அதிக பட்ச வேகம் நூறு kmph எனவைத்து கொள்வோம்.என்றாவது நாம் அதில் அதன் அதிகபட்ச வேகத்தில் செலுத்தியிருக்கிரோமா??செலுத்தினால் என்னாகும் என நமக்கு தெரியாதா?அதே நிலைதான் ஒரு அணு உலை அல்லது அனல் உற்பத்தி எநதிரதுக்கும் பொருந்தும்.
ஒரு வேளை ஆயிரம் மெகாவாட் திறனில் இயக்கினால் அதிகபட்ச வெப்பம் வெளிப்படும்.சிறு விபத்து வந்தால் கூட அதை தடுக்க முடியாமல் போகும்.அதனால் எப்போதும் அதிகபட்சம் 40-50% விழுக்காடு திறனில்தான் இயக்கப்படும்.அதாவது அதிகபட்சம் கிடைக்கபோவது 600MW.இதை ஒரு வாய் தண்ணீர் கூட தர மனமில்லாத  பக்கத்து மாநிலங்கள் பிய்த்து போட்டது போக அதிகபட்சம் ஒரு 250 MW கிடைக்க வாய்ப்புள்ளது.அதுக்குத்தான் இம்புட்டு ரகளையா?
சரி அந்த அணு கழிவுகளை என்ன செய்வர்?ம்ம...ஹ்ம்ம்...பேசப்படாது...கூடங்குளம் அணு உலை வந்தால் தமிழகம் மின்சாரத்தில் ஜொலிக்கும்...நீங்களே பார்க்கத்தானே போகிறீர்கள்?