வெள்ளி, 27 மே, 2011

பீப்ளி லைவும் டுபாகூர் ஆடுகளமும்

பீப்ளி லைவ் என்ற படத்தை பற்றி நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.விவசாயிகளின் அவல நிலையை பகடி செய்து கார்பரேட்டு மரமண்டையில் ஏறும் அளவில்  சொன்ன ஒரு அருமையான படம்.இந்திய விவசாயிகளின் அவல நிலை அவர்களை அரசியல்வாதிகள்+அதிகாரிகள் நடத்தும் அவலமான இழிவான விதம்,பொனத்தின் வாயில் கூட அரிசியை புடுங்கி தின்பதுபோல இந்த விவசாயிகளின் அவல நிலையை நேரலை செய்து டி ஆர் பி ரேட்டிங் பெறலாம் என அலையும் தனியார் செய்தி தொ(ல்லை)லைகாட்சிகளின் பண வெறி என எல்லாவற்றையும் பொட்டில் அடித்தாற்போல சொன்ன அருமையான படம்.இதுவும் 2010 இல்தான் வெளிவந்தது.ஆனால் இந்த படத்திற்கு ஒரு தேசிய விருதும் கொடுக்கப்படவில்லை.!!மாறாக 2011 இல் வெளியான ஆடுகளம் என்ற சன் பிக்சர்சின் டுபாகூர் படத்துக்கு ஆறு விருதுகள் வழங்கப்பட்டது இந்த ஆண்டின் சிறந்த முரண் நகை!!இது கே டி பிரதர்ஸின்(அதான் கலாநிதி தயாநிதி!!)வியாபார மற்றுமதிகார வர்கத்தின் மீதான கில்லாடித்தனமான ஒரு கட்டுப்பாட்டையே காட்டுகிறதே  ஒழிய சிறந்த படத்தை அடையாளம் காட்டவில்லை!அரசாங்கம் என்பது(கம்யூனிஸ்டு வலது இடது பேதம் இல்லை) கார்பரேட்டுகளின் பிடியில்தான் நடக்கிறது என்பதை நான் ஏற்கெனவே கோரியுள்ளேன்!!அப்படி பட்ட கார்பரேட்டுகளை,முதலாளிகளை பகடி செய்த பீப்ளி லைவ் விருதுக்கு தேர்ந்தேடுக்கபடாதது ஒன்னும் ஆச்சர்யம் அளிக்கவில்லை.
*******************************************************************
இது குறித்த தீக்கதிர் கட்டுரை கீழே!!
http://www.theekkathir.in/index.asp

புதன், 25 மே, 2011

RAW plan to turn jayalalitha against srilanka tamilians? | ஜெ.வை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்ப 'ரா' முயற்சி?

ஏற்கெனவே நேற்று இது குறித்து நான் எழுதியிருந்தேன்.இப்போது மேலும் அது குறித்து வெப்துனியா மூலம்:

RAW plan to turn jayalalitha against srilanka tamilians? | ஜெ.வை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்ப 'ரா' முயற்சி?

நன்றி வெப்துனியா


செவ்வாய், 24 மே, 2011

கே.பியின் காமெடி பேட்டி

குமாரன் பத்மநாபனின் பேட்டியை நேற்று சி என் என் ஐ பி என் இல் ஒளிபரப்பினார்கள.என்னடா தேர்தல் பிரசார காமெடிகள் ஓய்ந்துவிட்டதே என்ற கவலையை போக்க இது உதவியது.எனக்கெனவோ வடிவேலுவின் பிரசாரம் நினைவுக்கு வந்தது.
பிரபாகரன் திமுகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவராம்.அடங்கப்பா!.தார்மீக ஆதரவோ பைசா காசோ  கூட கருணாநிதி விடுதலைப்புலிகளுக்கு கொடுத்ததில்லையே!!கொடுத்ததெல்லாம்(ஆதரவும்,பணமும்) எம் ஜி ஆர் என தமிழர் அனைவருக்கும் தெரியும்(ஏ.சியில் குந்திகினு பெனாத்தும் வடநாட்டு ஊடகங்களுக்கு ஒரு கருமமும் இது பற்றி தெரியாது என்பது சொல்லி விளங்க வேண்டியதில்லை!).அது தவிர பிரபாகரன் பார்ப்பன எதிர்ப்பால் ஈர்க்கப்பட்டாராம்!!அதனால் அவர் ராஜிவை கொல்ல உத்தரவிட்டாராம்.அது தவிர ஜெயாவையும் கொல்ல முயற்சி செய்தும் சந்தர்பம் கிடைக்காததால் கொல்லளியாம்!!இதென்ன புது கதை!!அவுரு திருமணத்தை நடத்தியது ஒரு பார்ப்பன குருக்கள்னு இவிங்களுக்கு தெரியுமா?இல்லை குவாட்டரோ  கஞ்சாவோ அடிச்சிட்டு பெனாத்தும் திருமணத்தை நேரில் பார்த்த கே பிக்கு தெரியாதா?
       ராஜபக்சேவை சர்வதேச போற்குற்ற்வாளியாக அறிவிக்க வேண்டுமென ஜெயா சென்ற வாரம் கூறியிருந்தார்.இதை மாற்றி ஜெயாவை தாஜா செய்யத்தான் இது போன்ற விஷம பேட்டிகள் ஒளிபரப்பபடுகின்றன என்பதுதான் உண்மை.இதில் ராஜபக்சேவின் பங்குதான் அதிகம்.அது தவிர எப்போதும் ராஜபக்சேவுக்கு சொம்பு தூக்கும் இந்தியாவின் தமிழின விரோத காங்கிரசு பற்றி சொல்ல வேண்டியதில்லை.!!!
        வடநாட்டு ஊடகங்களோ பத்திரிக்கையோ அல்லது அந்த மக்களோ என்றுமே  தமிழர்களையோ அவர்களின் உணர்வுகளையோ புரிதுகொண்டதில்லை.புரிந்துகொள்ளவும் போவதில்லை என்பதற்கு இந்த பேட்டியை ஒளிபரப்பியதே சான்று!!
         உடனே ஜெயாவும் எனக்கு எப்போதும் கொலை மிரட்டல் இருந்துள்ளதுன்னு சைடு வாத்தியம் வாசிக்கிறார்.இவர் வீட்டு முன்பு எவனையோ செட் செய்து கல் வீச செய்து இதை செய்தது புலிகள் என சொன்னவர்தான் ஜெ !ஐயோ புலி அந்தோ  புலி!! என அவரின் ஊடகமும் தொடர்ந்து சொல்லிவந்துள்ளது.அது சரி பார்ப்பனர்களின் புத்தி வடநாட்டு மக்களின் புத்தியோடு ஒன்றியுள்ளது என்பதற்கு இதே சான்று!!
         2001 -2006 இல் கடற்கரையில் ஏதாவது ஷூ சாக்சு மிதந்து வந்தாலும் "ஐயோ இது பிரபாகரனின் ஷூ" என சொல்லி வந்தது ஜெயா டிவி என யாரும் மறந்திருக்க மாட்டார்.
          இப்போது இந்த துரோகி கே பியின் பேட்டி உலக அரங்கை தன மீதிருந்து திசை திருப்பவே ராஜபக்சே கோஷ்டி செய்யும் லீலை  என்பது மூளை உள்ளவர்களுக்கு விளங்கும்
  

ராசா குறித்து

ராசா தலித் என்பதால் பழிவாங்கப்படுகிறார்.ஆரிய திராவிட யுத்தம் blah blah blah என கூறிய கருணாநிதி இப்போது தன மகளை சிறையில் அடைத்தபோது மட்டும் நேரில் போய்  பார்த்ததேன்?தலித்தான ராசாவை அப்போதே நேரில் ஏன் பார்க்கவில்லை?ஒன்றுமில்லை இந்த ஆரிய திராவிட உட்டாலக்கடிஎல்லாம் இப்போது மக்களுக்கு விளங்கியிருக்கும்.
அப்புறம் பிணை கேட்டு மீண்டும் மீண்டும் விக்ரமாதித்யன் போல மனு தாக்கல் செய்கிறார் கனிமொழி.ஆனால் ராசா இதுவரை ஒரு முறை கூட பிணை கேட்டு மனு தாக்கல் செய்யவில்லையே!!!ஏன்னெனில் வெளியே வந்தால் சாதிக் பாட்ஷா கதைதான் தனக்கும் என அவருக்கு தெரியும்.அதனால் உள்ள இருக்குறதே பெஸ்டுன்னு நினைக்கிறார்!!

கனிமொழியும்,நளினியும்

கனிமொழிக்கு பிணை தாக்கல் செய்ய சொல்லப்பட்ட காரணங்கள் பல.அவற்றில் சில முக்கியமானதை மட்டும்  சொல்கிறேன்.
*அவர் முதுநிலை பட்டதாரி
*தனது பிள்ளையை கவனிக்க அவரை விடுவிக்க வேண்டும்
*அவர் பெண்
இப்போது இதே காரணங்களை ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறி சிறையில் இருக்கும் நளினிக்கும் பொருந்துகிறதே!!
ஆயுள் தண்டனை என்பது பதினான்கு ஆண்டுகள் என வைத்து கொண்டாலும் அவர் இருபது  வருடங்களாக  சிறையில் வாடுகிறாரே!விடுவிப்பதில் என்ன தவறு?
அவரும் பெண்.முதுநிலை பட்டதாரி மற்றும் வயதுக்கு வந்த பெண் குழந்தை உள்ளது.தனது பெண்ணை கவனித்து கொள்ள வேண்டிய முக்கியமான தருணமிது!இப்போது அவரை விடுவிப்பதில் என்ன தவறு?இதே போல் தான் முருகன் பேரறிவாளன்    சாந்தன் மற்றும் பிறரும் இருபது ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டனர்.ஆயுள் தண்டனை முடிந்து விட்டதே!!விடுவிக்க என்ன தயக்கம்?

வெள்ளி, 20 மே, 2011

பல கேள்விகள் ஒரே பதில்

*பல தேசிய விருதுகள் "வாங்கப்பட்ட"(வழங்கப்பட்டதில்லை.கவனிக்க!!)ஆடுகளம் படம் அங்காடி தெருவை விட சிறந்த படமா?
* கனிமொழி,சரத் குமார்(இவுரு வேற),ராசா,கல்மாடி  இவர்கள் மட்டுமே கைது ஏன்?டாடா நீரா ராடியா  உள்ளிட்டவர்கள் கைது செய்யப்படாததேன்?
* அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள்  தேர்தல் பிரசாரத்தின் போது ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி ஒரு வார்த்தை சொல்லாததேன்?
******************************************************************
எல்லாத்துக்கும் ஒரே பதில்:கார்பரேட் களவாணித்தனம் அல்லது முதலாளித்துவ சக்தி.
.
அங்காடி தெரு படம் முதலாளித்துவத்தின் கொடூர முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திய படம்.அதனால் அந்த படம் ஓரங்கட்டப்பட்டுள்ளது.ஏனெனில் எல்லா அரசும் (மத்திய மாநில,கம்யூனிஸ்ட்,வலது) கார்பரேட்டுகளை நம்பியே நடக்குது.அவர்களை தோலுரித்து காட்டிய படத்தை எப்படி முதலாளித்துவ அரசு ஒப்பு கொள்ளும்?

வியாழன், 19 மே, 2011

1200 கோடி வீண் !!

என்னத்த சொல்ல 1200 கோடி மக்கள் வரிப்பணத்துல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் வியர்வையில் (சில தொழிலாளர்களின் மரணத்தில்) கட்டப்பட்ட புதிய சட்டசபை வளாகம் வாஸ்து சரியில்லைன்னு சில மூட ஜோதிடர்கள் கூறியதாலும் வீண் வீம்பாலும் ஜெயலலிதா பயன்படுத்த மாட்டேன் என்று கூறிவிட்டார்.அப்போ 1200 கோடி மக்கள் வரிப்பன செலவுக்கு என்ன பதில் சொல்றீங்க!!நீங்க 2001 -2006 முதல்வராக இருந்த பொது புதிய சட்டசபை வளாகம் கட்ட கூறிய காரணம் பழைய சட்டசபை வளாகம் ராணுவத்துக்கு சொந்தமான இடமென்பதால் அவர்கள் திரும்ப கேட்கின்றனர்.அதனால் புதிய சட்டசபை கட்ட வேண்டிய நிர்பந்தம்னு அண்ணா பல்கலைய சூறையாட பார்த்தீங்க(நான் உட்பட எல்லா மாணவர்களும் கையெழுத்து இயக்கம் நடத்தி அதை அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அனுப்பினோம்.அதனால் அந்த இடம் தப்பித்தது!)அப்புறம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்படும்னு சொல்லப்பட்டது.பின் உங்கள் ஆட்சி முடிந்து கருணாநிதி முதல்வராகி இந்த புதிய வளாகத்தை கட்டினார்!
        இப்போ ஓங்க வீண் ஜம்பத்தினால் அங்கு போகவில்லை!அல்லது மூடநம்பிக்கை காரணம்.பேசாம நீங்க  ஆளாளுக்கு சொந்த பணத்துல ஆளுக்கொரு சட்டசபை கட்டிகிங்க!ஓங்க இஷ்டப்படி வாஸ்து கூஸ்து தோஸ்துன்னு எல்லா மூடநம்பிக்கைகளையும் அங்கு பின்பற்றிகுங்க.மக்கள் வரிப்பணத்துல விளையாடாதீங்க!அப்புறம் கருணாநிதி பாதி கட்டிய கோயம்பேடு பேருந்து நிலையத்த நீங்க ஏன் முடிச்சி தொறந்தீங்க?ஒ அது மக்கள் பயன்பாடு.என்ன வாஸ்து மன்னன்கட்டி கேடுன்னாலும் மக்கள்தான பாதிக்கபடபோறாங்கன்னா?நீங்க திருந்திட்டதா சிலர் சொல்றாங்க!இல்லை!

என்ன கொடுமை சார் இது?

ஆடுகளம் படத்திற்கு தனுசுக்கு தேசிய விருதாம்!!என்ன கொடுமை சார்?மனுசனுக்குதான் தேசிய விருது குடுத்துகினு  இருந்தாங்க.இப்போ கொசுக்களுக்குமா?

அய்யய்யோ நான் ஒப்பிட சொல்லலியே!!!

செவ்வாய், 17 மே, 2011

மூடநம்பிக்கை பரப்புரை ஆரம்பம் !!!


ஜெயலலிதா  ஜெயித்தபின்தான் மூடநம்பிக்கை பரப்புரை ஆரம்பிக்கும் என்ற நினைப்பை பொய்க்கும் விதமாக தேர்தல் முடிவு வெளியாகும் அன்றே காலையில் நான்கு ஜோதிடர்களை ஜெயா டிவி   குந்த வைத்து ஜாதகப்படி ஜெயா முதல்வர் என சொல்லவைத்தனர்(அந்த நேரம் தேர்தல் முடிவு வந்து கொண்டிருந்த நேரம்.அந்த முடிவை கூட ஒத்திவைத்து இது போன்ற மூட நம்பிக்கை பரப்புரை செய்த ஜெயா டிவியை என்னவென்று சொல்ல?!).
இப்போது ஆட்சி பொறுப்பேற்றவுடன் தினமலர் மூடநம்பிக்கையை ஆரம்பித்துவைத்துள்ளது.அதாவது ஜெயாவுக்கு இப்போது எழுத்தான் ராசி என்னாம் அதான் மே 16 (கூட்டு என் ஏழாம்!!) அப்புறம் பதவி ஏற்றவுடன் ஏழு கோப்புகளில் கையெழுத்திட்டார்!!இனி எல்லா நிகழ்சிகளும் ஏழு கூட்டு என் கொண்ட தேதியிலேயே அமைக்கப்படும்.அன்னதானம் இலவச திருமணம் இலவச சைக்கிள்  லொட்டு லொசுக்கு எல்லாம் கூட்டு என் ஏழில் அமைக்கப்படும்.
இது போக தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றதால்தான் கருணாநிதி ஆட்சி இழந்தார் எனவும் புழுகு  மூடைகளை அவிழ்த்துவிட்டுள்ளது தினமலர் நாளேடு!!இதை மற்ற ஹிந்துவெறி  ஊடகங்களும் இனி செய்யும்!!!ஆயிரம் பெரியார் வந்தாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள்!

சனி, 14 மே, 2011

அதுக்கு நீ சரிபட்டு வரமாட்ட!!!

தேர்தல் முடிவு சில துளிகள்!!

*தமிழின விரோத காங்கிரசு வெறும் அஞ்சு இடங்களே பெற்றது(தப்பாச்சே!!நான் எதிர்பாத்தது முட்டை!!)
*என்ன வேணும்னாலும் ஊழல் பண்ணிட்டு பணம் குடுத்து ஓட்ட வாங்கலாம்னு நெனச்சதுக்கு இதுவும் வேணும்.இனி எவரும் இப்படி செய்ய துணிய மாட்டார்கள்(என்று நம்புவோம்!)!
*திமுக முக்கிய அமைச்சர்கள் பெரும்பாலானோர் அவுட்டு (க.அன்பழகன் இந்த வயசுல பெரிய வில்லிவாக்கம் தொகுதிய குடுத்து இப்படி தோல்விய பாக்க வெச்சிட்டாங்க!!.)
*திமுக எதிர்கட்சி பொறுப்பை இழந்தது.
*வடிவேலுவின் நாரவாய் பேச்சுகளால் பைசா உபயோகம் இல்லைன்னும் அவரை பார்க்க கூடிய கூட்டத்தை ஓட்டாக மாறும்னு நெனச்ச திமுகவுக்கு முகத்துல கரி(இதேதான் குசுபுவுக்கும்)
*ஒரு பக்கம் காங்கிரசுடன்  கூட்டணி மறுபக்கம் இலங்கைதமிழர் இனவொழிப்பு ,தமிழக மீன்வர்கள படுகொலைக்கு மத்திய மற்றும் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்னு டபுள் ஆக்டு குடுத்த குருமாவளவனின் கட்சி ஒரு இடம் கூட பெறவில்லை!!
*"நான் இடம்பெறும்  கூட்டணியின் பிரதான கட்சிதான் ஆட்சிய பிடிக்கும்"னு பல வருசமா ரீல் வுட்டுகினு நெறைய சீட்டு வாங்குன பாமாகவுக்கு ஆப்பு!
*சாதியை நம்புன கட்சிகள் அவுட்டு.(பாமக முக்கியமாக)
*திருமங்கலம் பார்முலா அவுட்டுன்க்னா!!
*அஞ்சாநெஞ்சனின் மதுரையில் பத்தில் ஒரு எடம் மட்டுமே திமுக வாங்கியுள்ளது.எனவே வேற நல்ல பேரா யோசிங்க!!
*கேபிள் அரசுடமை ஆகிடும்னு  பயந்து விஜயகாந்த இழிவு படுத்துன சன் டிவி "தலைக்கு மேலே வெள்ளம் போனா சான் என்ன முழம் என்ன"ன்னு நேற்று ஜெயா ஜெயித்த காட்சிகளையும் விஜயகாந்த் எதிர்கட்சி  தலைவராகிரார்னும் காட்டியது.தினகரனும் சேர்த்துதான்!
*மிக முக்கியமாக கொளத்தூரில் "ப சிதம்பரம் பாணியில்" ஸ்டாலின் ஜெயித்ததாக மிகுந்த இழுத்தடிப்புக்கு,தகராறுகளுக்கு பிறகு  அறிவிக்கபட்டுள்ளது

தங்கபாலு அவுட்!!!

தானைய  தலிவன் தொங்கபாலு முப்பதாயிரம் வோட்டு வித்தியாசத்தில் மைலாப்பூரில் தோல்வி.காங்கிரசு  தலிவர் பதவியும் அவுட்டு!!!

ஞாயிறு, 8 மே, 2011

எங்க போச்சி ஆரிய திராவிட யுத்தம்?

ராசா கைது செய்யபட்டப்போ "அய்யகோ இது ஆரிய திராவிட யுத்தம்"னு கூவுன முக இப்போ தன் மகள் கனிமொழிக்கு கைவிலங்கு ரெடியா இருக்கும் நிலையில் ராம் ஜெத்மலானி மூலம் இந்த வழக்கில்(ஸ்பெக்ட்ரம்) ராசாவுக்கே முக்கிய பங்கெனவும் கனிமொழிக்கு சம்பந்தமில்லைன்னு  பிணை(ஜாமீன்)கேட்டு வாதாடி இருக்கிறார்!சூப்பர் .இப்போ தெரியுதா தமிழின தலிவரின் திராவிட பற்று?தன் மகளை காப்பாற்ற ராசா என்னும் தலித்(இவரின் சொல்படி) பலிகடா ஆக்கியிருக்கிறது திமுக.அப்புறம் கனிமொழி பெண்ணாததால் அவர் கைது செய்யபடகூடாது எனவும் ராம் ஜெத்மலானி வாதாடி இருக்கிறார்!அப்படியா?அப்போ ஜெயலலிதாவை 1996 இல் கைது செஞ்சீங்களே ஏன்?அவரும் பெண்தானே?பெண்ணென்பதால் ஒருவர் செய்த குற்றம் ஞ்யாயப்படுத்தமுடியாது.சட்டத்தின் முன் ஆண் பெண் சமம் என கூறுவோர் இந்த வாதத்தை ஏற்று கொள்ள கூடாது.அப்புறம் இந்த ராம் ஜெத்மலானி என்கிற பா சா க கட்சி காரர் ஒரு பக்கம் லோக்பால் மசோதாவுக்காக வாதாடுவார் மறுபக்கம் ஊழலில் ஈடுபட்ட கனிமொழிக்கு வாதாடுவார்!!!காசுக்காக என்ன வேணும்னாலும் செய்வார் போல!!!இதெல்லாம் ஒரு பொழப்பா?பா ஜா க இது குறித்து கூறுகையில் இது அவரின் சொந்த தொழில் சம்பந்தப்பட்டதென்பதால்  இதில் நாங்கள் தலையிட முடியாதாம்!!பேசாம நீங்களே பாசாகா சார்பா கனிமொழிக்கு ஜாமீன் வாங்கி கொடுத்துடுங்க!!!வாழ்க சன நாயகம்!!!

சனி, 7 மே, 2011

திருந்தமாட்டீங்களா?

ஒசாமாவுக்கு சென்னை மசூதிகளில்  ஜனாஸா எனப்படும் சிறப்பு  தொழுகை நடத்தியிருக்கின்றனர் இங்குள்ள இஸ்லாமியர்கள்.திருந்தமாட்டீங்களா?ஒங்க குரான்ல அடுத்த மனிதன கொல்ல சொல்லி எங்குமே எழுதப்படலை.அது உங்களுக்கும் தெரியும்.ஆனா அமெரிக்க ரெட்டைகோபுர தாக்குதல விடுங்க(அதான் ஒங்களுக்கு அமெரிக்கா மீது கோபம் உண்டு.அதை ஒப்புகிறேன்)ஆனா ஒன்னுமே அறியாத டான்சானியா போன்ற நாடுகளில் நடந்த குண்டு வெடிப்புகளில் அங்குள்ள அப்பாவி கறுப்பின மக்கள் நூற்றுகணக்கில் கொல்லப்பட்டனரே அதை நீங்கள் என்ன ஞாயம் சொல்லி மறுக்க போகிறீர்கள்?ஸ்பெயின்,மற்றும் ஆப்ரிக்க நாடுகள் பலவற்றிலும் கடந்த பத்தாண்டுகளில் ஒசாமா தலைமையில் நடந்த குண்டு வெடிப்புகள் பல ஆயிரம் உயிரை பலி வாங்கியிருக்கிறது.அதை ஞ்யாயபடுத்துகிரீர்களா?
           குரான் படி ஒரு ஆண் நாலு பெண்களுக்கு ஞாயமான வாழ்கை கொடுக்க முயுமெனில் அவன் அவர்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறது.ஆனால் ஒசாமா 20 பொண்டாட்டிகளுக்கு மேல் வைத்திருந்தானாம்!(உடனே சில மத பித்தன்கள் நீங்க கல்யாணத்தப்போ உடனிருந்தீர்களா என பித்துக்குளித்தனமா  கேள்வி கேப்பதை என்ன சொல்ல?அப்போ நீங்க கடவுளை(எந்த மத கடவுளானாலும்) பக்கத்துல இருந்து பாத்தீங்களா?)அப்போ குரான்படி வாழாத ஒசாமா எப்படி ஒரு இஸ்லாமியனாக கருத முடியும்?பல்லாயிரகணக்கான உயிர்களை பலி கொண்ட இவனின் குண்டு வெடிப்புகள் இஸ்லாமை மீறிய செயல்கள் என்பதை எந்த முஸ்லீமும் ஒப்பு கொள்வர்.அப்படி இருக்கும்போது அவனுக்கு தொழுகை நடத்துவது மத பித்தா இல்லை என்னவென்று சொல்ல?
   இதில் சிலர் ரெட்டைகோபுர தாக்குதலுக்கு ஒசமாதான் காரணம் என்பதை நிரூபித்தால் நாங்களே அண்ணா சாலையில் வைத்து கொல்வோம் என்கின்றனர்(ஆமா நீங்க கூப்பிட்ட உடனே அவன் அண்ணா சாலை வந்துடுவான் பாரு!!!அதான் இங்க கசப்புக்கு தெனம் ரெண்டு கோடி செலவுல தண்டம் அழுகுரான்களே!!).ரெட்டை கோபுரம் தாக்குதலுக்கு ஒசாமாவே பொறுப்பேற்றான்.இது தவிர பல ஆப்ரிக்க நாடுகள் குண்டு  வெடிப்புக்கும் இவனே பொறுபேற்றான்  .சும்மா எல்லாத்துக்கும் மத சாயம் பூசாதீங்க.இப்படிதான் லட்சகணக்கா ஷியா முஸ்லீம்களை கொன்ற சதாம் ஹுசேனை ஆதரித்தனர் சில அறிவிலிகள்.கொஞ்சமாவது அறிவுபூர்வமா சிந்திங்க .உணர்சிவசபட்டா இப்படிதான் மூளை கொழம்பும்.வெய்யகாலம் வேற!!!

வெள்ளி, 6 மே, 2011

அட்சய திரிதையும் அறிவிலிகளும்

இன்று அட்சய திரிதையாம்!!!இன்று நகை வாங்குவோர் மேலும் செல்வம் பெற்று பணக்காரர்களாவராம்!!!இது உண்மையெனில் வருடாவருடம் நகை கடையில் கூட்டத்தில் நசுங்கி நகை வாங்கும் ஒவ்வொரு குடும்பமும் இந்நேரம் போன வருடத்தை  விட பணக்காரனாகியிருக்க வேண்டும்.ஆனால் உண்மை  நிலை என்ன?இந்தியாவில் 60 % மக்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய்தான்  நாள்கூலியாக பெறுகின்றனர்.பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிவருகிறான்  ஏழை மேலும் ஓட்டாண்டி ஆகி வருகிறான்.இந்த நிலையில் நகை வியாபாரிகள் மேலும் கொழுத்த பண்ணக்காரன் ஆக உண்டாக்கிய இந்த அட்சய திரிதை எனும் வியாபார புழுகுமூட்டையை நம்பி நகை கடையில் அலை மோதும் அறிவிலிகளை என்னவென்று சொல்ல?கொஞ்சம் கூட சிந்திக்க மாட்டீங்களா?

திங்கள், 2 மே, 2011

பின்லேடன் குறித்து ...

பின்லேடன் மரணம்  குறித்தும்  ஒசாமாவை உருவாக்கியது யார் என்பது பற்றி எழுத நினைத்தேன்.ஆனால் அதை விட விவரமாக வினவு எழுதியுள்ளார்.எனவே அந்த கட்டுரை இதோ:
*******
http://www.vinavu.com/2011/05/02/osama-obama/
**********************
நன்றி : வினவு