புதன், 21 டிசம்பர், 2011

ஒலக சினிமா எடுக்க ஒன்று கூடிய தமிழ் இயக்குனர்கள்-பாகம் 2

சென்ற விவாதத்தின் தொடர்ச்சியாக இந்த பதிவு!தனிப்பட்ட முறையில் இதை எடுத்துகொண்டு டென்சன் ஆகிறவர்கள் ஒரு வேலியம் மாத்திரை போட்டுகொள்ளலாம்!இது ஜாலிக்கு!
************************************************************************************
இப்போது பங்கேற்பவர்கள் செல்வராகவன்,அமீர்,மணிரத்னம்,கமல் ...
*
முதலில் செல்வராகவன் வருகிறார்:
கவுண்டர்: யோவ் இது ராத்திரி நேரம் இப்போ என்னா கூலிங்க்ளாஸ்?
செல்வா:  அது வந்து....
செந்தில்: அண்ணே அவுரு கண்ணு ஏன்னே அப்படி இருக்கு?
கவுண்டர்: ஆமா தீபாவளி நேரத்துல சும்மா இருந்திருக்கணும்!எந்த பிகரு கிட்டையோ போய் ரூட்டு போட்டிருக்கார்!அவ பட்டாச கொளுத்தி கண்ணுல போட்டுட்டாளாம்!
செல்வா: பப்ளிக் பப்ளிக்!தொழில் ரகசியம் வெளியே சொல்லாதீங்க!
கவுண்டர்: சரிங்க்ணா நீ கண்டின்யூ
செல்வா: ஹீரோ தம்பி "பாடி பில்டர்" தனுசு!முப்பது நாள் சேவிங் பண்ணாம நடிக்கிறாரு!
கவுண்டர்: ஏன் ப்ளேடு வாங்க காசில்லையா?
செல்வா: இட்ஸ் பீலிங்க்ஸ் மேன்!"நான் சொன்னதும் வெயில் வந்துச்சா நான் சொல்லல மழை வந்துச்சா" அப்படின்னு பாடுறான்!
கவுண்டர் : ஏன் ஹீரோ வானிலை ஆய்வு மைய ப்யூனா?
செல்வா: எகதாளம் பேசாதீங்க சார்!
கவுண்டர்: நீ தப்புத்தாளம் போடாம இரு!கண்டின்யூ
செல்வா: ஹீரோயின் பச்சா பங்கொபாதயாய்!
கவுண்டர் : என்னா? பாத்தியா பாக்கலியா?
செல்வா: இது பேருய்யா!
கவுண்டர் : நா ஏதோ சரக்குன்னு நெனச்சேன்!சரி சொல்லு
செல்வா: ஹீரோ படுக்கையிலேயே உச்சா போகுறார் அப்புறம் he  farts!
கவுண்டர்: யப்பா கப்பு தாங்காம ஹீரோயின் ஓடி போயடுராளா?ஆஹா!நிச்சயமா ஆஸ்கர்  விருதே   கிடைக்கும்!ஓங்க தம்பி லுங்கிய தூக்கிக்கினு நடு ரோட்டில் ஆடியதுக்கே தேசிய விருது கெடச்சுதே!
கவுண்டர்: ஆஸ்கர் விருதுக்கு டயலாக் ரெடி பண்ணி வச்சிகுங்க!"எல்லா புகழும் இறைவனுக்கே !எல்லா ஏழு கோடி சம்பளமும் எனக்கே"
செல்வா: தமிழின் இரண்டாவது ஸ்பால்டன் படம் இது!
கவுண்டர்  :ஏன் மொத  படத்த தூக்கிட்டு ஓடிட்டாங்களா?
செல்வா: அப்படின்னு சொல்ல சொல்லி நாலு பேருக்கு துட்டு கொடுத்திருக்கேன்!
கவுண்டர் : அட்ரா அட்ரா!ஆமா உன்னோட எல்லா படத்துலயும் யாருன்னா ஒருத்தர் மென்டலா இருப்பாங்களே!இதுல யாரு?
செல்வா: ஹீரோ சுவத்த பாத்து டாய் டாய் டாய் நான்தான் ரிவிட்டு குமாரு! அப்படின்னு கத்துறாரு
கவுண்டர்: அப்புறமென்ன?சுவர் இடிஞ்சி உழுந்துடுதா?
செல்வா:  சும்மா இருங்க!தமிழில் இது ரெண்டாவது ஸ்பால்டன் பிலிம்!
கவுண்டர்: யோவ எத்தன தபா இதையே சொல்லுவா?அப்போ மொதல் பிலிம ஆயா தூக்கினு போயிடுச்சா?
செல்வா: வேறொரு கத இருக்கு!சோழ மன்னனை நர மாமிசம் தின்னும் ஜந்துவா காட்றோம்!
கவுண்டர்: ஏற்கெனவே தமிழனை எவனும் மதிக்க மாட்றான்!இதுல இப்படி நீ காட்டுனா எவண்டா மதிப்பான்?சரித்திரம் தெரியலைன்னா மூடிகிட்டு இருக்கணும்!
செல்வா: நீங்க மொதல்ல இருந்தே வெவகாரமா பேசிகினு இருக்கீங்க!டாய் கொக்கி குமாரு கவுண்டருக்கு ஒரு கொக்கிய போடறா!
கவுண்டர்: ஐயோ எஸ்கேப்!
*

அடுத்து கமல்

கமல்:அல்லா ஜானே அல்லா ...(பாடி கொண்டு வருகிறார்)
கவுண்டர்: என்ன மூக்கால பாடுறீங்க?மூக்கடைப்பா?
கமல்: மிஸ்டர் ஐ.ஜி.ஆர் மாறார் ஐ ஆம் சூர் யூ ஆர் அவேர் ஆப தி பவர் ஆப தி ஸ்டேட் ஒப் தி ......
கவுண்டர்: எங்கனா மனப்பாடம் பண்ணிட்டு வந்துட்டீங்களா?
கமல்: மறார் கமாண்டிங் ஏரியாவில் இருக்கும் கவுண்டரை மாத்துங்க!இல்லன்னா தேர் வில் பீ டூ மச் எக்ஸ்ப்ளோஷன்ஸ்  இன் த  சிட்டி!
கவுண்டர்: ஐயோ இதென்னடா வம்பா போச்சு!
கமல்: ஆர்னால்ட் ஸ்வாசனேகர் சொல்வதைத்தான் கவுதம புத்தரும் சொல்றார்!
கவுண்டர்: உங்க படம் பாக்க வேணாம்னா?
கமல்: வெல் ஆ என் அடுத்த படம் சாந்தரூபம்!படம் முழுக்க சாந்தமா இருப்பேன்!
கவுண்டர்: படம் முடியும்போது பாந்தமா எல்லாரும் வெளிய போகிடுவாங்க!
கமல்: இதைதான் ஆகாசம்பட்டு சேஷாசலம் சொன்னார்!தஸ்தயெவ்ஸ்கி சொல்வதும் இதைதான்!
கவுண்டர்: எதை?என்ன பேசுறீங்கன்னே ஒன்னும் வெளங்கல!
கமல்:(மைன்ட் வாய்சில்)புரியகூடாதுன்னுதானே இப்படி பேசுறேன்!..
வெல் எனக்கு இந்த "இஷ்" பெயர்களில் நம்பிக்கை இல்லை!அப்படி வைக்க கூடாது தமிழன்!
கவுண்டர்: நீங்க உங்க பெண்களுக்கு அக்ஷரா ஷ்ருதி அப்படின்னு வச்சிருக்கீங்களே?
கமல்:(மைன்ட் வாசியில்)எந்த பால் போட்டாலும் கோல்  போட்டுடுரானே!
வெல் உயிர் போகுற வேளையிலும் தமிழ்ல பேச மாட்டான் தமிழன்!
கவுண்டர்: உங்க பொண்ணே  இப்போதான் தமிழ் பேச கத்துகிட்டு இருக்காங்களாமே?
கவுண்டர்: சார் ஒரு சந்தேகம்!அன்பே சிவம் படத்துல உயிர் போற வேளையிலும் தமிழ் பேச மாட்டீங்களான்னு கேக்குறீங்க!ஆனா உன்னை போல் ஒருவன் படத்துல முக்கால்வாசி இன்குலீசுலதான் நீங்களும் மத்தவங்களும்  பேசிகிரீங்க!ஏன் இந்த சுயமுரண்?
கமல்: வெல் ஊருக்குதான் உபதேசம்!

கவுண்டர்: அது ஏன்  சார் எப்பவுமே இந்து மத கடவுள்களையும்  இந்துக்களின் நம்பிக்கையையுமே கலாசுரீங்க?ஒ உங்க தலிவர் பெரியார் வழி செலெக்டிவ் நாத்திகமா?
கமல்:(மைன்ட் வாய்சில்) மத்த மதங்களை விமர்சனம் பண்ணா டப்பா டான்ஸ் ஆடிடுமே!வெல் ஐ ஆம் கிரிடிசைசிங் ஒன்லி மெஜாரிட்டி ரிலிஜியன்!
கவுண்டர்: என்னய்யா சொல்லுற?எனக்கு துளு மொழி தெரியாது!
கமல்: பாம் வெச்சிருக்கேன்!ஒரு குப்பனோ சுப்பனோ இதை செய்ய முடியுமா மிஸ்டர்  மாரார்?
கவுண்டர்: ஆமா தமிழ் படத்துல மட்டும் மோகன்லாலே போலீசா வராரு(மலையாள படம் போல)ஆனால் தெலுங்கு படத்தில் ஏன் வெங்கடேஷ் வரார்?தமிழனுங்கதான் இளிச்சவாயன்னா?
கமல்: (மைன்ட் வாய்சில்) உஸ்ஸ்...இப்போ எப்படியாவது எஸ்கேப் ஆகிடனுமே!
திடீரென்று அபிராமி அபிராமி அபிராமி என கூரிகொண்டே சுத்ஹி சுத்தி வருகிறார்!
கவுண்டர்: ஐயோ ஆள உடுங்க!

*
அடுத்து மணிரத்னம்

மணிரத்னம்: வெல்...மை நெக்ஸ்ட் பிலிம் அபவுட்...
கவுண்டர்: என்னதான் சொல்ல வரீங்க?
மணிரத்னம்: நான்...அடுத்த...படம்...எடுக்குறேன்....
கவுண்டர்: அது ஏன் எப்போ பாத்தாலும் ஒத்த வார்த்தையில்  பதில் சொல்றீங்க?
மணிரத்னம்: ஏன்னா எனக்கு தெரிஞ்ச தமிழ் அவ்வளவுதான்!
கவுண்டர்: என்னென்னமோ உண்மையெல்லாம் இப்போ வெளிய வருதுடா சாமி!
மணிரத்னம்: பாகிஸ்தானில் ஹீரோ பனமரத்துபட்டியில் ஹீரோயின்!
கவுண்டர்: இவ கல்யாணம் ஆகி அங்க போறா!அதான?
மணிரத்னம்: வாவ் ஹவ் டூ யூ நோ?
கவுண்டர்: ஆமா இதே கதைதான் ரோஜா படத்துல!
மணிரத்னம்: சரிவேண்டாம் அடுத்த கதை...ஹீரோ... ஹீரோயின்... காதல்... கல்யாணம்... தாலி... ஆணியில் தொங்குது!
கவுண்டர்: ஹீரோயின் அடிபட்டு கோமா ஸ்டேஜில்!ஹீரோ வந்து உருகுறார்!
மணிரத்னம்: சரி..அடுத்த கதை புஷ்கர் ஈ பைபா தீவிரவாதம் பத்தி....
கவுண்டர்: ஒண்ணு காதல் இல்லன்னா தீவிரவாதம்!இது தவிர வேறு எதனா கதை எடுக்கமாட்டீங்களா?ஆள உடுங்க சாமி!
மணிரத்னம்: பொன்னியின் செல்வன் எடுக்கலாம்னு.......
கவுண்டர்: ஐயோ வேணவே  வேனாம்!இதுக்கு சுகாசினி வசனம் எழுத வச்சி கொல்லுரதுக்கு நீங்க படம் எடுக்காமலே இருப்பது பெட்டர்!ஒரு நல்ல காவியம் தப்பிச்சிது!கல்கியின் ஆத்மா வாழ்த்தும்!அப்புறம் என் உங்க படத்துல எல்லாரும் தண்ணியில் "ஏதோ" விட்டது போலவே பேசுபவன் காதிலேயே  விழாதபடி பேசுறாங்களோ?
மணிரத்னம்:(மைன்ட் வாய்சில்)ரொம்ப கேள்வி கேக்குறானே!இப்படி சமாளிப்போம்!மை வைப் சுகாசினி இஸ் கமிங் டு ஆன்சர் யூ!ப்ளீஸ் வெயிட்!
கவுண்டர்: அய்யய்யோ அவுங்களா?ஆள உடுங்க!
 
*
அடுத்து  அமீர் 

அமீர்: என்னா மாமா சவுக்கியமா?
கவுண்டர்: யோவ யாருடா மாமா?
அமீர்: என்னா மாமா இப்படி கோவிச்சிக்குற?
கவுண்டர்: நிறுத்து!டப்பா டான்ஸ் ஆடிடும்!
அமீர்: அடுத்த படம் பாலியஸ்டர் வீரன்!
கவுண்டர்: ஆமா பருத்தி வீரன் பெயர் காரணம் என்ன?பொட்ட காட்டுல நடக்கும் கதையில் எங்கயா  பருத்தி விளையுது?
அமீர்: அம்புட்டு புத்திசாலியா ரசிகன்?இல்ல சித்தப்பு!
கவுண்டர்: யோவ மொதல்ல மாமா இப்போ சித்தப்பாவா?இந்த கொடுமைய கேக்க ஆளே இல்லையா?
அமீர்: மொரடனா ஹீரோ திமிர் புடிச்ச தலைக்கு என்னையே வெக்காத ஹீரோயின்!க்ளைமாக்ஸ் வந்து நாளு பேரு சேர்ந்து....
கவுண்டர்: போதும் இதுக்கு மேல சென்சார் ஆகிடும்!
அமீர்:நடுவுல போட்ஸி  படத்த உல்டா பண்ணி போகி அப்படின்னு ஒரு படம் நான் ஹீரோ!
கவுண்டர்: க்ளைமாக்சுலஒன்னைய போகி நெருப்பில் போட்டு கொளுத்திடுரானுங்களா?
அமீர்: ஐயோ உட்டா நீங்க என்னைய கொளுத்திடுவீங்க போல!ஆள உடுங்க!


வெள்ளி, 18 நவம்பர், 2011

ஒலக சினிமா எடுக்க ஒன்றுகூடிய தமிழ் இயக்குனர்கள் (ஒரு கற்பனை)

ஒலக சினிமா ஒலக சினிமான்னு எங்கு திரும்பினும் இதே பேச்சு இதே விவாதம்!!வெயில் படம் வந்தப்போ அது ஒலக சினிமான்னாங்க!!பருத்தி வீரன் வர சொல்ல அதை ஒலக சினிமான்னாங்க!!ஒவ்வொரு முறை ஒரு படம் வரும்போதும் கொய்யால இதுக்கு மேல எவனும் படம் எடுக்க முடியாது!!ன்னு அளப்புறசத்தம் காதை கிழிக்குது!உண்மையாக ஒலக சினிமா எடுக்க தமிழ் இயக்குனர்கள் ஒன்று கூடினால் எப்படி இருக்கும்? என்ற கற்பனையின் விளைவே இந்த கட்டுரை!!யாரும் டன்சன் ஆக வேணாம்!!சும்மா ஜாலிக்கு!! ;)
************************************************************************************

இதில் பங்குபெறுவோர்:பாலா,மிஸ்கின்,தியாகராஜன் குமாரராஜா(யப்பா மூச்சு முட்டுது.இனி இவரை த்யாகு என அழைக்கிறேன்),அமீர்,கவுதம் மேனன்,பாலாஜி சக்திவேல்,விஜய்(இயக்குனர்),மணிரத்னம் ,முருகதாஸ் .அப்புறம் கொஞ்சம் கலகலப்புக்கு தலைவர் கவுண்டமணி ,எஸ் ஜே சூர்யா மற்றும் அப்பாவி ரசிகன் .யார் பெயராவது விட்டு போயிருந்தா தெய்வ குத்தம் ஆக கருதி நூறு தபா எஸ் ஜே சூர்யா சுறா படத்தை பார்ப்பார்! ;)


************************************************************************************
இடம்: ஏதோ ஒரு இடம்
எல்லா இயக்குனர்களும் ஆஜர்  கவுதம் மட்டும்  லேட்டாக வருகிறார்.
கவுதம்: சாரி ஐ ஆம் எ லிட்டில் லேட் ஐ வாஸ் பிசி
அப்பாவி ரசிகன்: இது ஓங்க பட வசனமோ?ஒன்னியும் புரியல சார்!!
கவுண்டமணி: உக்கும்...பர்மா பஜார்ல நாலு இன்குலீஸ் பட டி.வி.டி வாங்க போனதனால இவுரு லேட்டு!!எப்படி சமாளிக்குராறு..அடன்காப்பா!!
அப்பாவி: சரி வந்த வேலைய பாக்கலாமா?
(எல்லாரும் மண்டையை ஆட்டுகின்றனர்)

முதலில் மிஸ்கின்

மிஸ்கின்: இப்போ நாம எடுக்க போற படம் பகாஷி பகோடா இயக்கிய ஜப்பான் படம்!!முதல் காட்சியிலேயே நான் அம்மணமா ஒடுரேன்!!அப்புறம்....
கவுண்டமணி: அப்புறம் எண்ண எல்லாரும் தேட்டர உட்டு ஓடிடுராங்களா?
மிஸ்கின்: குறுக்க  பேசாதீங்க!!அப்படியே லாங் ஷாட்ல ஒரு மெண்டல் ஆஸ்பிடல் அதை விட்டுட்டு வெளிய ஓடி வரான் நம்ம ஹீரோ!!
கவுண்டர்: ஆமா நீயேஅப்படிதான் தப்பிச்சு வந்தா மாதிரி இருக்கு...யோவ இது நைட் டைம் இப்ப கூட கூலிங் கிளாஸ் தேவையா?
மிஸ்கின்: உச...ஒரு ப்லோவா சொல்லும்போது குறுக்க  பேசாதீங்க!!
கவுண்டர்: சரி நெடுக்க பேசவா?
மிஸ்கின்: நான் எழுந்து போய்டுவேன்!!கொஞ்சம் அமைதியா இருங்க!!அப்படியே லாங் ஷாட் க்லோசப்பாமாறுது! முகத்தில் வியர்வையுடன் அம்மணமாக ஓடும ஹீரோ!!தூரத்தில் சைரன் ஒலி!ஹாஸ்பிடல் வேன்  துரத்துது!
கவுண்டர்: அப்புறமென்ன அவன் வேன்ல ஏறி போய்டுரானா?
மிஸ்கின் : இந்த காட்சியில் நான் நடித்ததை பார்த்தி ரெண்டு பெண் உதவி இயக்குனர்கள் ஓடி வந்து கட்டி பிடித்துக்கொண்டனர்!!
கவுண்டர்: இது சென்சர்ல போய்டும்!!ஆள உடு!!

அடுத்து பாலா

பாலா: முதல் காட்சியில் செம்பட்டை தலையுடன் ஒரு காக்கா

கவுண்டர் :அடங்கப்பா மனுசனுக்குதான் பழுப்பு டை காக்காவுக்குமா?அட்ரா அட்ரா!!
பாலா: அப்படியே சூம் அவுட் பண்ணா பனை மாற உச்சியில் நமது கதை நாயகன்

கவுண்டர் : கள்ளு திருடுரானா?
பாலா: சும்மா இருங்க!!அப்படியே தலை கீழா பர பரன்னுஉடும்பு மாதிரி கீழ இறந்குரான்!அவனுக்கு ஒரு கண்ணு இல்லை!!ஒரு காது கேக்காது ஒரு...
கவுண்டர் : அடங்கப்பா இன்னும் என்னென்ன கோளாறோ!!அவன் ஹீரோ இல்ல சீரோ!!
பாலா: சும்மா கிண்டல் பண்ணாதீங்க!!அப்படியே இரங்கி வந்ததும் தூரத்தில் ஒரு குரல் பாத்தா ரெண்டாவது ஹீரோ மொட்டை தலையோட அண்டர்வேருடன் ஓடி வரான்!
கவுண்டர்: ஐயோ எனக்கு பயமா இருக்கு
பாலா: நடுவுல ஒரு செம அழகான ஐயர பொண்ணு ரெண்டு போரையும் மாறி மாறி லவ் பண்ணுது!!அவள்கல்லூரிக்கு கொண்டு போகும் தயிர் சாதத்தை யார் சாப்பிடுவதுன்னு ரெண்டு ஹீரோவுக்கும் செம போட்டி.அடிதடியா மாறுது!!இவன் கொரவலைய அவன் கடிக்க அவன் .......
கவுண்டர் : ஐயோ உடுங்க சாமி!!


அடுத்து தங்கர் பச்சான்
தங்கர்: கதை நாயகிங்க தனது பேருக்கு பின்னால் உள்ள சாதிப்பெயர்களை துறக்க வேண்டும்!!
கவுண்டர்: அப்போஉங்க பேர்ல உள்ள பச்சான் என்னாங்கோ?

தங்கர்: போயா...கூ...முட்ட!!தமிழனுக்கு சூடு சொரணை இல்லை!!எங்க அய்யா பெரியார் ஒரு கன்னடரு அவரை தமிழர் தலைவனா ஏத்துகிட்டான் முட்டாள் தமிழன்!
கவுண்டர்: இப்போ என்னதாய்யா வேணும் உமக்கு?
தங்கர்: எனது கதை நாயகன் அம்பது வயசுக்காரன்!!கோவணம் மட்டுமே கட்டுவான்!!மேக்கப் இல்லை .கதை நாயகி அதான் அவ பொஞ்சாதி கீச்சு கொரலில் பேசுவார்!!
கவுண்டர் :ஆக மொத்தம் யாரும் சரியில்ல!!சரி உடுங்க!!


அடுத்து வெற்றி மாறன

வெற்றி மாறன: திச இஸ் தி ஏன்டா ஆப சாலமன் கரண்டி
கவுண்டர்: சரி உடு..நீங ரெபிடக்ஸ் இன்குலீஸ் கோர்ஸ் போறன்னு தெரியுது!!
வெற்றி: அடுத்து ட்ரைசைக்கிள தீவ்ஸ் என்கிற படத்தை சுட்டு குளிக்காதவன் அப்படின்னு ஒரு படம் எடுக்குறேன்!!

கவுண்டர்: இப்பவே கப்பு  தாங்கள!!
வெற்றி: கொசு சாரி தனுசு தான் ஹீரோ.பல வருசமா குளிக்காமலே இருக்காரு  .அவனோட அப்பா ஏண்டா நாயே குளிடா அப்படின்னு சொல்லியும் "குளிச்சு பாத்தேன் குளிக்க முடியல:" ன்னு பாடுறான் ஹீரோ!!
கவுண்டர் :இதென்ன சோப்பு விளம்பரமா?
வெற்றி: டோன்ட்  இன்டர்பியர்

கவுண்டர்: ஆ ஊன்னா இத சொல்லிடு!!
வெற்றி: பழைய நடிகை பஞ்சு அண்ணி கேரக்டர் தன கைக்குழந்தைக்கு பீ தொடச்சி விடும்  காட்சி உண்டு 
கவுண்டர்: அடங்கப்பா ஆள உடுரா சாமி!!

அடுத்து  கவுதம் மேனன்!!

கவுண்டர் : வாங்க.ஒ உங்களுக்கு தமிழ் புடிக்காதில்லை!!ஓகே கம யா!!
கவுதம்: கமிங் யா!!மை பிலிம் இஸ் அபவுட் டூ லவர்ஸ்.துண்டை தாண்டி வருவாயா!!
கவுண்டர்: ஏன் ஹீரோ பஞ்சாயத்து தலைவரா?
கவுதம்: வாட்ஸ் பஞ்சோத் வாட்ஸ் தட்?
கவுண்டர்: உக்கும்...சென்னைய உட்டு வெளிய போனாதான அதெல்லாம் கண்ணுக்கு தெரியும்!!
கவுதம்: வாட் கம எகெய்ன்!!
கவுண்டர்: ஒண்ணுமில்ல!!நீ சொல்லு!!
கவுதம்: மை ஹீரோ மெகானிகல் கிராஜுவேட்!இயக்குனர் சான்சுக்கு அலையுறான்!!
கவுண்டர்: பர்மா பஜார் போன நெறைய வெளிநாட்டு படங்கள் கெடைக்குது அதை காப்பியடிச்சு எடுக்கலாமே?
கவுதம்:(மைன்ட் வாய்ஸ் )நாம காப்பியடிப்பது இவனுக்கு எப்படி தெரியும்?பீ கேர்புல் நா என்னை  சொன்னேன்!!

 அடுத்து தியாகராஜன் குமாரராஜா அலையஸ் தியாகு 

 தியாகு: முதல் சீனே பாக்கி ஸ்ராப் அம்மணமா நிக்குறார்!அதை அப்படியே ஷெர்லாக் ஹோல்ம்ஸ் படத்தில் வரும் ஹான்ஸ் சிம்மரின் பின்னணி இசையை யுஅவனை வைத்து சுட்டு போடுறோம்(மக்கள் அதையும் ஒலக இசைன்னு சொல்வாங்க)
கவுண்டர்: டேய் நாராயணா இந்த ப்ளூ பிலிம் எடுக்க வேண்டியவநேல்லாம் தமிழ் சினிமாவுக்கு வந்து கொல்றானுங்க!

அடுத்து முருகதாஸ்

முருகதாஸ்: மொதல்ல கி.மு ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த காதி தர்மனை காட்றோம்.காதியின் மகத்துவத்தை ஊரெல்லாம் போய் சொல்றார்!கடைசியில் சிலுக்கு துணி வியாபாரிகள் அவருக்கு விஷம் கலந்த கஞ்சியை கொடுத்து கொன்னுடுறாங்க!
கவுண்டர்: ஐயோ இப்பவே தல சுத்துது!
முருகதாஸ்: தமிழ் படத்துல காதி தர்மன் தமிழன்.தெலுங்கு படத்தில் தெலுங்கன்.ஹிந்தி படத்தில் ஹிந்திகாரன்!ஆனால் தமிழ் நாட்டுல தமிழர் வரலாறு பாரீர்னு பொய் சொல்லி வியாபாரம் பண்ணுவோம்!
கவுண்டர்: நல்ல வேலை நீ காமாராஜர் பத்தி படம் எடுக்கல!அதுலயும் தமிழ் படத்தில் காமராஜ் தமிழர் தெலுங்கு படத்தில் தெலுங்கர்னு ஊரை ஏமாத்தியிருப்ப!
முருகதாஸ்: சரி வேறு ஒரு கதை சொல்றேன்.ஹீரோ Anorexia  nervosa  வந்து பத்து வருசமா பெட்ல கிடக்கார்!திடீர்னு கொலை செய்யப்பட்ட கதாநாயகி நியாபகம் வந்து வில்லனை கொல்றார்!ஹீரோவுக்கு சிக்ஸ் பேக்ஸ் காட்றோம்!
கவுண்டர்: யோவ பத்து  வருசமா படுத்து கெடந்தவனுக்கு எப்படியா சிக்ஸ் பேக்ஸ் இருக்கும்?
முருகதாஸ்:: அட நம்ம சனங்க முட்டாள் சார்!கஜினியில் தன்னை மறந்து இருந்தாலும் அவனுக்கு சிக்ஸ் பேக்ஸ் காட்டுனோம்!எவனும் இது எப்படி சாத்தியம்னு கேக்கலையே!
கவுண்டர்: அட்ரா அட்ரா!

அடுத்து சசிகுமார்:

கவுண்டர்: ஐயோ கரடி!
சசி: படம் பண்றோம்!முதல் காட்சியே சேவிங்பண்ணாதபுறம் நாலு பரதேசி தாடி வச்சிகினு சுத்துறானுங்க!அவனுங்களா கரடின்னு நெனச்சி சர்கஸ்ல புடிச்சிகிட்டு போகுது சர்கஸ் வெண்!அவர்களை மீட்கும் கதாநாயகன்!அது நான்தான்!
கவுண்டர்:ஏன் ஒன்னைய புடிக்கலியா?
சசி: நான் அப்போ ஓல பாய்க்குள்ள ஒளிஞ்சிருந்தேன்!
கவுண்டர்: ஆளா உட்ரா சாமி!

கவுண்டர் தலை தெறிக்க ஓடுகிறார்.வழியில் எஸ் ஜே சூர்யா நிலாவுக்கு டிங்கரிங் பார்த்து கொண்டிருக்கிறார்!பீதியடைந்து தொடர்ந்து ஓடி மறைகிறார்!

திங்கள், 14 நவம்பர், 2011

கழக கண்மணிகளின் "எங்கப்பன் குதிருக்குள் இல்லை"

ஸ்பெக்ட்ரம் ஊழலில் நட்டம "வெறும்" 2465 கோடி.கலைஞர் டிவியில் இதே விவாதம்தான்!எங்கப்பன் குதிருக்குள் இல்லை கதையா இருக்கு!முதலில் ஊழலே நடக்கவில்லைன்னு சொல்லிட்டு இப்போ "வெறும்" 2465 கோடி.என்கிறார்கள்!அப்போ ஊழல நடந்ததை ஒப்பு கொள்கின்றனரா  கழக கண்மணிகள்!மேலும் இந்த "வெறும்" 2465 கோடியாம்."வெறும்" என்றால் உங்கள் சொத்து மதிப்புக்கு அது "வெறும்" தான்!நீங்களே அதை கட்டிடலாமே? மேலும் இது முன்னாள் CAG அதிகாரி சொன்னது.எப்படி அரசாங்க பதிலாகும்?

வியாழன், 3 நவம்பர், 2011

இன்னும் என்னென்ன மாறப்போகுதோ?

சட்டமன்ற வளாகம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை,அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை என சென்ற ஆட்சியின் தடங்களை மாற்றுவதிலேயே அரசு தனது முழு சக்தியையும் விரையம் செய்கிறதோ என என்னும் அளவுக்கு தினம் ஒரு மாற்றம்.
சட்ட மன்ற வளாக மாற்றமாவது மக்களை அவ்வளவு பாதிக்காது.ஆனால் ஐந்து லட்சம் புத்தகங்கள்(அறிய பொக்கிஷம்னுதான் சொல்லணும்) கொண்ட ஆசியாவிலேயே ஒரு பெரிய நூலகத்தை மாற்றுவது என்பது மக்களுக்கு பெரும் இழப்புதான்.
இது குறித்து தனியார் தொலைகாட்சியில் விவாதம் நடந்தது.அதில் மக்கள் கருத்து தொளிபேசி மூலம் கேட்கப்பட்டது.பெரும்பாலான நேயர்கள் இதை எதிர்த்தனர்.இதை ஆதரித்தவர்கள் ஏன் அப்படி செய்தனர் என்றால் ஒரு செண்டிமெண்ட்!குழந்தைகள் நலம்!அவ்வளவுதான்!
தமிழ்நாட்டில் ஏற்கெனவே புத்தக வாசிப்பு ஊர் மெச்சும் அளவில்(!!!??) உள்ளது!இப்போது இது போன்ற நூலகங்கள் மக்களின் வாசிக்கும் பழக்கத்தை தூண்டக்கூடியவை.ஏற்கெனவே திராவிட அரசியலால் தமிழக மக்கள் சீரழிந்து புத்தக வாசிப்பே ஏதோ கிரிமினல் குத்தம் போலவும் தமிழ் எழுத்தாளர்கள் யார் என்றே தெரியாத நிலையிலும் தமிழே எழுத படிக்க வக்கில்லாதவர்கலாகவும்    உள்ளனர்!இப்போது இதையும் மாற்றி டி.பி.ஐ வளாகத்தில் இந்த ஐந்து லட்சம் புத்தகங்களை கொண்டு கொட்டி அடைப்பது(பின் வேறெப்படி இதை நான் சொல்ல?) கொஞ்ச நஞ்ச புத்தக வாசிப்பையும் இழுத்து மூடுவதுதான் அரசின் என்னமோ என ஐயமுற வைக்கிறது!
       நல்ல வேலை கருணாநிதி மழை நீர சேகரிப்பு திட்டம் கொண்டு வரவில்லை.அப்படி ஆகியிருந்தால் வீடு வீடாக ஜெ அனைத்து பைப்புகளையும் அறுக்கும் வேலையையும் செய்வாரோ என்ற பீதியை உண்டாக்குது!!என்னமோ நடக்குது!!மர்மமா இருக்குது!!நமக்கேன் வம்பு!

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

தமிழர்களின் முக்கிய கவலை: ஆரண்ய காண்டம் காப்பியாமே?

                  கடந்த சில மாதங்களாக ஆஹா ஆரண்ய காண்டம் போல ஒரு படம் ஒலக வரலாற்றிலேயே எடுக்கபட்டதில்லை!!ஒக்க மக்க எல்லார மூஞ்சியிலும் படத்தோட போஸ்டரை(அதில் எது  ஒட்டியிருந்தாலும்) தமிழ் சினிமாவை வசை பாடுபவனின் முகத்தில் தேய்க்க!!என்று படு "சாத்வீகமாக" மொக்கை படத்தை ஒலக சினிமா என கொண்டாடுவோர் சங்கம் அறிவுறுத்தியது!அதன்படி பலர் எங்கே தன முகத்தில் அந்த "எக்கச்சக்க" போஸ்டர்(அதில் எது  ஒட்டியிருந்தாலும்) தேய்க்கப்படும் என பயந்து ஆஹா அருமையான ஒலக சினிமா Eisenstein சமாதியில் இருந்து எழுந்து பாராட்டினார் என்கிறே ரேஞ்சுக்கு ஒரே அக்கப்போர்!இது நல்ல சினிமா இல்லைன்னு சொன்னா கொய்யால என்று அடிக்க வராத குறையாக எதிர்த்தோர் பலர்(ஆனாலும் இங்கு நான் படத்தை எதிர்த்து போட்டபோது அதை பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி :) ).
                இப்போ தமிழனுக்கு என்ன கவலைன்னா சிலர் இந்த ஆரண்ய காண்டம் ஏதோ ஒரு லத்தீன் அமெரிக்க சினிமாவின் உல்டா என கொளுத்திபோட ஐயோ வட போச்சே என வடிவேலு கணக்கா "வொய் ப்ளட்?சேம் ப்ளட்!!" என ஆறுதல் சொல்லிகினு திரியுறாங்க!!
               அதாவது இந்த படம் காப்பி அல்லது தழுவல்னா தமிழன் எல்லோரும் தலையை தொங்க போட்டுகனுமாம்!!ஆமா ஒன்றரை லட்சம் தமிழன் கொல்லப்பட்டான்!!ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவன் சாகடிக்கபட்டபோது, மூணு தமிழனை தூக்கு கயிற்றில் நிருத்தியுள்ளபோது தொங்காத  தமிழன் தலை இதுக்குதான் தொங்கனுமா?அட போங்கையா!!ஆரண்ய காண்டம் இல்லைன்னா அடுத்து ஒரு கிஷ்கிந்தா காண்டம் வராமலா போய்டும்?அப்போ அதை "இது வரை கண்டிராத ஒலக சினிமா" "தமிழ் சினிமாவை விமர்சிப்பவன் மூஞ்சியில பட போஸ்டர வச்சு தேய்!!" என்பது போன்ற ஆர்டர்களை அப்போ மீண்டும் கொடுக்கலாம்!!என்ன காதல்,வெயில்,பருத்தி வீரன்,சுப்ரமணியபுரம் இதெல்லாம் வரும்போது எல்லாரும் "இதான் ஒலக சினிமா இதுக்கு மேல எடுக்க ஒன்னியும் இல்ல" அப்படின்னு குத்தாட்டம் போடலியா?மனதை தளர விடாதீங்க!!ஒலக சினிமா என்கிற ரப்பர் ஸ்டாம்பை பத்திரமா வச்சிருங்க .அப்பப்ப வர படங்களுக்கு குத்திடுவோம்!!ஒலக சினிமா என சாப்பா குத்த சில  தகுதிகள் :
  • குளிக்காத பன்னாடைகள் இருக்கணும் 
  • சேவிங்  தவிர் (ரீசன்ட் ஆத்திச்சூடி)
  • அடிங்கோ....தா என்பது போன்ற மங்கள சொற்கள் வசனமாக நொடிக்கொருமுறை எல்லாராலும் சொள்ளப்படனும்.
  • ஒரு சிறுவன் அல்லது சிறுமி வயசுக்கு மீறி பெனாத்தனும்(அவர்களும் கெட்ட  வார்த்தை பேசினால் ஒலக சினிமா முத்திரை இன்னும் அழுத்தமாக குத்தப்படும்!!).
  • தவிர கக்கூஸ் போவது யூரின் போவது விபச்சாரி ரெட லைட் இதெல்லாம் காட்டினால் கூடுதல் மதிப்பெண்!!
  •  20Hz-2000Hz வரை பல்வேறு அலைவரிசைகளில் (frequency ) பேச வேண்டும்."யப்பா செத்த அவுரு தொண்டையில நீலகிரி தைலம் தேச்சு விட்டா தேவல" என்று சொல்ல வைக்க வேண்டும்!!
  • யாராவது ஒரு காட்சியிலாவது அம்மணமா நிக்கணும்!!ஆண்கள் நிப்பது இப்போதைய Trend.(ஒரு வேலை Gay club இல உள்ளவர்கள் இத்தகைய காட்சிகளை வைத்து தங்களின் "தாகத்தை" தனித்து கொள்கின்றனரோ?
  • சமீபத்தில் அவன் இவன் அம்மண சீன,ஜாக்கி ஷ்ராப் அம்மண சீன.பாவம் ஜாக்கி ஷ்ராப்  ஊர்மிளாவ வெறும் பனியனோடு ஓடவிட்டு ஆங்கிள் பாத்து ரசித்தவரை  இங்க கொண்டு வந்து இப்படி அசிங்கபடுத்திபுட்டேங்கலேடா!!செயங்கடா செய்ங்க!!

    திங்கள், 22 ஆகஸ்ட், 2011

    தமிழின விரோத "தி ஹிந்து" பத்திரிக்கையை மானமுள்ள தமிழர்கள் புறக்கணிப்பர்!!

       தி ஹிந்து பத்திரிகை போல ஒரு தமிழ் விரோத பத்திரிக்கை  ஆங்கிலத்தில் இல்லை!!ஆனா நம்மாளுங்க(குறிப்பா சென்னையில் இருப்போர்) அதை படிச்சாதான் டாய்லெட்டே வருது!! ரிட்டையர் ஆகி வீட்டில் மஞ்ச  பெயின்ட் அடிச்சி ஈசி சேரில்(நன்றி சுஜாதா) சாய்ந்து கொண்டு ஹிந்து படிக்காவிட்டால் அடுத்த கணமே நரகம் என்பது போல சீனியர் சிட்டிசன்கள் ஒருபுறம், இன்னொரு புறம் தமிழே தெரியாமல், தெரிந்தாலும் தெரியாத மாதிரி காட்டிக்கொண்டு இன்குலீசில் பேசும் பெண்கள் ஒருபுறம், மென்பொருள் அடிமைகள் மற்றொருபுறமென  ஹிந்துவை படிக்காவிட்டால் நாம் ஏதோ முட்டாள் என்பது போன்ற ஒரு  மாயையை உண்டாக்கி வைத்திருப்பது மானங்கெட்ட பொழப்பன்றி வேறென்ன?
                       ராஜபக்சே கையால் சிங்கள ரத்னா வாங்கிய தியாகி ஹிந்து ராம்!!அதெல்லாம் ஒரு பத்திரிக்கையா?ராஜபக்சேவின் பேட்டியை அடிக்கடி எப்படியாவது போட்டுவிடுவர்!!இரண்டு  வருடங்களுக்கு  முன் இந்த பத்திரிக்கையை படித்து கொண்டிருந்த பொது ராஜபக்சேவின் பேட்டி ஒரு முழு பக்க நீளத்துக்கு வந்திருந்தது!!அப்போது கிழித்து போட்டவன்தான்.இன்றுவரை நான் அந்த பத்திரிக்கையை  தொடுவது கூட இல்லை!! ராஜபக்சே பேட்டி மட்டுமல்ல சிங்கள ராணுவத்திற்கு விசுவாசமாக செய்தி போடுவதிலும் மேலும் ஈழ தமிழர்கள் அனைவரும் ஐந்து நட்சத்திர வசதிகளுடன் வாழ வைக்கப்பட்டுள்ளதாகவும் வாய் கூசாமல் பொய் சொல்லி கல்லா கட்டுவது இந்த பத்திரிக்கையின் பொழப்பு!!சுடுகாட்டில் அரசியல் செய்யும் பொழப்பு! மானமுள்ள சூடு சுரணையுள்ள தமிழர்கள் இதை செய்வார்கள் என்று நம்புகிறேன்!!

    திங்கள், 15 ஆகஸ்ட், 2011

    ஆரண்ய காண்டம் தமிழ் சினிமாவுக்கு கட்டப்பட்ட பாடை!!

                 தமிழ் சினிமா விமர்சனங்களை பார்த்தால் ஒன்று நன்றாக விளங்கும்.முதல் ரிவ்யூவை பொறுத்தே பின்னர் வரும் அனைத்து விமர்சனங்களும் அமைகிறது(அப்  கோர்ஸ் மாறுபட்டவிமர்சனங்களும் உண்டு).ஹிந்தி சினிமாவில் விமர்சனத்துக்கும் படத்தை மக்கள் ரசிப்பதற்குமான இடைவெளி முன்பெதுமில்லாது இப்போது மிக அதிகமாகிவிட்டது டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட பல பத்திரிக்கைகளிலும் விவாதிக்க பட்டது!!அதில் விமர்சனம் எழுதும் அறிவு ஜீவிகளின் ரசனை மக்களின் ரசனையை கருத்தில் கொள்ளாது இருப்பதாக சொல்லப்பட்டது!இன்ன பல காரணங்களும் உண்டு!
                 ஆனால் அதே விவாதங்கள் தமிழ் சினிமாவுக்கும் பாந்தமாக பொருந்துகிறது என்பதை உணர்த்திய படம் ஆரண்ய காண்டம்!ப்ளாகரில் எல்லாரும் ஆஹா ஓஹோ வென புகழ்ந்து தள்ளப்பட்ட படம்!சிலர் தமிழ் சினிமாவுக்கு மஞ்சள் நீராட்டு என ஓவராக விளித்தனர் !!!ஏய்யா பருத்தி வீரன் சுப்ரமணியபுரம் எல்லாம் வந்தபோதும் இதே தான சொன்னீங்க?எம்புட்டு தபா தமிழ் சினிமாவுக்கு மஞ்சள் நீர்?ஒருவேளை ovulation problem ஆ?எதுக்கும் ஒரு நல்ல Gynecologist கிட்ட தமிழ் சினிமாவ காட்டுங்க!!
                 படம் மொக்கையோ மொக்கை!!ஒவ்வொரு கதாபாத்திரமும் சாதாரண மனிதன் போல பேசுவதில்லைன்னு சபதம் செய்துதான் அட்வான்ஸ் மற்றும் கால்ஷீட் பேசியிருப்பாங்க போல!!சம்பத் மட்டுமே தனது அக்மார்க் குரலில் பேசுகிறார்(ரவி கிஷ்ணா கொரல பத்தி தனியா சொல்லனுமா?ஐயோ சாமி!!) மற்ற எல்லாரும் ஒன்னு அடி தொண்டையில் உறுமுகின்றனர் இல்லைன்னா கீச்சுன்னு கத்துறாங்க!
                வழக்கமான விஷயங்களை மாற்றி செய்தால் அதை உலகத்தரம் என்று சொல்ல சில சூடோ இன்டலெக்சுவல்கள்  (நன்றி ஆதவன்) வெறிகொண்டு அலைகிறார்கள்.அதென்ன உலகத்தரம் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு பண்பாடு கலாசாரம் மொழி இனம் அது இதுவென்று ஆயிரம் உள்ளது.இதில் எங்கு வருகிறது உலக தரம்?இதென்ன காரா?euro norm   barath  norm என்று சொல்ல?இசையை எடுத்து கொண்டால் அதென்ன உலக இசை?உலகத்தில் ஒவ்வொரு நாட்டின் இசை கருவியையும் ஒன்றாக இசைப்பதோ?இப்போது திரைப்படத்துக்கு வருவோம்!இதில் என்ன உலக தரம்?ஆஸ்கர் அமெரிக்காவின் அளவுகோல் கான்ஸ் ஐரோப்பிய நாடுகளின் சினிமாவை மையபடுத்தும் ஒன்று.உலக சினிமா எடுக்கிறேன் என்று ஏன் தமிழில் எடுத்து சாகடிக்கிரீர்கள்?சேகர் கபூர் போல ஆங்கிலத்தில் எந்த முயற்சியை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாமே?
            
              மற்ற நாட்டு படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு வியாதி என்னவெனில் ஒரு படம் பேரு வாங்குனா அதே போல அம்பது படம் வரும்!பருத்தி வீரன்(ஒரு சேவிங் பண்ண காசில்லாத குளிக்காத பன்னாடை அப்புறம் ஒரு தாவணி போட்ட பொண்ணு), சுப்ரமணியபுரம்(நாலு ஓதவாக்கரைகள் ஒரு தாவணி போட்ட பொண்ணு)   இப்படி எல்லா கருமாந்திரத்தையும் பாத்து சலிச்சு போச்சு!!இப்போ இதே ஆரண்ய காண்டத்தை போல அம்பது படம் எடுக்கப்படும்!!அப்போ இதே அறிவு ஜீவிகள் ஐயோ அம்மா ன்னு கூச்சல் போடுவார்(ஆமா நீங்க தூக்கி உடுறீங்க!!அனுபவிங்க!)
              படத்தின் முதல் காட்சியே மேட்டர் செய்வது.நான் என்னமோ அது கோஹினூர் காண்டம் விளம்பரம்னு நெனச்சுட்டேன்!!சிறு நீர் கழிப்பதையும்(இதற்கு முன்பே பல படங்களில்) காட்டி விட்டனர்!!அடுத்து மலம் போவதோ?சென்சார் அப்படின்னு ஒன்னு இருக்கா?இப்படி அருவருப்பான விஷயங்களை காட்டினாலே உடனே சில அறிவு கொழுந்துகள் ஆஹா ஓஹோ!!ன்னு சொல்வது இவர்கள் எத்தகைய அருவருப்பான மனதை உடையவர்கள் என்பது விளங்கும்!!இந்த அறிவு ஜீவிகளின் கக்கூசிலும் கேமரா வச்சி படமேடுக்கலாமே?!!
              மற்ற படி ஆரண்ய காண்டம் சரியான மொக்கை!!கெட்டவார்த்தை கேக்க நான் ஏன் படத்துக்கு போகணும்?கொழாயடிக்கு போனாலே போதுமே!!இப்படிதான் பொல்லாதவன் அப்படின்னு கொசு தனுசு நடிச்ச படம்  Bicycle Thieves படத்தின் அருவருப்பான பிரதி!ஏய்யா இந்த கொலை வெறி?வெற்றிமாறன் டுபுக்கு படத்தையும் எதிர்ப்பார்க்கும் சூடோ இண்டலெக்சுவல்கள் இங்கு உள்ளனர்!!ஐயோ ஐயோ!!
               அப்புறம் யுவன் சங்கர் ராஜா ஷெர்லாக் ஹோம்ஸ் படத்தின் ஹான்ஸ் சிம்மரின் இசையை வேறு சுட்டு ஆங்காங்கே பயன்படுத்துகிறார்!!இதான் உலக தரமோ?என்னவோ!!
               ஆனால் ஒன்று முடிவு செய்துவிட்டேன்.பட விமர்சனங்களை படித்து அதில் நல்லா இல்லை ன்னு சொன்னா ரொம்ப வசதியா போச்சு பாக்குற வேலை மிச்சம்!ஆஹா ஓஹோன்னா இனி பார்ப்பது பற்றி பரிசீலிக்கப்படும்!இந்த தெளிவை கொடுத்த விமர்சன அன்பர்களுக்கு நன்றியோ நன்றி!!உலக சினிமா உள்ளூர் சினிமா இந்த வேறுபாட்டை ஏற்று கொள்பவர்கள இலக்கியத்தில் மட்டும் தலித் இலக்கியம் பெண் இலக்கியம் ஆகிய வேறுபாட்டை நிராகரிப்பது ஏனோ?!!!என்னவோ பண்ணட்டும்  ஆளை விடுங்க.தமிழ் சினிம்மான்னாலே கடும் அலர்ஜி இருந்தது .இப்போது அது இன்னும் அதிகரித்து விட்டது!!
              அப்புறம் ஏதோ எல்லாரும் சொல்வதுக்கு மாற்று கருத்து சொல்வது நான் என்னமோ ஹிட்ஸ் வாங்க செய்ததாக நினைத்தால் எனக்கு கவலையில்லை!!இந்த ஹிட்ஸ்,இன்ட்லி,தமிழ்மணம்,பொறந்த நாளு நம்பர் ஒன ரேன்க் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையே இல்லை!!நான் நினைத்ததை சொல்லியிருக்கிறேன்.அம்புட்டுதேன்!


    வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

    கண்டிப்பாக படிக்க வேண்டியது!!

    http://allinall2010.blogspot.com/2011/08/blog-post_3567.html
    ************************************************

    திங்கள், 8 ஆகஸ்ட், 2011

    திமுக அல்லைகையான கவிஞர் -2

    முதல் பாகத்தில் போட்டிருந்த படமே முழு சாரம்சத்தையும் சொல்லிவிட்டாலும் இன்னும் சிலவற்றை சேர்க்க வேண்டியுள்ளது.
                        இவுரு முகநூலில் (அதான் Facebook) கணக்கு வைத்துள்ளார்.அதில் தினம் குறைந்தது மூன்று ஸ்டேடஸ் என்கிற பதிவை போடுவதுண்டு!அதில் என்ன சொல்வார் என்றால் திமுககாரர்கள் எல்லாரும் நாட்டுக்காக உழைத்து களைத்து உறங்கி கொண்டிருக்கும் வேளையில் அதிகாலையில் கைது என்பது ஒரு சித்ரவதை என திருவாய் மலர்ந்துள்ளார் கவிஞர்!
                                  இவருடைய பழக்கம் என்னவெனில் மேலே சொன்னதுபோல ஏதாவது திமுக ஜால்ரா பதிவை போட்டுவிடுவார்.அதற்கு வரும் பின்னூட்டங்களை பார்த்துகொண்டே வருவார்.யாரவது எதிர்ப்பாக (அதாவது உண்மையை) கருத்து சொல்லிவிட்டால் இவர் என்ன செய்ய வேண்டும்?அதற்கு மாற்று கருத்து இருந்தால் அதை சொல்லி தனது நிலையை விளக்க வேண்டும்.இதுதான் பதிவுக்கான நியாயமாக இருக்க முடியும்.ஆனால் கவிஞர் என்ன செய்வார் என்றால் "நான் போட்ட ஸ்டேடஸ் வெறும் Parody தான்.இதற்கு இவ்வளவு சீரியஸாக பின்னூட்டம் போடுபவர்களை பாத்தால் எனக்கு பயமாக உள்ளது(ஆமாய்யா உண்மைய சொன்னா பயமாத்தான் இருக்கும் பொய்யர்களுக்கு).இப்படி நீங்கள் செய்தால் நான் நிஜமகவுமே படு தீவிரமான பதிவுகளாக போட வேண்டி வரும் என மிரட்டும் பாணியில் சொல்லி பின்னூட்டத்திற்கு பதில் போடும் பொறுப்பிலிருந்து நழுவி விடுவார்!!(ஒ அப்போ நீங்க உயிர்மையில் எழுதும் தலையங்கங்களும் அதே போல சும்மானச்சிக்கா?சரி இது தெரியாம பல பேரு உங்க சும்மானச்சிக்கி புத்தகத்த வாங்கி வேறு படித்து கொண்டிருக்கின்றனர்!!ஐயோ ஐயோ!!பேசாம முரசொலிமை   அப்படின்னு மாத்திடுங்க சஞ்சிகையின்  பேர!!)
                இது எப்படி இருக்குதுன்னா வடிவேல் ஒரு நகைச்சுவையில் சொல்வது போல "நான் சொன்னது பூரா உண்மைன்னு நீங்க நம்பிட்டீங்க!ஐயோ ஐயோ".இதுபோல உள்ளது கவிஞரின் நிலை.அது சரி வடிவேலுவும் திமுகதானே!!
                 இம்மாத காலச்சுவடில் கண்ணன் கவிஞரின் அருமை பெருமைகளை பட்டியலிட்டுள்ளார்(கண்டிப்பாக படிங்க).அதில் சில:
      -கனிமொழியின் கணவர் அரவிந்தனின் முதலீட்டில்தான் கவிஞரின் அந்த பதிப்பகம் தொடங்கப்பட்டது(ஒ இப்போ புரியுது விசுவாசத்துக்கு காரணம என்னான்னு!!)
      -காலச்சுவடு கூட்டம் நடக்கும்போது அது நேரத்தில் நடக்கிறது என்பதை சில புல்லுருவிகள் மூலம் தெரிந்து கொண்டு அப்போது அந்த குழுவில் இருந்த கனிமொழிக்கு தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி கொண்டிருப்பாராம்!!ஆஹா என்னே கிறுக்கு புத்தி!!இன்னும் பல விஷயங்கள் ஆழமாக இம்மாத காலச்சுவடில் உள்ளது!
                Last but not least: அப்புறம் இவருக்கு வேண்டியவர்களுக்கு விருது கொடுக்க அவர்களை தொடர்ந்து இவரின் அல்லக்கையாக தக்கவைத்துக்கொள்ள இவர் கையாளும் முறை வெக்ககேடானது!சுஜாதா விருதாம்.உங்களுக்கு  வேண்டியவர்களை கவுரவிக்க ஏய்யா ஆண்டுதோறும் சுஜாதாவை சாகடிக்கிரீர்கள்?சுஜாதா  இருந்திருந்தால் "உனக்கு வேண்டியவர்களை தக்க வைத்துகொள்ள என்னை ஏன் வருடா வருடம் எக்ஸ்யூம் செய்கிறீர்கள்?" என கேட்டிருப்பார்!ஐயோ இதெல்லாம் ஒரு பொழப்பா?

    ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

    இந்தியா அடிமை நாடில்லையா?

            இந்தியா அமெரிக்காவின் அடிமை அமெரிக்காவின் மற்றுமொரு காலனி என்று கூறியபோது என்ன இப்படியெல்லாம் சொல்றீங்கன்னு கேட்டவர்களுக்கு இப்போது ஒரு கேள்வி.அமெரிக்கா திவால் ஆகும் தருணத்தில் (S&P இன் AAA லிருந்து AA+)   சீனா சரியான கேள்வியை(டாலர் குறித்து) அல்லது வெகுநாளாக அடக்கி வைக்கப்பட்ட பிரச்னையை எழுப்பியுள்ளது(சிலர் சீனா அமெரிக்காவின் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளதால் இந்த பிரச்சனை எழுப்புகிறது எனலாம்.எப்படியும் இந்த பிரச்சனை எழுப்ப தைரியம் வேண்டுமே!!அது இந்தியாவுக்கு உள்ளதா?இது கவலை அளிக்கிறது என முதலை கண்ணீர் வடித்துள்ளார் அமெரிக்காவின் துணை அரசின் மந்திரி பிரணாப் முகர்ஜி!!(சரி அப்போ வூட்டுக்கு போய் அழு.விலைவாசியையும் குறைக்க வக்கில்லை.என்னத்துக்குதான் நீ இருக்க?ஒம்புல்லை வேற அரசியலுக்கு கொண்டு வந்துட்ட!!ஒனக்கே ஒன்னும் தெரியல!!இதுல அவன் வேறயா?).
                    ஏற்கெனவே இந்தியா இரான் எரிவாயு குழாய் அமைக்க முயற்சித்த அப்போதைய எரிவாயு மந்திரிகளான மணிசங்கர் ஐயர் மற்றும் நட்வர் சிங் ஆகியோர் "அமெரிக்க விருப்பங்களுக்கு" எதிராக செயல்பட முயற்சித்ததால் அமெரிக்காவின் அழுத்தத்தின் பெயரிலேயே அந்த இரண்டு மந்திரிகளும் வேறு துறைக்கு மாற்றப்பட்டனர்(அதாவது ஓரம்கட்டப்பட்டனர்).இந்த ஒரு உதாரணமே இந்தியாவின் மந்திரிகளை தீர்மானிப்பது யார் இந்தியாவின் விருப்பங்களை முடிவு செய்வது யார் என விளங்கும்!
                       உலகத்தின் எல்லா வணிக பரிமாற்றங்களும் டாலர்களிலேயே  நடப்பது இரண்டாம் உலக போருக்கு  பின்னர் கட்டாயமாக்கப்பட்டது.அமெரிக்காதான் சுவர்க்கம்!!டாலர்தான் கடவுள் என்ற ஒரு மாயை அமெரிக்க ஆட்சியாளர்களால் உண்டாக்கப்பட்டது.பின்னர் பல பிரச்சனைகள் பொருளாதார வீழ்ச்சிகள் வந்தபோதும் இதே மாயை காப்பாற்றப்பட்டது!!ஆனால் இப்போ முகத்திரை கிழிந்து அமெரிக்கா மூழ்கும் நிலை!!என்ன செய்யபோகின்றனர் மன்மோகன் கோஷ்டி (மாண்டேக் சிங் உள்ளிட்டோர்)!!!அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி என்றாலே இந்தியாவிலும் வேலை இழப்புகள் இருக்கும்.இப்படி ஒருநிலைக்கு காரணம் 1991இல் கொண்டு வரப்பட்ட பொருளாதார கொள்கை காரணம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்!!தெரியாத வரை ஆள்வோருக்கு நல்லது!

    ஞாயிறு, 31 ஜூலை, 2011

    திமுக அல்லக்கையான கவிஞர்


    கனிமொழி புத்திரன் சாரி மனுஷ்ய புத்திரன்(அப்போ நாம எல்லாம் மிருக புத்திரன்களா?) டுபுக்குமை சஞ்சிகையில் கனிமொழிக்கு ஜால்ராவோ ஜால்ரா அடித்திருக்கிறார்.அது மட்டுமன்றி அவரை பற்றி எழுதிய மற்ற சஞ்சிகைகள் பத்திரிகைகள் எல்லாவற்றையும் இடித்திருக்கிறார்!!திமுக தலைமை இவுரு ஜால்ரா பாட்டு(அதுவும் இவுரு முகநூலில் அதான் Facebook இல முரசொலி ரேஞ்சுக்கு திமுக பல்லவி தினம் பாடி மொக்க பிளேடால ஆட்டை அறுக்கும் வேலை செய்து வருகிறார்) சகிக்கல தயவு செஞ்சி இவருக்கு ஒரு கவுன்சிலர் போஸ்டாவது கொடுத்துடுங்க!!நாங்களும் நிம்மதியா இருப்போம்!!

    புதன், 27 ஜூலை, 2011

    ஆட்சியாளர்களுக்கு வியாதியோ வியாதி!!

    (நன்றி தினமணி )

     (இது gif file அதனால் மேலே உள்ள படத்தை சொடுக்கி பார்க்கவும்.அப்போதுதான் animation தெரியும்!!)

    செவ்வாய், 26 ஜூலை, 2011

    கேஸ்ட்ரோவும், ஊழல பெருச்சாளியும்!!

    "History will absolve me,former minister quotes Castro"-ஆ ராசா நீதிமன்றத்தில் சொன்னது.நீயும் Castro வும் ஒண்ணா?அவுரு பல வருஷம் காட்டிலேயே அடிப்படை வசதி இல்லாமல் போராடியவர் நாட்டுக்காக!!நீ?ஊழல பண்ணி நாட்ட சொரண்டிபுட்டு பேச்ச பாரு!!அவுரு ஜெயில்ல எத்தனை சித்ரவதைகளை அனுபவித்தார் தெரியுமா?ஒனக்கு கொசு கடியே பெரிய சித்ரவதைதான்!!நாராயணா இந்த கொசு தொல்ல தாங்களா!!தெனம் ஒரு கத அளக்குறான்!!எங்க போய் முடிய போகுதோ!!

    ஞாயிறு, 24 ஜூலை, 2011

    மாமா என்ன தெரியலை?

    கல்மாடிக்கு ஞாபக மறதி நோயாம்!!அது சரி அவரிடம் போய்  "மாமா என்ன தெரியலை?நான்தான் கீழ்மாடி ஓங்களோட  பத்து பங்களாவ எனக்கு எழுதி தரதா சொன்னீங்க.எப்போ எழுதி குடுக்க போறீங்க?

    வியாழன், 21 ஜூலை, 2011

    இந்தியாவை சுற்றும் வல்லூறு!!

    ஹிலாரி கிளிண்டன் இங்கு வந்து என்னத்த கிழித்தார் என சிலர் கேட்கலாம்.ஆந்திர மாநிலத்தில் 1200   ஏக்கர் பரப்பளவில்ஒரு "முக்கிய புள்ளி" க்கு சொந்த மான இடத்தில் யுரேனியம் இருப்பதை கண்டுபிடித்தார்.ஆனால் நைசா அதை மறைத்துவிட்டார்!!அப்புறம் அது அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டது.ஆக இப்போது யுரேனியதுக்கு போட்ட அணுசக்தி ஒப்பந்தம் வேஸ்டு!!!இங்கே உள்ள யுரேநியமே போதுமானது.இதை அமெரிக்கா தெரிந்து கொண்டது.சின்ன வல்லூறு ஹிலாரி உடனே இங்க வந்து சீட்டுல துண்டை போடும் விதமாக இங்கு வந்து  போயுள்ளார்.அது தவிர இந்தியா தனது சந்தையை  இன்னும் அமெரிக்காவுக்கு நல்லா தொறந்து உடனுமாம்!!(இதென்னா ஏ படமா?)அப்போதான இன்னும் ஓட்டுக்கா  நாட்டை சுரண்ட  முடியும்!!!

              எல்லாத்துக்கும் மேலே அணு விபத்து இழப்பீடு சட்டத்தை இன்னும் நீர்த்து போக வைக்கனுமாம்.அப்போதான் அமெரிக்க பணம் கொழுத்த பண்ணிகள் நாட்டை சூறையாட முடியும்!!அமெரிக்க நிறுவனங்கள் அணு உலைகளுக்கான உபகரணங்களை வழங்கும்.அதன்மூலம் எதாவது அணு உலைகளில் விபத்து என்றால் இவர்கள் அதற்கு இந்திய அரசு நிர்ணயித்துள்ள 1000கோடி(முன்பு அது 500 கோடியாக இருந்து பின்னர் கடும் எதிர்ப்பினால் உயர்த்தப்பட்டது).ஆக இங்கு அணு உலை விபத்து ஏற்பட்டு பல லட்சம் மக்கள் இறந்தாலும் அமெரிக்க பண முதலைகள் அதற்கு ஒரு பைசா தரமாட்டார் என்பதையே ஹிலாரி கிளிண்டன் இங்கே சொல்லிவிட்டு போயுள்ளார்.இதை எதிர்க்க வக்கில்லாத அமெரிக்க அடிவருடி மன்மோகன் சிங் அரசு வழக்கம் போல இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு "ஆமாஞ்சாமி" போட்டிருக்கிறது.இதென்ன ஆச்சரியம்?ஏக்கெனவே டவ் கம்பெனி போபால் விஷ வாயு விபதுக்கே இன்னும் சரியான நீதியோ நிதியோ குடுக்கலியே!!மக்கள் அணு விபத்தில் செத்தால் அமெரிக்காவிலிருக்கும் ஒபாமா மற்றும் ஹிலாரி கூட்டத்துக்கு என்ன கவலை?தங்கள் பிள்ளைகளின் படத்தை காரிலோ அல்லது ஆபீசிலோ ஒட்டி வைத்து மகிழ்வர்(டிபிகல் ஹாலிவுட் கிளீஷே இது!!பிச்சைகாரன்  கக்கூசில் பிள்ளைகளின் போட்டோவை ஒட்டி வைத்து தடவுவான்.அமெரிக்க சனாதிபதி தனது மேஜையில் தன பிள்ளைகளின்  போட்டவை வைத்து தடவுவார்.ஆமா இதென்ன உலக சாதனியா?புள்ளை  பெக்குறது?தலைய வலிக்குது இந்த காட்சியை பார்த்து!!)

    புதன், 20 ஜூலை, 2011

    அரசின் புல்லரிக்க வைக்கும் கொள்ளுகை!!!

    பெட்ரோல் டீசல் கேஸ் மண்ணெண்ணெய் இதுக்கெல்லாம் உடனே விலையேற்றம் ஆனா கோடி கோடியா கொள்ளையடிக்கும் ஐபிஎல் லுக்கு வரி விதிக்க அரசு பரிசீளிக்குதாம்!!நாசமா போக!!மக்கள் செத்தாலும் கார்பரேட்டு கபோதிங்க வாழனும் அதான் அரசின் கொள்ளுகை

    திங்கள், 18 ஜூலை, 2011

    சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்துங்கள்

    சமசீர் கல்வியை அமல்படுத்த உயர்நீதி மன்றத்தின் ஆணையை கோடி வணக்கத்தோடு வரவேற்கிறேன்.இதை கருணாநிதி கல்வின்னு பாக்காமல் மேல்முறையீடு செய்து மேலும் மூக்குடைபட்டுகொள்ளாமல் இப்போதே அமல்படுத்துங்கள் சமசீர் கல்வியை!!இது ஜெயா அரசுக்கு குட்டு கருணாநிதிக்கு ஷொட்டுனெல்லாம் சொல்லி மேலும் அரசியல் படுத்தாமல் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனே அமல்படுத்தவேண்டும் சமச்சீர் கல்வியை.
           சமச்சீர் கல்வியை அமல்படுத்த மறுக்கும் தனியார் பள்ளிகள் மற்றும் நைசாக சி பி எஸ் இ ஆக மாற்ற முயலும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். மற்றும் பழைய பாடத்திட்ட  புத்தகத்துக்கென பல ஆயிரம் பிடுங்கிய காசை திரும்ப வழங்க அரசு உத்தரவிட வேண்டும்.இதை மறுக்கும் எந்த பள்ளியின்  அங்கீகாரத்தையும் அரசு  ரத்து செய்துவிடலாம்!
         பல ஆயிரம்  பள்ளி(கொள்ளை) கட்டணத்துக்கும்  அரசு ஒரு முற்றுபுள்ளி வைக்க இதுவே சரியான நேரம்.

    வியாழன், 14 ஜூலை, 2011

    கார்பரேட் களவாணித்தனம்-2 (புற்றுநோயை பரப்புதல்)

    கடலூர்(எனது சொந்த ஊர்) பெயர் பெற்றது கரும்பு சக்கரை பீச் இதெல்லாம் விட ஊர் உலகத்தில் தடை செய்யப்பட்ட தொழிர்சாலைகள்தான்.இப்போது சமீபத்தில் கெம்ப்ளாஸ்ட் நிறுவனம் மற்ற நாடுகள் மற்றும் மாநிலங்களில் நிறுவ மறுக்கப்பட்ட நிலையில் கடலூரை அடைந்தது.ஆட்சியாளர்களை "கவனித்ததில்" அனுமதி கிடைத்து தன பங்குக்கு ஊரை மாசு படுத்தி வருகிறது.இந்த நிலையில் சுற்றுசூழல் ஆர்வலர்கள் நடத்திய ஆய்வில் இந்த தொழிற்சாலைகளின் சுற்றுபுறத்தில் உள்ள காற்றில் புற்றுநோயை பரப்பும் உண்டாக்கும் ரசாயனங்கள் 2000 மடங்கு (Carcinogenic) கலந்திருப்பதாக குற்றம் சாட்டின.அப்புறம் நீரி(NEERI) அமைப்பு ஆய்வு கனிமொழியின் வீராவேச பேச்சு(நான் அப்பாவிடம் சொல்றேன்.அப்போதைய அமைச்சர்  மைதீன் கானிடம் சொல்றேன் blah blah)மக்களுக்கு சிறு நம்பிக்கையை உண்டாக்கியது.ஆனால் கார்பரேட்டுகள் +பணத்தின் முன்பு இதெல்லாம் எம்மாத்திரம்?
    அப்படியும் பலரின் வற்புறுத்தலால் அந்த நிறுவனங்கள் சேர்ந்து அந்த தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களை புற்றுநோய் ஆய்வு முகாமுக்கு அழைத்தது.சரி ஏதோ செஞ்சி கிழிக்கபோராங்கன்னு பாத்தா கடைசியில் அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவரை "கவனித்து" யாரையும் பரிசோதனை செய்யாமல் யாருக்கும் புற்றுநோய் இல்லை என ஒரு அறிக்கையை வெளியிட வைத்தனர்.அது இப்போது வெளியே வந்து விட "வழக்கம் போல" ஊத்திமூடும் பணியில் தொழிற்சாலை முதலைகள்.
                  ஆக இனி அந்த தொழிற்சாலைகள் வழக்கம் போல புற்றுநோயை பரப்பி கொண்டிருக்கும்.கேட்க ஆளில்லை.அப்படியே  யாரவது கேட்டால் இது போன்ற ஏமாற்று மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பூசி முழுகப்படும்.மக்கள் புற்றுநோய் வந்து செத்தால் இவர்களுக்கென்ன?கார்பரேட்டுகளுக்கு வேண்டியது மூன்று.
    பணம் பணம் மற்றும் பணம்!!

    ஞாயிறு, 3 ஜூலை, 2011

    கார்பரேட் களவாணித்தனம்-1 (நிதி அமைச்சகத்தை உளவு பார்த்தல்)

    கார்பரேட்டுகள் அல்லது எம் என் சி (எம்புள்ள எம் என் சில வேல பாக்குறான்.இது வழக்கமா கேக்கும் வசனம்.டுபுக்கு நிறுவனங்கள் கூட இரண்டு இடங்களில் மட்டும் கம்பனியை வைத்துகொண்டு எம் என் சி என தனக்குத்தானே அடைமொழி கொடுத்துகொள்கிறது(இந்த நேரத்தில் தமிழின தலிவரு ஞாபகம் வந்தா நான் பொறுப்பில்லை).1991 இஸ் ராஜீவ் மரணத்திற்கு பிறகு இந்தியா தாராளமயமாக்கபட்டது  .அதாவது எந்த கம்பெனி வேணும்னாலும் வந்து இந்தியாவை சொரண்ட வரிவிலக்கு லொட்டு லொசுக்கு எல்லாம் அரசே வழங்கும்.,ஒரு டவுசர் மட்டும் கொண்டுவந்தா போதும்.மிச்சத்தை அப்போதைய நிதி அமைச்சர் அமெரிக்க அடிவருடி முன்னாள் ஒலக வங்கி  ஊழியர்(இன்னும் 3000 $ பென்சன் வாங்குறார்) அவரும் ஊருல இருக்கும் களவாணிக்கேல்லாம்   ஆஜராகும் சிதம்பரமும் பார்த்துகொள்வர்.சிடுமூஞ்சி நரசிம்ம ராவ் இதுக்கு முழு எடுப்பு.(இந்த தாராளமயமாக்கவே  ராஜிவை சி ஐ ஏ முடித்ததுன்னும் சொல்லுவாங்க.நான் அந்த வெளையாட்டுக்கு வரவில்லை.டங்கன் காட் ஒப்பந்தம் பற்றியெல்லாம் கேக்க கூடாது).
    1991 க்கு  முன்பே சுரண்டும் மொதலாளிகள் இருந்தனர் ஆனால் குறைவு.அம்பானி,டாடா,பிர்லா போன்றவர்கள்.அதன் பின் ஆப்பிளை காப்பியடித்தே பெரியாளான பில் கேட்சு முதல் பில்லு கிழிப்பவன் வரையில் இந்தியாவை சுரண்ட அனுமதிக்கப்பட்டனர்.
        இப்போது என்ன நிலைமை?அரசையே ஆட்டிவைக்கும் அளவுக்கு கார்பரேட்டுகள் வளர்ந்து  விட்டனர்.எந்த மந்திரி பதவிக்கு யார் வரணும் யார் வரக்கூடாது என்பதை முடிவெடுப்பதும் அவர்களே.(நீரா ராடியா உரையாடல்கள் ஒரு டிரைலர்தான். வெளியே வராத பல நீரா ராடியாக்கள் இன்னமும் உள்ளனர்).
        இப்போது சமீபத்தில் நிதி அமைச்சக அலுவலகத்தில் 16 இடங்களில் பபிள் கம் போன்று ஒட்டப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.அதை எடுத்தால் உள்ளே சிறிய அளவுக்கு சுவரில் துளை உள்ளதாம்.பிரணாப் முகர்ஜி ஐ பி இடம் இதை முதலில் சொல்லாமல் மத்திய வரி விதிப்பு ஆணையத்தை கூப்பிட்டு "எல்லாவற்றையும்" கிளியர் செய்து விட்டுதான் ஐ பி யை அழைத்துள்ளார்.கேட்டதற்கு "உளவெல்லாம்  ஒண்ணுமில்லை.யாரோ விளையாட்டாக ஒட்டியுள்ளனராம்" .அதென்ன  நிதி அமைச்சகமா இல்லை காலேஜா?கண்ட இடத்தில் பபிள் கம் ஓட்ட!
           உண்மை இரண்டு விதமாக இருக்கலாமென சொல்கின்றனர்.ஒன்று சோனியாவே தன அமைச்சர்களை உளவு பார்த்திருக்கலாம்.இரண்டு கார்பரேட்டுகள் உளவு பார்த்திருக்கலாம்.
          இதில் கார்பரேட்டுகள் உழவே பிரதானமாக இருக்கும்(ஏனெனில் பிரதமரே சோனியாவின் ரிமோட்டால் ஆட்டிவைக்கபடுபபவர்.அதனால் அவருக்கு  தெரியாமல் யாரும் எதுவும் செய்ய வாய்ப்பு மிக குறைவு) .யார் மந்திரியாக வரவேண்டுமேன்பதுவரை முடிவெடுக்கும் கார்பரேட்டுகள் அந்த மந்திரிகள் என்ன முடிவெடுக்கின்றனர் என்பதை தெரிந்துகொல்லாமலா இருப்பார்?
          இப்போது சின்ன வத்திபெட்டி அளவே உள்ள ஒரு சாதனம் உள்ளது.அதில் சிம் கார்டை சொருகிவிட்டு அறையில் வைத்துவிட்டால் உலகின் எந்த மூலையிலும் செல்போன் மூலம் ஒட்டுகேட்டுகொள்ளலாம்.அது தவிர குண்டூசி அளவு மைக், கேமரா என பல உளவு சாதனங்கள் சாதாரண மார்கெட்டிலேயே கிடைக்கின்றது.இது குறித்த விவரமான கட்டுரையை ரா முன்னாள் அதிகாரி பி.ராமன் இங்கே   எழுதியுள்ளார்.இவரின்  "நிழல் வீரர்கள்" என்ற புத்தகம் படித்திருக்கிறேன்.அதில் உளவு அமைப்புகளின் செயல்பாடுகள் விளக்கியிருப்பார்.
          சரி இதையெல்லாம் பயன்படுத்தி என்ன செய்வது?எப்படி இருந்தாலும் கார்பரேட்டுகளின் மக்கள் தொடர்பு அதிகாரி மூலமோ அல்லது ஊடகங்கள் மூலமோ அல்லது நிதி அமைச்சக அலுவலகத்தில் உள்ள எடுப்பு மூலமோ அமைச்சகத்தின் முடிவுகளை தெரிந்து கொள்ளலாமே.எதற்கு இந்த உளவு என கேக்கலாம்.
         இப்போது செய்தி கிடைப்பது பெரிய விசயமில்லை.தொழில்நுட்ப வசதியில் எப்படியும் அமைச்சக முடிவுகள் தெரிந்துவிடும்.ஆனால் அது எப்போது கிடைக்கிறது என்பதே கார்பரேட்டுகளுக்கு பல ஆயிரம் கோடி சொத்துமதிப்பை மாற்றி அமைக்க வல்லது.அதனாலேயே உடனடியாக அமைச்சக கூட்டத்தை உளவு பார்ப்பதன் மூலம் அதன் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
      இதனால் பங்கு சந்தையில் முதலீட்டு பங்குகள் (equity) மற்றும் முன்பேர சந்தையில்  (Futures & options) பல கோடி லாபம் பார்க்கலாம்.சாதாரண  ஒரு தனி முதலீட்டாளர் அதிகபட்சம் (அவர் போலி சாமியாராக இல்லாத பட்சத்தில்) சில ஆயிரம் ஈக்விட்டிகளையோ அல்லது சில ஆயிரம் முன்பேர  பங்குகளையோதான் வைத்திருப்பார்.ஆனால் நிறுவங்கள் பல ஆயிரம் ஈக்விடிக்களையும் லட்சகணக்கில் முன்பேர பங்குகளையும் வைத்திருக்கும்.அதனால் ஒரு பத்து பைசா வேறுபாடு கூட அவர்களின் சொத்துமதிப்பை  பல நூறு கோடி ரூபாய்  வரை  மாற்றிவிடும் .இதனாலேயே உளவு பார்த்ததென என்று கூறலாம்.அது மட்டுமன்றி போட்டி நிறுவனங்களின் நடவடிக்கை அதற்கு அரசு வழங்க உள்ள சலுகைகள் என பல நூறு தகவல்களை உளவு மூலம் பெற்று பயனடைந்திருப்பர்.வழக்கம் போல ஒன்னுமே நடக்கல என்று காங்கிரஸ் எல்லோரு வாயையும் மூடி விட்டது வாழ்க சன நாயகம்!! 

    செவ்வாய், 28 ஜூன், 2011

    நெக்ஸ்ட் வீக் தும் பதவி கோயிங்கா?

    குலைன்ஜர் குடும்ப உரையாடல் கற்பனை.
    **********************************************************************************
    இடம்:குலைன்ஜர்  வீடு
    கூஜாத்தி அம்மாள்: என்னங்க முறுக்கு,சீடை,சுழியம்  ,இட்லி,வடை எல்லாம் ரெடி.வாங்க தில்லிக்கி போய் மகள் பாத்துட்டு வரலாம்
    குலைன்ஜர்  : (மைன்ட் வாய்சில்)மறுபடியுமா?.....ரெண்டு நாளைக்கு முன்னதானே போனோம் ..ம்ம் ம்ம் பாக்கலாம்.
    கூ.அ: என்ன பாக்கலாம் இதே அவுக வீட்டு பிள்ளைங்கன்னா உடனே கிளம்பியிருப்பீங்க.
    குலைன்ஜர்: (மைன்ட் வாய்ஸ்)என்ன பால் போட்டாலும் கோல் போட்டுடுராளே!! .....சரி வா
    (திடீரென்று பிறை முருகன் ஓடி வருகிறார்)
    பிறை: தலைவரே திஹார்னா உதடுகள் ஒட்டாது  புழல்னா  ஓட்டும்...
    குலைன்ஜர்:(மைன்ட் வாய்ஸ்) ஐயோ இருக்குற இம்சைல இவன் வேற நேரம் காலம் தெரியாம....யோவ் இப்போ டில்லிக்கு கெளம்புறேன் நாளைக்கு வா.
    (பயாநிதியின் பரிதாப என்ட்ரி)
    பயாநிதி: தாத்தா தூங்குனாலே ஒரே திஹார் கனவா வருது..ஒரே டர்ரா இருக்கு..
    (அப்போது பயாநிதி செல்போன் அலறுகிறது.தெரியாத நம்பர்)
    கர கர குரலில் பழகிரி போனில்: என்ன தயா நெக்ஸ்ட் வீக் தும் பதவி கோயிங்கா?
    பயா: யோவ் யாருய்யா அது வெந்த புண்ணுல வேல பாய்ச்சுறது?
    (லைன் கட் செய்யப்படுகிறது)
    குலைன்ஜர்: என்ன பா நீயும் வாயேன் டில்லிக்கு நான் போறேன்.
    பயா: எப்படியும் அங்கதானே போக போறேன்.அப்புறம் பாக்கலாம்
    கூலின் என்ட்ரி
    குலைன்ஜர்: குளபதி டில்லி போறேன் நீயும் வா
    கூலின்: சரி தலிவரே.
    ********************************************************************************
    திஹார் சிறை
    பாசமலர் பாடல் பேக்க்ரவுண்டில் ஒலிக்கிறது.கூலின் குனிமொழி சந்திப்பு
    குனிமொழி: அண்ணா ஆஆ  ஆஅ ஆஅ ஆ
    கூலின்: (மைன்ட் வாய்ஸ்)நம்ம குலைன்ஜர் டிவி சீரியல் மாதிரி   இருக்கு.எதுக்கும் நாமும் அழுது வைப்போம்.....ஆ ஆ
    கூதித்யா: அம்மா நீங்க நல்லவங்களா கெட்டவங்களா?
    கூலின்:ஆமா இது வேறயா?பயபுள்ள கோத்து விடுது பாரு
    குனி: கண்ணீருடன் தெரியலையேப்பா!!
    கூலின்: மைன்ட் வாய்ஸ் (200 கோடி மட்டும் தெரிஞ்சிதோ?)
    குலைன்ஜர்: கூம்ஜெத் மலானி பிச்சுவா பக்கிரிக்கு ஆஜராகுரராம்.அதனால் பிபில் சிபலை ட்ரை பண்ணேன்.போனியே எடுக்க மாற்றார்.
    கூலின்:(மைன்ட் வாய்ஸ்) எப்படி எடுப்பார்?பங்கு கிடைக்கலைன்குற கோபமா இருக்கும்.
    கூசா: தலைவா ஆரிய திராவிட யுத்தத்துல நாம்தான் ஜெயிப்போம்.
    குலைன்ஜர்:(மைன்ட் வாய்ஸ்) ஆமா நானே ஏதோ ஒட்டு வாங்க இந்த ரீல்தான் அம்பது வருஷமா  ஓட்டிகினு இருக்கேன்.
    கூலின்: ரீல் அந்து போச்சுடா சாமி!!!
    குலைன்ஜர்:(கண்டிப்புடன்)என்ன சாமி?ஏது சாமி?
    கூலின்:(மைன்ட் வாய்ஸ்) ஆமா ஒட்டு வாங்கும்போது எடுக்குற ஆரத்திய ஏன் ஏத்துகுரீங்களோ !
    கூஜாத்தி: என்ன பண்ணுவீங்களோ தெரியாது எம்மக வெளிய வரணும்.இந்தாம்மா முறுக்கு.
    கூலின்: பேசாம நீங்க ரெண்டு மணி நேர உண்ணாவிரதம் இருந்து  இலங்கைல போர   நிறுத்திய மாதிரி இப்பவும் செய்யலாமே?
    குலைன்ஜர்:(மைன்ட் வாய்ஸ்) ஆமா இவன் நம்மள   ஒரேடியா முடிக்க வழி சொல்லுறான்.பீ கேர்புல்..நான் என்ன சொன்னேன்.
    ஜெயிலர்: ம்ம்..ம்ம் நேரம் முடிஞ்சிது.கெளம்புங்க.
    ***********************
     குலைன்ஜர் பக்கீரன்  போபாலை செல்லில் அழைக்கிறார்.
    (காலர் ட்யூனாக  2011 நம்ம கையில சந்திப்போன்டா  தோழா நாம் சட்டசபையில பாடுகிறது)
    குலைன்ஜர்: இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளம் ஆக்கிட்டீங்களே!!
    பக்கீரன்  போபால்: தலைவரே சொல்லுங்க என்ன செய்யணும்
    குலைஞ்ச்ர்: இந்த திஹார் சந்திப்பை குலைன்ஜர் டிவி சீரியல் ரேஞ்சுக்கு கண்ணீரோடு விளக்கி ஒரு தலையங்கம் போடு.உடனே பக்கீரன் இதழ் வரணும்.என்ன?
    போபால்: நீங்க சொன்னா மறுபேச்சு  ஏது தலைவா!!செஞ்சிடுறேன்.சாமியார் பித்யானந்தா விவகாரம் போல சூம் கவரேஜ் பண்ணிடுறேன்  .
    *****************************************************************************
    மீண்டும் குலைன்ஜர் வீடு
    கூலினிடம் வேலையாள்:பைதை குரைசாமி ஓங்க வெற்றி செல்லாதுன்னு வழக்கு போட்ருகாராம் .
    கூலின்:ஐயோ..முதல்வர் பதவிதான் பழகிரியால்  கானல் நீரானது.எம் எல் ஏ பதவியும் காலியாகப்போகுதா?என்ன கொடுமை சார்!!


    ஞாயிறு, 26 ஜூன், 2011

    ராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருது?!!!?!; அன்புமணியின் அந்தர்பல்டி

     அம்பேத்கர் சுடர் விருது இந்தாண்டு  ராமதாசுக்கு அளிக்கப்படுமென திருமாவளவன் அறிவித்துள்ளார்.என்ன கொடுமை இது?1987 இல் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இடஒதுக்கீடு கேட்டு மரம்வெட்டி போராடிய ராமதாசுக்கா?இல்லை அதே போராட்டத்தில் தலித் மக்களின் குடிசைகளை தீவைத்து கொளுத்தியதற்கா?இல்லை இன்னும் பல இடங்களில் இவரது சாதியினர் தலித்துகளை அடித்து துன்புறுத்தி சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாக்கி கொண்டிருப்பதற்கு அம்பேத்கர் விருதா?இரண்டு தலிவர்களான ராமதாசு மற்றும் திருமா ரெண்டு பேர் மட்டும் கட்டிக்குவாங்க.ஆனா தொண்டர்கள்?என்றுமே ஒற்றுமையாக இருந்ததில்லை.தலித் மக்களை அடிப்பது தீண்டாமை கொடுமை செய்வது குடிசைக்கு தீவைப்பது என மருத்துவர் அய்யா மொதல்ல ஓங்க கட்சியினருக்கு தீண்டாமை கொடுமை செய்யக்கூடாதுன்னு என்னிக்காவது சொல்லியிருக்கீங்களா?இல்லையே!!தமிழ் வளர்ச்சி பாதுகாப்பு என்ற கேடயதிற்குள் நீங்க ரெண்டு பெரும் அடிக்கடி கூடிக்கிறீங்க ஆனால் ஓங்க தொண்டர்கள்?இன்னும் தீண்டாமையை,ஆதிக்க மனப்பான்மையை  விடவில்லையே!!தொண்டர்களாக தாங்கள் தலைவர்களால் அவர்கள் குடும்ப நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிரோம்னு அவர்களே உணர்ந்தாலே ஒழிய இந்த கொடுமைக்கு தீரவில்லை!
    ********************************************
    இது தவிர இவுரு மகன் அன்புமணி(அதான் புகையிலை எதிர்ப்பு செய்தாலும் தான் சுகாதார அமைச்சராக இருந்தப்போ சிகரெட்டு தொழிற்சாலையை மூடி அதன் தொழிலாளர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யாதவர்.கொல்லைபுறம் வழியே அமைச்சர் ஆனவர்) இப்போது தோல்விக்கான காரணத்தை வெற்றிகரமாக கண்டுபிடித்துவிட்டாராம்.அது திமுக எதிர்ப்பு அலையாம்.மேலும் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின் பற்றாக்குறை, 2ஜி அலைக்கற்றை என்று பல்வேறு காரணங்கள் உள்ளனவாம்! அப்போ இத்தனை பிரச்சனைக்கும் காரணமான திமுகவுடன் ஏன் கூட்டு வைத்தீர்கள்?வெளிப்படையா சொன்னா ஒங்களுக்கு ராஜசபா எம்பி பதவி தர அதிமுக மறுத்ததால்தானே மக்களை பல பிரச்சனைகளில்(உங்கள் கூற்றுப்படி.அது உண்மையும் கூட) வாடவிட்ட உங்களுக்கு எம்பி பதவி தர ஒப்புக்கொண்ட  திமுகவுடன் கூட்டு வைத்தீர்கள்.அப்போ மக்கள் நலன் உங்களுக்கு முக்கியம் இல்லை உங்கள் பதவி குடும்ப நலன்தான் முக்கியம்!ஒத்துக்குங்க.அப்போ நீங்க தேர்தல் பிரசாரத்தில் திமுக அமோக ஆட்சி செய்ததுன்னு ரீல் விட்டதெல்லாம் உங்கள் பதவிக்காகதானே?
         இப்போ கனிமொழிக்கான ராஜசபா எம்பி பதவிக்கே இருக்குற சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து வெற்றி பெற சிரமமாகிவிட்ட நிலையில் இருக்கிறது திமுக.அதனால் 2012 இல் ராஜசபா எம்பி பதவி அன்புமணிக்கு எட்டாகனியாகிவிட்ட நிலையில்தான் அந்த ஆதங்கத்தில்தான் இப்படி கூவுறார்.இவர்களின் நிஜ நிறத்தை மக்கள் இப்போது தெளிவாக பார்க்கலாம்!!

    சனி, 25 ஜூன், 2011

    புத்தகப்பரிந்துரை

    அமெரிக்கா என்னும் தேசம் உருவாக்கி 250 ஆண்டுகள் ஏறக்குறைய ஆகியிருக்கலாம்.ஆனால் அந்த தேசம் விழுகிய இயற்கை வளங்கள்,எரிபொருட்கள், சுரண்டிய தேசங்கள்,கண்டங்கள் என இதன் "சிறப்பு" பட்டியல் நீளுகிறது.இதை பற்றிய விவரங்கள் மேலும் அறிய ஏதேனும் புத்தகம் உதவும்.இடதுசாரி எழுத்தாளர்களின் புத்தகமெனில் "ஆமா!இவுகளுக்கு வேறன்ன வேலை " என சட்டென முடிப்பவர்கள் இருக்கிறார்கள்.ஆனால் இந்த அமெரிக்க பகாசுரன்களை பற்றி எழுதிய அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து அமெரிக்க நிறுவனத்தில் பொருளாதார அடியாளாக பணியாற்றிய ஒருவர் சொன்னால்?அதான் இந்த இரண்டு புத்தகங்களான "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" மற்றும் "அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு" சொல்கிறது.எழுதியவர் மெய்ன் என்னும் பொருளாதார அடியாட்களை பயன்படுத்தி மிகைப்படுத்திய பொருளாதார மதிப்பெடுகளை அளித்து மூன்றாம் நாடுகளை சுரண்டுவதுதான் வேலை.
      இதில் வேலை பார்த்த ஜான் பெர்கின்ஸ் மனசாட்சி உறுத்தலால் அமெரிக்காவின் ரகசியங்களை அம்பலபடுத்தியிருக்கிறார்.அமெரிக்காவின் பகாசுரன்களை தெரிந்து கொள்ள தவறாமல் படிக்கவும்.முதலில் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் அதன் பின் அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு வெளியானது.அந்த வரிசையிலேயே படிப்பது நல்லது.இந்த புத்தகங்களை வாங்க கீழே உள்ள இணைப்புகளை சொடுக்கவும்
    http://www.udumalai.com/?prd=&page=products&id=4809

    http://www.udumalai.com/index.php?prd=&page=products&id=6767





    மாட்டிகொண்ட எழுத்தாளர்

    (ஆல் இன் ஆல்  நாத்திக கட்டுரைகளில் போலி சாமியார் முதல் போப்பாண்டவர் வரை பெண்டு கழட்டுவார்)
    வினவின் கட்டுரை   (என்னதான் இலங்கை தமிழர் உள்ளிட்ட விவகாரங்களில்  வினவுடன் நான் வேறுபட்டாலும் இந்த விஷயத்தில் வினவின் கருத்தை மனதில் சிறிதளவு ஈரமுள்ள எவரும் ஏற்றுகொள்வர்.)
             இவுரு எழுதுன "*"ரோ டிகிரி என்ற நாவலை(இது நாவலா?எனக்கு தெரியிலீங்க) முதல் பக்கமே இவர் கொடுத்திருக்கும் முன்னுரை குமட்டி வாந்தி வர செய்யும் தன்மை கொண்டது.அதுக்கு மேல படிக்க எனக்கு வயித்துல திராணி இல்லை!!(ஆமா எத்தன தபா வாந்தி எடுக்க?).
            குருதிப்புனல் பட விமர்சனத்தில் இவுரோட மாவோயிச சிந்தனை தெறிக்குது.ஆனா இப்போ?மோடியை ஆதரிக்கும் சோவின் பத்திரிக்கையான துக்ளக்கில் எழுதுறார்!!என்னே முரண்பாடு?
                  ஒரு பெண்ணிடம்  இவர் பேசிய பேச்சு மேலே குடுத்த இணைப்புகளில் உள்ளது.என்னத்த சொல்ல?சிலர் அந்த பெண்ணே வரிந்து வந்து பேசினார் என சொல்கின்றனர்  .சரி அந்த பெண்ணின் வயதென்ன இவரின் வயதென்ன?
                  இது தன்னுடைய உரையாடல் இல்லையென மறுக்கலாம்.ஆனால் இவரின் தளத்தை படித்தாலே எத்தனை கெட்ட வார்த்தை உள்ளது எப்படியெல்லாம் ஆபாசமாக எழுதியுள்ளார் என்பது விளங்கும்.அதையும் நம்பவில்லை எனில் அவரின் நாவல்களை படிக்கவும்.(வாந்தி வந்தா நான் பொறுப்பில்லை!!)
          நித்யானந்தா படத்தை பெருசா போட்டு அவரின் ஜகஜால யோகபயிற்சிக்கு ஆள் சேர்க்கும் வேலையை நாசூக்காக தன் தளம் மூலமாக செய்து வந்தவர் நித்தி மாட்டியவுடன் அவரின் படத்தை எடுத்துவிட்டு தன க்லோசப்பை போட்டுகொண்டார்.(ஆமா இவுரு தளம் ரொம்ப நாளா beta வாகவே இருக்கே.அடுத்து என்ன   Release candidate ஆ?நமக்கு தெரியல.அப்புறம்அந்த சாமியார் பற்றி புலனாய்வு ஏட்டில் வாரா வாரம் கட்டுரை எழுதி காசு பார்த்ததோடு மட்டுமலாம அதை புத்தகமா வேறு வெளியிட்டார்.
          சாய் பாபா படத்தில் கொட்டிய விபூதி,சாமியடி சித்தரின் சமாதி, தர்காவில் குறி சொன்ன முதியவர் என இவரின் அலப்பல்கள் கொஞ்சநஞ்சமில்லை.
              மல்லுகட்டும் நோக்கிலோ அல்லது வேண்டுமென்றே சேறுவாரி  இறைக்க வேண்டுமென்றோ  நான் இதை எழுதவில்லை.சொல்ல நினைத்ததை சொல்பவன் நான்.அம்புட்டுதேன்


     

    புதன், 22 ஜூன், 2011

    கேட்க கூடாத கேள்விகள்

    கருணாநிதியிடம்: 1 .ஒரு சில பார்ப்பன ஊடகங்களால்தான் நீங்க தோற்கடிக்கப்பட்டதா சொல்றீங்க.ஒரு சில பார்ப்பனர்கள் சொல்வதை கேக்கும் அளவுக்கா   திராவிடர்கள்(உங்கள் மொழியில்) இருக்கிறார்கள்?அப்போ அறுபது வருட திராவிட இயக்கம் கிழித்தது என்ன?
    ,
    2 .உங்கள் பெண்ணை விடுவிக்க எதுக்கு டில்லி போகணும்?உங்களோட "சர்வரோக நிவாரணி" அதான் அண்ணா சமாதி முன் இரண்டு மணி நேர உண்ணாநிலை இருக்கலாமே!!அதன் மூலம் நீங்க போரையே நிறுத்திய சாதனையாளர் அல்லவே!!
    *
    ஜெயலலிதாவிடம்:சமச்சீர் கல்வி ஆய்வுக்குழுவில் கல்வியாளர்கள் என்ற பெயரில் பகல் கொள்ளையர்களையும் தமிழே தெரியாதவர்களையும் நியமித்ததன் நோக்கமென்ன?
    *
    ராமதாசிடம்:சமச்சீர் கல்வி பாமாக ஆட்சி வந்தாதான் கொண்டு வரப்ப்படும்னு சொல்றீங்க.சரி.ஓங்க பேரப்பசங்க டில்லியில் தமிழை ஒரு பாடமாக கூட கொண்டிராத பள்ளியில் படிக்கிரான்களே.அதை பத்தி?
    *
    சிபிஐ யிடம்: 1 :சாதிக்  பாட்சா பிரேத பரிசோதனை அறிக்கையை ஏன் வெளிய விடவில்லை?
    2 .கனிமொழி டாடா மற்றும் நீரா ராடியாவுடன் பேசிய பேரத்தை ஏன் நீங்கள் அவருக்கெதிரான வழக்கில் சேர்க்கவில்லை?
    *
    தனுசிடம்: எதுக்கு ஒனக்கு தேசிய விருதுன்னு இப்போவாவது காரணம் தெரிந்ததா?ஏன்னா எங்களுக்கும் தெரியலை.அதான்
    *
    அழகிரியிடம்: காங்கிரசுடன் உறவு முரியாதமைக்கு உங்களுக்கு  "புழல் பயம்" இருப்பதுதான் காரணம்னு சொல்லப்படுது.அதை பற்றி?
    *
    ஸ்டாலினிடம்: சிவகங்கை பார்முலா படி ஜெயிச்சதா சொல்றாங்களே.அது பற்றி:
    *
    திக்விஜய் சிங் : நீங்க இன்னும் "பழைய நெனப்புடா  பேராண்டி" கணக்கா மத்திய பிரதேச முதல்வர் கனவிலேயே வாய்க்கு வந்த படி அள்ளி தெளிப்பதாக சொல்லப்படுவது பற்றி?
    *
    ராகுல் காந்தி: போஸ்கோ ஆலையை எதிர்த்து நீங்களும் சீன் போட்டீங்க.ஆனா இப்போ மீண்டும் பழங்குடி நிலங்கள் பிடுங்கப்பட்டு தொழிற்சாலை ஆரம்பிக்கபோறான்களே!!அப்போ ஓங்க போராட்டம் நாடகம்னு ஒப்புகிரீங்களா?
    *
    தயாநிதி மாறன்: நீங்க கனிமொழியை சிறையில் சந்திக்கவில்லை.ஏன் எப்படியும் கூடிய சீக்கிரம் அங்க போகத்தானே போறோம்குறதனாலையா  ?

    மன்மோகன் சிங்கின் உலக சாதனை



    சராசரியாக பதினோரு நாட்களுக்கொரு முறை வெளிநாட்டு பயணம்(ஏன் எதுக்குநெல்லாம் கேக்ககூடாது!!) செய்து உலக சாதனை செய்துள்ளார் அமெரிக்காவின்  தீவிர விசுவாசி உலக வங்கியிடம் இன்னும் பென்சன் வாங்கும் மன்மோகன்  சிங் .இதற்கு பாராட்டு விழா நடத்தாத காங்கிரசை கண்டிக்கிறேன்.ஒலக நாயகனுக்கு ஒன்பது வேடங்கள் போட்டு நேரு ஸ்டேடியத்தில் ஒரு விழா எடுங்க....வெளங்கிடும்!!யார் வீட்டு காசு?இவுரு எதுக்கு வெளிநாடு போறாரு இதெல்லாம் கேக்க  கூடாத கேள்விகள்.

    திங்கள், 20 ஜூன், 2011

    ராஜபக்சேவுக்கு மறைமுக ஆதரவு ;வினவின் மட்டரகமான கட்டுரை

    ******************************************
            இந்த ஒலக நாயகனோ உள்ளூர் நாயகனோ அதான் கமலஹாசன் குணா படத்தில் சொல்வார்."நடு  நடுவுல மானே தேனே பொன்மானே இதெல்லாம்  போட்டுக்கணும்" அதாவது பாடல் எழுதுபவர்களை கிண்டல் அடித்திருப்பார்.
    அது போல வினவின் கட்டுரைகளில் தவறாமல் இடம்பெறுவது:"பார்ப்பன,பாசிச,கோயபல்ஸ்,காவி கும்பல்,கார்பரேட்டு,போலீசு இதெல்லாம் தவறாமல் இடம்பெறும்.
           இப்போ எதுக்கு இதை சொல்லுகிரேனேன்றால் வினவு இப்போது இலங்கை தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட சேனல் 4 வீடியோ பற்றி ஒரு கட்டுரை என்ற  பெயரில் ராஜபக்சே தவிர அவரை எதிர்ப்பவர்கள் எல்லோர் மீதும் சேற்றை வாரி இறைத்திருக்கிறது.
           தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் அவர்கள் கொண்டு வந்த தனி தீர்மானங்களான இலங்கை மீது பொருளாதார தடை மற்றும் கட்ச்சதீவு மீட்பு இரண்டுமே ஏமாற்று வேலையாம்.இந்த வீடியோவை வெளியிட்ட இங்கிலாந்தும் நம்பத்தகுந்தது இல்லையாம்.சரிங்க்ணா யாரை நமப் நீங்க சொல்லுங்க?!!
              கொத்து குண்டுகளை இலங்கைக்கு சப்ளை செய்த ரசியாவை நம்பனுமா?எயிட்ஸ் நோய் கொண்ட சீன கைதிகளால் தமிழச்சிகள் புனரப்படுகின்றனர்.அந்த சீனாவை நமப்னுமா?இல்லை கம்யூனிச நாடுன்னு சொல்லப்படும் இலங்கைக்கு ஆதரவு என அறிவித்த க்யூபா உடனா?யாரை நம்பனும் நீங்க சொல்லுங்க?
               இப்போது இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இலங்கை போர் குற்றங்கள் பத்தி விவாதிக்கப்பட்டது.ஆனால் வினவு சொல்வதென்ன?மேற்குலக நாடுகளை நம்ப வேண்டாம் அவர்கள் ஏமாற்றுவார்கள்.சரி கிழக்குலக நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் எதனா உதவிக்கு வருதா சொல்லுங்க?இல்லை ஒங்களுக்கு ஏதாவது நாட்டை அப்படி தெரியுமா?
         கட்டுரையில் வசதியாக இலங்கை போரிலும் சரி அதற்கு பின்பும் சரி ரசியா சீனாவின் பங்கை மறைக்கிறது வினவு .இலங்கைக்கு ஆதரவளித்த க்யூபாவையும் ஒரு வார்த்தை சொல்லவில்லை.ஏதாவது நல்லது நடக்காதான்னு அத்தனை ஈழ தமிழர்களும் இங்குள்ள இன மானமுள்ள தமிழர்களும் எதிர்ப்பார்த்துகொண்டிருக்கையில் "அவனை நம்பாத அவன் லொட்டு! இவன நம்பாத இவன் லொசுக்கு"ன்னு திண்ணையில் பாக்கு இடித்துக்கொண்டே தெருவில் போகிற வருபவர்களை திட்டிகொண்டிருக்கும் கிழவி போல வினவு ஆனது  கொடுமையிலும் கொடுமை.அப்போ யார்தான் நல்லவங்க நீங்களே சொல்லுங்க!
              இரண்டு உதாரணங்கள்:நீச்சல் தெரியாத ஒருவன் காட்டாற்றில் மூழ்கி கொண்டிருக்கிறான்.கடைசி மூச்சை இழுத்து பிடித்து கொண்டு உதவிக்கு கையை மேலே தூக்கி ஆட்டிகொண்டிருக்கிறான்  .அப்போது யாரோ ஒருவர் அந்த பக்கம் வந்த இவனுக்கு கை கொடுக்கிறார் அவனும் மேலே வருகிறார்ன்.கைகொடுத்தவன் ஏதோ ஒரு வகையில் தீயவன் என்பதால் சீ வேணாம் போ நான் மூழ்கிடுரேன்னா சொல்லுவான் அந்த சாககிடப்பவன் ?அப்படி இருக்குது வினவு சொல்வது.அதாவது மூழ்குபவன் தன்னை காப்பாற்ற நீளும் கைக்குரிய அந்த நபரின் கிரிமினல் ரெகார்டை  சாவகாசமா ஆராய்ஞ்சி அதன் படி இவனால் காப்பாற்ற படுவதா வேண்டாமான்னு முடிவு செய்யணுமாம்,.அது சரி ஒரேடியா சுடுக்காட்டுலதான் அப்படி முடிவு செய்ய முடியும்.
                இன்னொன்று: ஒருவன் வண்டியோ காரோ சைக்கிளோ ஒட்டிக்கொண்டு போகிறான்.இடது பக்கம் திரும்ப தனது இடது கையை நீட்டி சைகை செய்கிறான்.இது வினவின் பார்வையில் எப்படி இருக்கும் தெரியுமா?அவன் சைகை செய்தது யாரவது அவனை மோதிவிட்டால் "யோவ் நாந்தான் கை காட்டுநேனுல்ல நீ என்ன குருடா"அப்படின்னு கேக்கதான் அவன் கை காடுறான்னு சொல்வது போல.
             ஐநா பாதுகாப்பு சபையில் இலங்கைக்கு எதிரா தீர்மானம் கொண்டு வந்தா அதை எதிர்த்து வீடோ அதிகாரத்தை பயன்படுத்துவோம்னு மிரட்டுகிறது ரசியா மற்றும் சீனா.இந்தியா பற்றி சொல்லவே தேவையில்லை.அதுவும் போற்குற்றத்தில் பங்காளி என்பதால் வழக்கம் போல தீர்மானத்தை எதிர்த்துதான் ஓட்டளிக்கும்.ஆக கிழக்கு அல்லது மூன்றாம் நாடுகளில் இலங்கையை எதிர்ப்பவர் யார்?வினவு சொல்லுமா?இவுகளுக்கு தெரிந்ததெல்லாம் கார்பரேட்டு அமெரிக்கா பார்ப்பன,காவி கும்பல்.இலங்கை தமிழர்கள் சாகலாம்.ஆனால் மேற்குலக நாட்டின் உதவியை மட்டும் பெறக்கூடாதாம் .சே!!எத்தகைய கொடூர சேடிச மனப்பான்மை!இலங்கை இனவொழிப்பு மே 2009 இல் முடிந்ததும் வினவு&கோ ஒரு கட்டுரை எழுதியது."நாம் அப்பவே சொன்னோம் இதெல்லாம் சரிப்படாது......." என்று சேடிசத்தின் உச்சத்தை அந்த கட்டுரையில் காண முடிந்தது.அதன் பின் இந்த கட்டுரை.காரி  உமிழ தோன்றுகிறது.
       ஒங்கள  யாரும் "தமிழர்களுக்காக போராடு!கட்டுரை  எழுதுன்னு கேக்கவில்லை"அதனால் இது போன்ற அபத்தத்தை  நிறுத்திக்கொள்ளவும். இல்லை முடியாதுன்னா  ராஜபக்சேவின் அடிப்பொடி கூட்டத்தில் சேர்ந்துடுங்க இங்க நாங்க நிம்மதியா இருப்போம்.

       

    ஞாயிறு, 19 ஜூன், 2011

    மானம்கெட்ட தமிழ் ஊடகங்கள்; சேனல் 4 இன் தைரியம்


     (எச்சரிக்கை :இதை 18 வயதுக்குட்பட்டவர்கள் இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)
    இதை தைரியமாக வெளியிட்ட சேனல் 4 இக்கு நன்றி.அது மட்டுமலாமல் இதை பற்றி இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி அதற்கு டேவிட் கேமரோன் பதிலளித்துள்ளார்.ஆனால் இந்திய +தமிழ் ஊடகங்கள் இதை பற்றி ஒரு **** இம் கண்டுகொள்ளவில்லை.ஆமா நித்யானந்தாவின் சரச லீலையை ஆயிரம் முறையாவது காட்டிய அந்த பன் டிவி இப்போது எங்கே?கொரங்காட கூத்தாட காட்டத்தான் குலைன்ஜர் டிவிக்கு இந்த  கொடூரமான போற்குற்றத்தை பற்றி பேச  ஏது  நேரம்??எல்லாம் மானம்கெட்ட தமிழ் மக்களை சொல்லணும்.
    இதை பற்றி இந்திய நாடாளுமன்றத்தில் பேசுவார்களா?தமிழின துரோகிகள் உள்ளவரை அது நடக்காது.

    சனி, 18 ஜூன், 2011

    சாய் பாபாவின் தனியறையில் வழியும் தங்கம்,வைரம் குவியல்!!!


    சாய் பாபா மண்டையை போட்டபின் அவரது தனியரையான் யஜூர்வேத மந்திர் திறக்கப்பட்டது.அதில் 12 கோடி ரூபாயும், 82 + கிலோ தங்கமும் இன்னும் வைரம் நகைகள் என ஒரு கருவூலமே கண்டெடுக்கப்பட்டு வங்கியில் போடப்பட்டதாம்.எப்படி இம்புட்டு காசு வைரம் தங்கம்?செக்கிழுத்தியா?கொளுத்து வேலை செய்தாரா?கல்லுடைத்தாரா?ஒண்ணுமில்ல.வாய்ல லிங்கத்த போட்டுகினு மக்கள் முன்னாடி வாந்தியெடுத்து அதை மீண்டும் வெளியே வரவைத்து விரலிடுக்கில் விபூதி வரவைப்பது கையிலிருந்து  செயின் வரவைப்பது(இந்த செயின் மோதிரமேல்லாம் வி ஐ பி க்களுக்கு மட்டும்தான் கொடுக்கப்படும்.சாதாரண மக்களுக்கு விபூதிதான்!!ஏன் எல்லோருக்கு செயின் மோதிரம் கூத்தா வறுமை ஒழிந்திருக்குமே!!இத எவனாவது கேட்டீங்களா?கேக்க  மாட்டாங்க கேக்காம மண்டையை ஆட்டும் மக்கள் இருக்கும் வரை சாய்பாபா நித்யானந்தா பிரேமானந்தா  ராம்தேவ் போன்ற மக்கள் தலையில் மிளகாய் அரைப்பவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்.திருந்துக மக்களே கும்புடணுமா?அதான் ஆயிரம் கோவில் இருக்கே!!சாமிய கும்புடுங்க(இதில் நான் உடன்படுவதில்லை) ஆசாமிய இல்லை!!

    கனிமொழி ஜாமீன் வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திடீர் விலகல்

    நான்தான் ஏற்கெனவே பலமுறை சொல்லியிருக்கேன்.இந்த வழக்கு விரைவில் ஊத்தி மூடப்ப்படும்னு  .அவ்வளவுதான் வழக்கு முடிஞ்சிது.எல்லாரும் அவங்கவங்க பொழப்பை பாருங்க!!ரெண்டு லட்சம் கோடி சுவாகா!!
    வெளியில் வந்ததும் கனிமொழிக்கு "சிறை சென்று வந்த பெண்சிங்கம்" பட்டம்  வழங்கப்பட்டு கட்சியில் இன்னும் உயர்பதவி கிடைக்கபெருவார்.திமுக கட்சியின் தகுதியே ஊழல்,அடிதடி ஜெயில் வாழ்க்கைதானே!!
    ******************
    பி.கு:அப்புறம் ஸ்பெக்ட்ரம் வழக்கு??தலைவர் கவுண்டமணி பாணியில் உ  ஊ ஊ 

    வியாழன், 16 ஜூன், 2011

    ராகுலும் ராம்தேவும்!!

    இரண்டு பேருக்கும் என்ன ஒற்றுமைன்னா  கேக்குறீங்க!!ரெண்டு பேருமே போலியான மக்கள் அக்கறையை காட்டியும் மக்களை கவரமுடியாமல் தோற்றவர்கள்.ராகுல் உத்தர பிரதேசத்துக்கு தனது படைபலம் வண்டியில் சூழ விவசாய நிலத்தை அடிமாட்டு விலைக்கு (ஆம் அந்த நிலப்பறிப்பதை அவுரு எதிர்க்கலை.இதை கவனிக்கவும்  !!) அரசு பிடுங்குவதை கண்டித்து அந்த விவசாயிகளை சந்திக்க மேற்சொன்னவாறு போனார்.ஆனா பொடரீல அடிச்சி போலீசு கைது பண்ணதும் "அய்யா சாயங்காலம் வரைக்கும் வெச்சி உட்ருங்கைய்யா" என கெஞ்சி ரிலீசு ஆயிட்டார்.அப்புறம் அவுரு அந்த பக்கம் தலை வெச்சும் படுக்கல.இன்னொரு நாடகம் மாதா மாதம் ஏதாவது ஒரு தலித்தின் குடிசைக்கு சென்று அவுங்க தனக்குன்னு வச்சிருக்கும் கொஞ்ச உணவையும் இவுரு புடிங்கி சாப்பிட்டிட்டு அவுங்க கட்டிலை பிடுங்கி இவுரு படுத்துக்குவார்.இதனால் இவுரு தலித்துகளின் தோழர் எனகாட்டுராராம்!!அடங்கப்ப eththana கிராமத்துல இன்னும் ரெட்டை குவளை முறை இருக்கு!!தலித்துகளின் வாயில் மலம்  கரைத்து ஊற்றும் அவலம் இன்னும்தானே நடக்குது.பல ஆயிரம் வன்கொடுமை குற்றங்கள் தொடர்பான வழக்குகள் பரணில் இருக்கு!!அதெலாம் நீங்க கேக்க மாட்டீங்க !!ஏன்னா   ஒங்களுக்கு வேண்டியது அமேதி தொகுதி ஒட்டு மட்டுமே!!இதே ஒரிசாவில் போஸ்கோ ஆலைக்காக பழங்குடி இன மக்களின் நிலங்களை  பிடுங்கும் ஒரிசா அரசை  கண்டிச்சீங்களா?தமிழ்நாட்டுளையும் சென்ற ஆட்சியில் விலை நிலங்கள் ஓட்ட பிடுங்கப்பட்டது.நீங்கதான் பிசி போல!!நீங்க பிரசாரம் போனாலே காங்கிரசு அந்த மாநிலத்துல  அவுட்டு.தொடர்ந்து பிரசாரம் வாங்க அதான் நல்லது மக்களுக்கு!!
    ******************************************************************************
      அப்புறம் இந்த ராம்தேவ்.அதான் மூஞ்சி பூரா தாடி.காலை கையை வளைத்து மேடையை தூக்குவது(!!?) போன்ற (சர்க்கஸ் சிறுமிகூட செய்யும்) வித்தைகளை காட்டி ஆயிரம் கோடி சொத்து சேத்தவர்தான்.கருப்பு பணத்துக்கேதிரா உண்ணாவிரதம் இருந்தாரு(எலுமிச்சை சாறு குடிச்சிகிட்டே).சரி இவுரு யோகா குரு பல மாதங்கள் சாப்பிடாம இருப்பாருன்னு சிலர் சொல்ல பத்து நாலு கூட தாங்காம "இப்பவே கண்ணா கட்டுதேன்னு" மருத்துவமனைல சாஞ்சிடாரு  !!அப்புறம் கருப்பு பணத்த இனி யாரு சுவிஸ் வங்கியில் இருந்து கொண்டு வரப்போராங்கலோன்னு மெழுகுவத்தி நடுத்தர வர்க்கம் கன்னத்தில் கைவைத்து காத்திருக்கு.!!நித்தி நீங்க ட்ரை பண்ணலியா?ஆக ரெண்டு பேரும் மக்களை ஏமாத்த முடியாம தோத்தவங்க!!

    இவரை பின்பற்றுங்கள்!!

    ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆனந்தகுமார் தனது கோபிகா என்ற தனது மகளை தானே சென்று அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்த்து சத்துணவும் சாப்பிட வேண்டுமென வலியுறித்தியுள்ளார்.இதற்கு ஒரு சபாஷ்!!


    இதேபோல எல்லா அரசு ஊழியர்கள்,அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதும் தனக்கோ தன குடும்பத்துக்கோ வியாதி என்றால் அரசு மருத்துவமனையை நாடுவதும் தொடர்ந்தால் தானாக இரண்டின் தரமும் உயரும்.சும்மா அபோல்லோவில் போய் படுத்துகொல்வது.தமிழ் வாழ்கன்னு தெருவுல கொடி   புடிச்சிட்டு புள்ளையை டில்லியில் தமிழை ஒரு பாடமாக கூட சொல்லித்தராத பள்ளியில் சேர்ப்பது போன்ற போலி பகட்டுகள்  இனி ஒழியட்டும்

    புதன், 15 ஜூன், 2011

    தமிழன்னா இளக்காரம்!!!சட்டி தலையனின் திமிர் பேச்சு

    சட்டி தலையன் (அதான் சிவசங்கர மேனன்)இலங்கைக்கு சென்று போற்குற்றவாளி நவீன ஹிட்லர்  ராஜபக்சேவுடன் பேசிவிட்டு வந்ததும் நிருபர்கள் "இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க தமிழக சட்டமன்றம் தீர்மானம் போட்டுள்ளது.இது பற்றி பேசினீர்களா?" என கேட்டமைக்கு "தனி மனிதனின் புலம்பலைஎல்லாம்    கணக்கில் எடுத்துகொள்ள முடியாது என கூறியுள்ளான் சட்டிதலையன்.எது தனி மனிதன்?ஏழு கோடி பேர் வாக்களித்து தேர்ந்தெடுத்த தமிழக சட்டமன்றமா?உனக்கென்னா அவ்வளவு இளக்காரம்?அப்போ ஜனநாயகம் மன்னாங்கட்டீன்னு   கூவுரதேல்லாம் சும்மாவா?தமிழக சட்டமன்ற தீர்மானம்(இலங்கை  மீது பெருளாதார தடை) ஏழு கோடி தமிழக மக்கள் மற்றும் நாடு கடந்த தமிழர்களின் தீர்மானம் தெரியுமா?ஒனகென்ன தெரியும்?கேரளாவுல கடஞ்சாயா துன்னவநெல்லாம் தமிழக சட்டமன்றத்த பத்தி பேச வந்துட்டான்.
                 நேரு நேருன்னு ஒருத்தர் ஓங்க காங்கிரஸ் கட்சியில் இருந்தாரு ஒனக்கும் சோனியாவுக்கும்  தெரியவாய்ப்பில்லை!!அவுரு என்ன சொன்னாருன்னா "ஒவ்வொரு மாநில  உணர்வும் மதிக்கபடனும்.ஒரு மாநிலத்தின் ஒட்டு மொத்த உணர்வு மத்திய அரசின் உணர்வுக்கு எதிராக இருந்தால் அந்த மாநில உணர்வுக்கே நாம் மதிப்பளிக்க வேண்டும்" என்று சொன்னார்.ஒனகென்ன  தெரியும் அதை பத்தி!!நல்லா படி.படிக்கிற காலத்துல சகீலா படம் பார்த்துருப்ப.

    நித்திக்கு தண்டனை கொடுத்த குதிரையின் தைரியம் நீதிமன்றத்துக்கு இல்லை!!

    நித்யானந்தா வழக்கம் போல குதிரையின் மீதேறி உடற்பயிற்சி செய்வானாம்!!(அதென்ன பயிற்சியோ!!)அப்படி செய்யும் பொது குதிரை மிரண்டு(!!) இவனை கீழே தள்ளி விட இவனுக்கு கைமுறிந்து இப்போ ஆஸ்பித்திரியில் .சபாஷ் அந்த குதிரைக்கு.இவனின் சொத்துகளை முடக்கி இவனை உள்ளே தள்ள வக்கில்லாத நீதிமன்றத்தை விட இந்த குதிரைக்கு தைரியம் அதிகம்.ஒருவேளை குதிர பேரு ரஞ்சிதா இல்லையோ!!

    சனி, 11 ஜூன், 2011

    காங்கிரசுடன் கூட்டு வேண்டாம் முதல்வருக்கு வேண்டுகோள்

    ஏற்கெனவே சில தினங்களுக்கு முன் நடந்த திமுக கூட்டத்தில் திமுக காங்கிரசு உறவு அறுபடுமென  எல்லோரும்(புலி வருது கதையா) எதிர்ப்பார்த்த நிலையில் கனிமொழி மீதான பிணை விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் வருகிறது  .அதன் முடிவை பொறுத்து இருப்பதா வெளியேறுவதா என முடிவெடுத்ததாக தெரிகிறது.கனிக்கு ஜாமீன் கொடுக்காத பட்சத்தில் அனைத்து திமுக எம்பிக்களும் ராஜினாமா செய்வராம்(நம்புவோம்!!).
             அப்போ உச்சநீதிமன்றத்த நடத்துவது காங்கிரசா?என்ற கேள்வி எழும்புது.போபால் விஷவாயு வழக்கை ஊத்தி மூடியதிலயே உச்ச நீதிமன்றத்தின் நம்பகத்தன்மை  கேள்விக்குறியானது.இந்த ஸ்பெக்ட்ரம் வழக்கை கண்காணிக்க வில்லையா என சிலர் கேள்விஎழுப்பலாம்!!ஆனால் எத்தனை வருடத்துக்கு?பல வருடங்கள் இழுத்தடிக்கப்பட்டு இந்த வழக்கு ஊத்தி மூடப்படும்.அதற்குள் உச்சநீதிமன்ற நீதிபதிகளில் நேர்மையானோர் சிலர் ரிட்டையர் ஆகி விடுவர்.அந்த இடத்துக்கு காங்கிரசுக்கு ஜால்ரா போடும் ஆட்களை போட்டாலும் ஆச்சர்யமில்லை.
             இப்போ காங்கிரசின் திட்டம் ஜெவை வளைப்பது.இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் மற்றும் கட்ச தீவை மீட்க வேண்டும் என்ற இரண்டு தீர்மானங்கள் சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றிய உடனே ஓடி வந்தார் மொட்டை பாஸ்!! சிவசங்கர மேனன்.ஏனெனில் ஒருவேளை நேர்மையாக போர்குற்ற விசாரணை நடக்கும் பட்சத்தில் பாதிக்கபடுவது அதிகம் இந்தியாவாகத்தான்(அதாவது காங்கிரஸ் & கோ) இருக்கும்.
            கடைசி கட்ட போரில் இலங்கை தயங்கி நின்ற பொது கடைசி வரை அழித்தொழி என ஆதரவு கொடுத்தது இந்தியாதான்.இதில் எம் கே நாராயணன் சிவசங்கர மேனன் விஜய் நம்பியார் எல்லாவற்றுக்கும் மேலே சோனியா காந்தி அப்புறம் தமிழ் துரோகி சிதம்பரம் எல்லோரும் மாட்டுவர்.எனவே ஜெவை தன்னை கட்டிகொண்டாள் தப்பிக்கலாம் என்ற நிலையில் 13 ஆ தேதி டில்லி செல்கிறார் ஜெ  .அப்போது சோனியா அவரை சந்திப்பார் என சொல்லபடுகிறது.
                   முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்.தயவு செய்து இனத்த்ரோகி காங்கிரசை புறக்கன்க்கவும்.இப்போதுதான் தமிழர்கள் சிறு நம்பிக்கை ஒழி தோன்றுவதாக நம்ப ஆரம்பித்துள்ளனர்.இந்த நிலையில் காநிரசுடன் கூட்டு வேண்டாம்.அனைத்து தமிழக கட்சிகளும் காங்கிரசை புறக்கணிக்க வேண்டும் இனி வரும் அனைத்து தேர்தல்களிலும்  !!

    வியாழன், 2 ஜூன், 2011

    ராசா வைக்கபோகும் செக்!!ஸ்பெக்ட்ரம் வழக்கு ஊத்தி மூட முயற்சி!!

    ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா தனக்கு தானே வாதாடப்போகிராராம்!!பிரதமருக்கு தான் அனுப்பிய பெற்ற 18 கடிதங்கள் கொண்டு இதை செய்யப்போகிறாராம்!!இதை உடனே "ஆஹா நல்ல விஷயம் பிரதமரும் மாட்டுவார்" என சில ஒன்னும் தெரியாதவர்கள் நினைக்கிறார்கள்.ஆனால் உண்மையில் என்னவாகுமெனில் ராசாவின் இந்த செக் வைக்கும் முயற்சியில் சோனியா&கோ'வை  ஸ்பெக்ட்ரம் வழக்கை கொத்ரோச்சி வழக்கு போல,போபால் விஷவாயு  வழக்கு போல ஊத்தி மூட வைக்கும் ஒரு தந்திரமே!!
         "நீ என்ன வெளிய உடலையில்ல!!சரி நான் உன்னை மாட்டி விடுகிறேன்"என சின்ன புள்ள தனமா இந்த கிரிமினல் வேளையில் ஈடுபடவுள்ளார் ராசா!இப்போது அந்த 18 கடிதங்களால் பிரதமரும் மாட்டுவர்.அப்புறம்?ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் 60% பணத்தை தன தங்கச்சிகளான அனுஷ்க மற்றும் நாடியா ஆகியோரிடம் அளித்ததாக சொல்லப்படும்  சோனியாவும் மாட்டுவார்.அதனால் இப்போ என்ன செய்வார் சோனியா?ஒண்ணுமில்ல.ஸ்பெக்ட்ரம் வழக்க ஊத்தி மூடும் வேலையைத்தான் செய்வர்.அப்புறம் ராசா வெளியே மொரிஷியஸ் தீவில்.சோனியாவின் தங்கச்சிங்கோ எஸ்கேப்பு!!வாழ்க சனநாயகம் 

    வெள்ளி, 27 மே, 2011

    பீப்ளி லைவும் டுபாகூர் ஆடுகளமும்

    பீப்ளி லைவ் என்ற படத்தை பற்றி நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.விவசாயிகளின் அவல நிலையை பகடி செய்து கார்பரேட்டு மரமண்டையில் ஏறும் அளவில்  சொன்ன ஒரு அருமையான படம்.இந்திய விவசாயிகளின் அவல நிலை அவர்களை அரசியல்வாதிகள்+அதிகாரிகள் நடத்தும் அவலமான இழிவான விதம்,பொனத்தின் வாயில் கூட அரிசியை புடுங்கி தின்பதுபோல இந்த விவசாயிகளின் அவல நிலையை நேரலை செய்து டி ஆர் பி ரேட்டிங் பெறலாம் என அலையும் தனியார் செய்தி தொ(ல்லை)லைகாட்சிகளின் பண வெறி என எல்லாவற்றையும் பொட்டில் அடித்தாற்போல சொன்ன அருமையான படம்.இதுவும் 2010 இல்தான் வெளிவந்தது.ஆனால் இந்த படத்திற்கு ஒரு தேசிய விருதும் கொடுக்கப்படவில்லை.!!மாறாக 2011 இல் வெளியான ஆடுகளம் என்ற சன் பிக்சர்சின் டுபாகூர் படத்துக்கு ஆறு விருதுகள் வழங்கப்பட்டது இந்த ஆண்டின் சிறந்த முரண் நகை!!இது கே டி பிரதர்ஸின்(அதான் கலாநிதி தயாநிதி!!)வியாபார மற்றுமதிகார வர்கத்தின் மீதான கில்லாடித்தனமான ஒரு கட்டுப்பாட்டையே காட்டுகிறதே  ஒழிய சிறந்த படத்தை அடையாளம் காட்டவில்லை!அரசாங்கம் என்பது(கம்யூனிஸ்டு வலது இடது பேதம் இல்லை) கார்பரேட்டுகளின் பிடியில்தான் நடக்கிறது என்பதை நான் ஏற்கெனவே கோரியுள்ளேன்!!அப்படி பட்ட கார்பரேட்டுகளை,முதலாளிகளை பகடி செய்த பீப்ளி லைவ் விருதுக்கு தேர்ந்தேடுக்கபடாதது ஒன்னும் ஆச்சர்யம் அளிக்கவில்லை.
    *******************************************************************
    இது குறித்த தீக்கதிர் கட்டுரை கீழே!!
    http://www.theekkathir.in/index.asp

    புதன், 25 மே, 2011

    RAW plan to turn jayalalitha against srilanka tamilians? | ஜெ.வை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்ப 'ரா' முயற்சி?

    ஏற்கெனவே நேற்று இது குறித்து நான் எழுதியிருந்தேன்.இப்போது மேலும் அது குறித்து வெப்துனியா மூலம்:

    RAW plan to turn jayalalitha against srilanka tamilians? | ஜெ.வை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்ப 'ரா' முயற்சி?

    நன்றி வெப்துனியா


    செவ்வாய், 24 மே, 2011

    கே.பியின் காமெடி பேட்டி

    குமாரன் பத்மநாபனின் பேட்டியை நேற்று சி என் என் ஐ பி என் இல் ஒளிபரப்பினார்கள.என்னடா தேர்தல் பிரசார காமெடிகள் ஓய்ந்துவிட்டதே என்ற கவலையை போக்க இது உதவியது.எனக்கெனவோ வடிவேலுவின் பிரசாரம் நினைவுக்கு வந்தது.
    பிரபாகரன் திமுகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவராம்.அடங்கப்பா!.தார்மீக ஆதரவோ பைசா காசோ  கூட கருணாநிதி விடுதலைப்புலிகளுக்கு கொடுத்ததில்லையே!!கொடுத்ததெல்லாம்(ஆதரவும்,பணமும்) எம் ஜி ஆர் என தமிழர் அனைவருக்கும் தெரியும்(ஏ.சியில் குந்திகினு பெனாத்தும் வடநாட்டு ஊடகங்களுக்கு ஒரு கருமமும் இது பற்றி தெரியாது என்பது சொல்லி விளங்க வேண்டியதில்லை!).அது தவிர பிரபாகரன் பார்ப்பன எதிர்ப்பால் ஈர்க்கப்பட்டாராம்!!அதனால் அவர் ராஜிவை கொல்ல உத்தரவிட்டாராம்.அது தவிர ஜெயாவையும் கொல்ல முயற்சி செய்தும் சந்தர்பம் கிடைக்காததால் கொல்லளியாம்!!இதென்ன புது கதை!!அவுரு திருமணத்தை நடத்தியது ஒரு பார்ப்பன குருக்கள்னு இவிங்களுக்கு தெரியுமா?இல்லை குவாட்டரோ  கஞ்சாவோ அடிச்சிட்டு பெனாத்தும் திருமணத்தை நேரில் பார்த்த கே பிக்கு தெரியாதா?
           ராஜபக்சேவை சர்வதேச போற்குற்ற்வாளியாக அறிவிக்க வேண்டுமென ஜெயா சென்ற வாரம் கூறியிருந்தார்.இதை மாற்றி ஜெயாவை தாஜா செய்யத்தான் இது போன்ற விஷம பேட்டிகள் ஒளிபரப்பபடுகின்றன என்பதுதான் உண்மை.இதில் ராஜபக்சேவின் பங்குதான் அதிகம்.அது தவிர எப்போதும் ராஜபக்சேவுக்கு சொம்பு தூக்கும் இந்தியாவின் தமிழின விரோத காங்கிரசு பற்றி சொல்ல வேண்டியதில்லை.!!!
            வடநாட்டு ஊடகங்களோ பத்திரிக்கையோ அல்லது அந்த மக்களோ என்றுமே  தமிழர்களையோ அவர்களின் உணர்வுகளையோ புரிதுகொண்டதில்லை.புரிந்துகொள்ளவும் போவதில்லை என்பதற்கு இந்த பேட்டியை ஒளிபரப்பியதே சான்று!!
             உடனே ஜெயாவும் எனக்கு எப்போதும் கொலை மிரட்டல் இருந்துள்ளதுன்னு சைடு வாத்தியம் வாசிக்கிறார்.இவர் வீட்டு முன்பு எவனையோ செட் செய்து கல் வீச செய்து இதை செய்தது புலிகள் என சொன்னவர்தான் ஜெ !ஐயோ புலி அந்தோ  புலி!! என அவரின் ஊடகமும் தொடர்ந்து சொல்லிவந்துள்ளது.அது சரி பார்ப்பனர்களின் புத்தி வடநாட்டு மக்களின் புத்தியோடு ஒன்றியுள்ளது என்பதற்கு இதே சான்று!!
             2001 -2006 இல் கடற்கரையில் ஏதாவது ஷூ சாக்சு மிதந்து வந்தாலும் "ஐயோ இது பிரபாகரனின் ஷூ" என சொல்லி வந்தது ஜெயா டிவி என யாரும் மறந்திருக்க மாட்டார்.
              இப்போது இந்த துரோகி கே பியின் பேட்டி உலக அரங்கை தன மீதிருந்து திசை திருப்பவே ராஜபக்சே கோஷ்டி செய்யும் லீலை  என்பது மூளை உள்ளவர்களுக்கு விளங்கும்
      

    ராசா குறித்து

    ராசா தலித் என்பதால் பழிவாங்கப்படுகிறார்.ஆரிய திராவிட யுத்தம் blah blah blah என கூறிய கருணாநிதி இப்போது தன மகளை சிறையில் அடைத்தபோது மட்டும் நேரில் போய்  பார்த்ததேன்?தலித்தான ராசாவை அப்போதே நேரில் ஏன் பார்க்கவில்லை?ஒன்றுமில்லை இந்த ஆரிய திராவிட உட்டாலக்கடிஎல்லாம் இப்போது மக்களுக்கு விளங்கியிருக்கும்.
    அப்புறம் பிணை கேட்டு மீண்டும் மீண்டும் விக்ரமாதித்யன் போல மனு தாக்கல் செய்கிறார் கனிமொழி.ஆனால் ராசா இதுவரை ஒரு முறை கூட பிணை கேட்டு மனு தாக்கல் செய்யவில்லையே!!!ஏன்னெனில் வெளியே வந்தால் சாதிக் பாட்ஷா கதைதான் தனக்கும் என அவருக்கு தெரியும்.அதனால் உள்ள இருக்குறதே பெஸ்டுன்னு நினைக்கிறார்!!

    கனிமொழியும்,நளினியும்

    கனிமொழிக்கு பிணை தாக்கல் செய்ய சொல்லப்பட்ட காரணங்கள் பல.அவற்றில் சில முக்கியமானதை மட்டும்  சொல்கிறேன்.
    *அவர் முதுநிலை பட்டதாரி
    *தனது பிள்ளையை கவனிக்க அவரை விடுவிக்க வேண்டும்
    *அவர் பெண்
    இப்போது இதே காரணங்களை ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறி சிறையில் இருக்கும் நளினிக்கும் பொருந்துகிறதே!!
    ஆயுள் தண்டனை என்பது பதினான்கு ஆண்டுகள் என வைத்து கொண்டாலும் அவர் இருபது  வருடங்களாக  சிறையில் வாடுகிறாரே!விடுவிப்பதில் என்ன தவறு?
    அவரும் பெண்.முதுநிலை பட்டதாரி மற்றும் வயதுக்கு வந்த பெண் குழந்தை உள்ளது.தனது பெண்ணை கவனித்து கொள்ள வேண்டிய முக்கியமான தருணமிது!இப்போது அவரை விடுவிப்பதில் என்ன தவறு?இதே போல் தான் முருகன் பேரறிவாளன்    சாந்தன் மற்றும் பிறரும் இருபது ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டனர்.ஆயுள் தண்டனை முடிந்து விட்டதே!!விடுவிக்க என்ன தயக்கம்?

    வெள்ளி, 20 மே, 2011

    பல கேள்விகள் ஒரே பதில்

    *பல தேசிய விருதுகள் "வாங்கப்பட்ட"(வழங்கப்பட்டதில்லை.கவனிக்க!!)ஆடுகளம் படம் அங்காடி தெருவை விட சிறந்த படமா?
    * கனிமொழி,சரத் குமார்(இவுரு வேற),ராசா,கல்மாடி  இவர்கள் மட்டுமே கைது ஏன்?டாடா நீரா ராடியா  உள்ளிட்டவர்கள் கைது செய்யப்படாததேன்?
    * அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள்  தேர்தல் பிரசாரத்தின் போது ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி ஒரு வார்த்தை சொல்லாததேன்?
    ******************************************************************
    எல்லாத்துக்கும் ஒரே பதில்:கார்பரேட் களவாணித்தனம் அல்லது முதலாளித்துவ சக்தி.
    .
    அங்காடி தெரு படம் முதலாளித்துவத்தின் கொடூர முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திய படம்.அதனால் அந்த படம் ஓரங்கட்டப்பட்டுள்ளது.ஏனெனில் எல்லா அரசும் (மத்திய மாநில,கம்யூனிஸ்ட்,வலது) கார்பரேட்டுகளை நம்பியே நடக்குது.அவர்களை தோலுரித்து காட்டிய படத்தை எப்படி முதலாளித்துவ அரசு ஒப்பு கொள்ளும்?

    வியாழன், 19 மே, 2011

    1200 கோடி வீண் !!

    என்னத்த சொல்ல 1200 கோடி மக்கள் வரிப்பணத்துல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் வியர்வையில் (சில தொழிலாளர்களின் மரணத்தில்) கட்டப்பட்ட புதிய சட்டசபை வளாகம் வாஸ்து சரியில்லைன்னு சில மூட ஜோதிடர்கள் கூறியதாலும் வீண் வீம்பாலும் ஜெயலலிதா பயன்படுத்த மாட்டேன் என்று கூறிவிட்டார்.அப்போ 1200 கோடி மக்கள் வரிப்பன செலவுக்கு என்ன பதில் சொல்றீங்க!!நீங்க 2001 -2006 முதல்வராக இருந்த பொது புதிய சட்டசபை வளாகம் கட்ட கூறிய காரணம் பழைய சட்டசபை வளாகம் ராணுவத்துக்கு சொந்தமான இடமென்பதால் அவர்கள் திரும்ப கேட்கின்றனர்.அதனால் புதிய சட்டசபை கட்ட வேண்டிய நிர்பந்தம்னு அண்ணா பல்கலைய சூறையாட பார்த்தீங்க(நான் உட்பட எல்லா மாணவர்களும் கையெழுத்து இயக்கம் நடத்தி அதை அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அனுப்பினோம்.அதனால் அந்த இடம் தப்பித்தது!)அப்புறம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்படும்னு சொல்லப்பட்டது.பின் உங்கள் ஆட்சி முடிந்து கருணாநிதி முதல்வராகி இந்த புதிய வளாகத்தை கட்டினார்!
            இப்போ ஓங்க வீண் ஜம்பத்தினால் அங்கு போகவில்லை!அல்லது மூடநம்பிக்கை காரணம்.பேசாம நீங்க  ஆளாளுக்கு சொந்த பணத்துல ஆளுக்கொரு சட்டசபை கட்டிகிங்க!ஓங்க இஷ்டப்படி வாஸ்து கூஸ்து தோஸ்துன்னு எல்லா மூடநம்பிக்கைகளையும் அங்கு பின்பற்றிகுங்க.மக்கள் வரிப்பணத்துல விளையாடாதீங்க!அப்புறம் கருணாநிதி பாதி கட்டிய கோயம்பேடு பேருந்து நிலையத்த நீங்க ஏன் முடிச்சி தொறந்தீங்க?ஒ அது மக்கள் பயன்பாடு.என்ன வாஸ்து மன்னன்கட்டி கேடுன்னாலும் மக்கள்தான பாதிக்கபடபோறாங்கன்னா?நீங்க திருந்திட்டதா சிலர் சொல்றாங்க!இல்லை!

    என்ன கொடுமை சார் இது?

    ஆடுகளம் படத்திற்கு தனுசுக்கு தேசிய விருதாம்!!என்ன கொடுமை சார்?மனுசனுக்குதான் தேசிய விருது குடுத்துகினு  இருந்தாங்க.இப்போ கொசுக்களுக்குமா?

    அய்யய்யோ நான் ஒப்பிட சொல்லலியே!!!

    செவ்வாய், 17 மே, 2011

    மூடநம்பிக்கை பரப்புரை ஆரம்பம் !!!


    ஜெயலலிதா  ஜெயித்தபின்தான் மூடநம்பிக்கை பரப்புரை ஆரம்பிக்கும் என்ற நினைப்பை பொய்க்கும் விதமாக தேர்தல் முடிவு வெளியாகும் அன்றே காலையில் நான்கு ஜோதிடர்களை ஜெயா டிவி   குந்த வைத்து ஜாதகப்படி ஜெயா முதல்வர் என சொல்லவைத்தனர்(அந்த நேரம் தேர்தல் முடிவு வந்து கொண்டிருந்த நேரம்.அந்த முடிவை கூட ஒத்திவைத்து இது போன்ற மூட நம்பிக்கை பரப்புரை செய்த ஜெயா டிவியை என்னவென்று சொல்ல?!).
    இப்போது ஆட்சி பொறுப்பேற்றவுடன் தினமலர் மூடநம்பிக்கையை ஆரம்பித்துவைத்துள்ளது.அதாவது ஜெயாவுக்கு இப்போது எழுத்தான் ராசி என்னாம் அதான் மே 16 (கூட்டு என் ஏழாம்!!) அப்புறம் பதவி ஏற்றவுடன் ஏழு கோப்புகளில் கையெழுத்திட்டார்!!இனி எல்லா நிகழ்சிகளும் ஏழு கூட்டு என் கொண்ட தேதியிலேயே அமைக்கப்படும்.அன்னதானம் இலவச திருமணம் இலவச சைக்கிள்  லொட்டு லொசுக்கு எல்லாம் கூட்டு என் ஏழில் அமைக்கப்படும்.
    இது போக தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றதால்தான் கருணாநிதி ஆட்சி இழந்தார் எனவும் புழுகு  மூடைகளை அவிழ்த்துவிட்டுள்ளது தினமலர் நாளேடு!!இதை மற்ற ஹிந்துவெறி  ஊடகங்களும் இனி செய்யும்!!!ஆயிரம் பெரியார் வந்தாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள்!

    சனி, 14 மே, 2011

    அதுக்கு நீ சரிபட்டு வரமாட்ட!!!

    தேர்தல் முடிவு சில துளிகள்!!

    *தமிழின விரோத காங்கிரசு வெறும் அஞ்சு இடங்களே பெற்றது(தப்பாச்சே!!நான் எதிர்பாத்தது முட்டை!!)
    *என்ன வேணும்னாலும் ஊழல் பண்ணிட்டு பணம் குடுத்து ஓட்ட வாங்கலாம்னு நெனச்சதுக்கு இதுவும் வேணும்.இனி எவரும் இப்படி செய்ய துணிய மாட்டார்கள்(என்று நம்புவோம்!)!
    *திமுக முக்கிய அமைச்சர்கள் பெரும்பாலானோர் அவுட்டு (க.அன்பழகன் இந்த வயசுல பெரிய வில்லிவாக்கம் தொகுதிய குடுத்து இப்படி தோல்விய பாக்க வெச்சிட்டாங்க!!.)
    *திமுக எதிர்கட்சி பொறுப்பை இழந்தது.
    *வடிவேலுவின் நாரவாய் பேச்சுகளால் பைசா உபயோகம் இல்லைன்னும் அவரை பார்க்க கூடிய கூட்டத்தை ஓட்டாக மாறும்னு நெனச்ச திமுகவுக்கு முகத்துல கரி(இதேதான் குசுபுவுக்கும்)
    *ஒரு பக்கம் காங்கிரசுடன்  கூட்டணி மறுபக்கம் இலங்கைதமிழர் இனவொழிப்பு ,தமிழக மீன்வர்கள படுகொலைக்கு மத்திய மற்றும் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்னு டபுள் ஆக்டு குடுத்த குருமாவளவனின் கட்சி ஒரு இடம் கூட பெறவில்லை!!
    *"நான் இடம்பெறும்  கூட்டணியின் பிரதான கட்சிதான் ஆட்சிய பிடிக்கும்"னு பல வருசமா ரீல் வுட்டுகினு நெறைய சீட்டு வாங்குன பாமாகவுக்கு ஆப்பு!
    *சாதியை நம்புன கட்சிகள் அவுட்டு.(பாமக முக்கியமாக)
    *திருமங்கலம் பார்முலா அவுட்டுன்க்னா!!
    *அஞ்சாநெஞ்சனின் மதுரையில் பத்தில் ஒரு எடம் மட்டுமே திமுக வாங்கியுள்ளது.எனவே வேற நல்ல பேரா யோசிங்க!!
    *கேபிள் அரசுடமை ஆகிடும்னு  பயந்து விஜயகாந்த இழிவு படுத்துன சன் டிவி "தலைக்கு மேலே வெள்ளம் போனா சான் என்ன முழம் என்ன"ன்னு நேற்று ஜெயா ஜெயித்த காட்சிகளையும் விஜயகாந்த் எதிர்கட்சி  தலைவராகிரார்னும் காட்டியது.தினகரனும் சேர்த்துதான்!
    *மிக முக்கியமாக கொளத்தூரில் "ப சிதம்பரம் பாணியில்" ஸ்டாலின் ஜெயித்ததாக மிகுந்த இழுத்தடிப்புக்கு,தகராறுகளுக்கு பிறகு  அறிவிக்கபட்டுள்ளது

    தங்கபாலு அவுட்!!!

    தானைய  தலிவன் தொங்கபாலு முப்பதாயிரம் வோட்டு வித்தியாசத்தில் மைலாப்பூரில் தோல்வி.காங்கிரசு  தலிவர் பதவியும் அவுட்டு!!!

    ஞாயிறு, 8 மே, 2011

    எங்க போச்சி ஆரிய திராவிட யுத்தம்?

    ராசா கைது செய்யபட்டப்போ "அய்யகோ இது ஆரிய திராவிட யுத்தம்"னு கூவுன முக இப்போ தன் மகள் கனிமொழிக்கு கைவிலங்கு ரெடியா இருக்கும் நிலையில் ராம் ஜெத்மலானி மூலம் இந்த வழக்கில்(ஸ்பெக்ட்ரம்) ராசாவுக்கே முக்கிய பங்கெனவும் கனிமொழிக்கு சம்பந்தமில்லைன்னு  பிணை(ஜாமீன்)கேட்டு வாதாடி இருக்கிறார்!சூப்பர் .இப்போ தெரியுதா தமிழின தலிவரின் திராவிட பற்று?தன் மகளை காப்பாற்ற ராசா என்னும் தலித்(இவரின் சொல்படி) பலிகடா ஆக்கியிருக்கிறது திமுக.அப்புறம் கனிமொழி பெண்ணாததால் அவர் கைது செய்யபடகூடாது எனவும் ராம் ஜெத்மலானி வாதாடி இருக்கிறார்!அப்படியா?அப்போ ஜெயலலிதாவை 1996 இல் கைது செஞ்சீங்களே ஏன்?அவரும் பெண்தானே?பெண்ணென்பதால் ஒருவர் செய்த குற்றம் ஞ்யாயப்படுத்தமுடியாது.சட்டத்தின் முன் ஆண் பெண் சமம் என கூறுவோர் இந்த வாதத்தை ஏற்று கொள்ள கூடாது.அப்புறம் இந்த ராம் ஜெத்மலானி என்கிற பா சா க கட்சி காரர் ஒரு பக்கம் லோக்பால் மசோதாவுக்காக வாதாடுவார் மறுபக்கம் ஊழலில் ஈடுபட்ட கனிமொழிக்கு வாதாடுவார்!!!காசுக்காக என்ன வேணும்னாலும் செய்வார் போல!!!இதெல்லாம் ஒரு பொழப்பா?பா ஜா க இது குறித்து கூறுகையில் இது அவரின் சொந்த தொழில் சம்பந்தப்பட்டதென்பதால்  இதில் நாங்கள் தலையிட முடியாதாம்!!பேசாம நீங்களே பாசாகா சார்பா கனிமொழிக்கு ஜாமீன் வாங்கி கொடுத்துடுங்க!!!வாழ்க சன நாயகம்!!!

    சனி, 7 மே, 2011

    திருந்தமாட்டீங்களா?

    ஒசாமாவுக்கு சென்னை மசூதிகளில்  ஜனாஸா எனப்படும் சிறப்பு  தொழுகை நடத்தியிருக்கின்றனர் இங்குள்ள இஸ்லாமியர்கள்.திருந்தமாட்டீங்களா?ஒங்க குரான்ல அடுத்த மனிதன கொல்ல சொல்லி எங்குமே எழுதப்படலை.அது உங்களுக்கும் தெரியும்.ஆனா அமெரிக்க ரெட்டைகோபுர தாக்குதல விடுங்க(அதான் ஒங்களுக்கு அமெரிக்கா மீது கோபம் உண்டு.அதை ஒப்புகிறேன்)ஆனா ஒன்னுமே அறியாத டான்சானியா போன்ற நாடுகளில் நடந்த குண்டு வெடிப்புகளில் அங்குள்ள அப்பாவி கறுப்பின மக்கள் நூற்றுகணக்கில் கொல்லப்பட்டனரே அதை நீங்கள் என்ன ஞாயம் சொல்லி மறுக்க போகிறீர்கள்?ஸ்பெயின்,மற்றும் ஆப்ரிக்க நாடுகள் பலவற்றிலும் கடந்த பத்தாண்டுகளில் ஒசாமா தலைமையில் நடந்த குண்டு வெடிப்புகள் பல ஆயிரம் உயிரை பலி வாங்கியிருக்கிறது.அதை ஞ்யாயபடுத்துகிரீர்களா?
               குரான் படி ஒரு ஆண் நாலு பெண்களுக்கு ஞாயமான வாழ்கை கொடுக்க முயுமெனில் அவன் அவர்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறது.ஆனால் ஒசாமா 20 பொண்டாட்டிகளுக்கு மேல் வைத்திருந்தானாம்!(உடனே சில மத பித்தன்கள் நீங்க கல்யாணத்தப்போ உடனிருந்தீர்களா என பித்துக்குளித்தனமா  கேள்வி கேப்பதை என்ன சொல்ல?அப்போ நீங்க கடவுளை(எந்த மத கடவுளானாலும்) பக்கத்துல இருந்து பாத்தீங்களா?)அப்போ குரான்படி வாழாத ஒசாமா எப்படி ஒரு இஸ்லாமியனாக கருத முடியும்?பல்லாயிரகணக்கான உயிர்களை பலி கொண்ட இவனின் குண்டு வெடிப்புகள் இஸ்லாமை மீறிய செயல்கள் என்பதை எந்த முஸ்லீமும் ஒப்பு கொள்வர்.அப்படி இருக்கும்போது அவனுக்கு தொழுகை நடத்துவது மத பித்தா இல்லை என்னவென்று சொல்ல?
       இதில் சிலர் ரெட்டைகோபுர தாக்குதலுக்கு ஒசமாதான் காரணம் என்பதை நிரூபித்தால் நாங்களே அண்ணா சாலையில் வைத்து கொல்வோம் என்கின்றனர்(ஆமா நீங்க கூப்பிட்ட உடனே அவன் அண்ணா சாலை வந்துடுவான் பாரு!!!அதான் இங்க கசப்புக்கு தெனம் ரெண்டு கோடி செலவுல தண்டம் அழுகுரான்களே!!).ரெட்டை கோபுரம் தாக்குதலுக்கு ஒசாமாவே பொறுப்பேற்றான்.இது தவிர பல ஆப்ரிக்க நாடுகள் குண்டு  வெடிப்புக்கும் இவனே பொறுபேற்றான்  .சும்மா எல்லாத்துக்கும் மத சாயம் பூசாதீங்க.இப்படிதான் லட்சகணக்கா ஷியா முஸ்லீம்களை கொன்ற சதாம் ஹுசேனை ஆதரித்தனர் சில அறிவிலிகள்.கொஞ்சமாவது அறிவுபூர்வமா சிந்திங்க .உணர்சிவசபட்டா இப்படிதான் மூளை கொழம்பும்.வெய்யகாலம் வேற!!!