வெள்ளி, 31 டிசம்பர், 2010

இலவச மருத்துவம் பாத்தா கைது ஆயிரகணக்குல வாங்கி மருத்துவம் பாத்தா பத்மபூஷன்

ஆம் இதான் இந்த சனநாயகம் என்று "பெயரளவில்" சொல்லப்படும் இந்தியாவில் நடக்கிறது.பினாயக் சென் என்கிற வேலூர் சி.எம்.சி இல் குழந்தை வைத்தியம்(Paediatrics) படித்து விட்டு சட்டிஸ்கரில் வசிக்கும் பழங்குடி மலைவாழ் மக்களுக்கு இலவச மருத்துவம் செய்து வந்தார்.அந்த மலைவாழ மக்கள் வசிக்கும் பகுதிகளில் மருந்துக்கு(இந்த மருந்து வேற!!) கூட மருத்துவர்கள் கிடையாது.அதேபோல்தான் மருந்துகளும். எனவே இந்த மக்களுக்கு தான் படித்த மருத்துவம் பயனுற வேண்டும் என நினைத்த பினாயக் சென் அங்கு சென்று மக்களுக்கு இலவசமாகவும் குறைந்த செலவிலும் மருத்துவம் பார்த்து வந்தார்.

        இது பொறுக்குமா கார்பரேட் கைகூலியாய் மாறிவிட்ட அரசுக்கு?இதில் காங்கிரஸ் பா.ஜா.க. வேறுபாடு ஒரு மண்ணும் கிடையாது(கம்யூனிஸ்டும் அப்படி ஆகிவிட்டது வேறு கதை).சத்திஸ்கர் மாநில பா.ஜா.க மட்டும் இதற்கு விதிவிலக்கு ஆகிவிடுமா என்ன?கண்ணுக்கு தெரியாத ராமருக்கு கோவில்கட்ட காடும் அக்கறையை இவர்கள் கண்ணுக்கு தெரியும் மக்களின் மேல் என்றாவது காட்டியிருக்கின்றனரா  ?இதில் காங்கிரஸ் பா ஜ க வேறுபாடில்லை.இது நாட்டின் சாபக்கேடு.
        ஏற்கெனவே பினாயக் சென் 2008 ஆம் ஆண்டு இதே போல் போலி ஆவணங்கள்  மூலம் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு படுத்தி கைது செய்யப்பட்டார்.அதன் பின் அவரின் கூட படித்தவர்களும் வேலைபார்த்த மருத்துவர்களும் வேலூர் சி.எம் சி கல்லூரியும் போராடியதால் விடுதலை செய்யப்பட்டார்.ஆனால் இப்போது அதே கேப்மாரிதனத்தை அரசு மீண்டும் செய்திருக்கிறது.
         இவர் மாவோயிஸ்டுகளுக்கு தூதுவராக இருந்தாராம்.அதற்காக "புனையப்பட்ட" சில கடிதங்களை  அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது.
         சூப்பரப்பு  .அப்படியே நாடு பூரா ஏழை மக்கள், பழகுடியினருக்கு இலவச மருத்துவம் செய்யும் மருத்துவர்களை பிடித்து உள்ளே போடுங்கடா.அப்போதானே அப்போலோ போர்டிஸ் etc..etc.. போன்ற தனியார் கார்பரேட் கழிசடைகள் கொள்ளையடிக்க முடியும்.
         அரசு என்பது மக்களுக்கு என்பது மாறி அரசு என்பது முதலாளிகளுக்கும்  கார்பரேட்டுகளுக்கும் என எப்போதோ மாறிவிட்டது.
         இலவச மருத்துவம் பார்த்தால் கைது.ஆனால் ஆயிரக்கணக்கில் "பிடுங்கி" வைத்தியம் பார்த்தால் அவர்களுக்கு பத்மபூஷன் விருது.சூப்பர்.
          அப்போலோ  மருத்துவமனை ரெட்டிக்கு  பத்மபூஷன்.எதுக்கு?ஒரு சின்ன தலைவலிக்கு போனா கூட அந்த ஸ்கேன் இந்த எக்ஸ் ரென்னு மக்களை ஓட்டாண்டி ஆக்குனதுக்கா?என்னாங்கடா இது?
          அரசு மருத்துவமனை எந்த லட்சணத்தில் இயங்குகிறது என்பதை பார்க்க வக்கில்லாத மந்திரிகள் மற்றும் அமைச்சர்கள் தனியார் மருத்துவமனையில் ஒரு கக்கூஸ் கட்டினாலும் கூட  "ஆஹா ஓஹோ" என புகன்ழ்து போஸ் கொடுப்பது கூட்டி கொடுப்பதை விட கேவலமானது.வாழ்க சன நாயகம்.

வியாழன், 9 டிசம்பர், 2010

வழக்கம் போல் விசாரணை கமிஷன்-எதற்கு மக்கள் வரிப்பணத்தை வீணடிக்க வேண்டும்?

ஸ்பெக்ட்ரம்  பிரச்சனையை இந்தியாவையும் தாண்டி உலகமே காரி முழிந்த விவகாரமாகிவிட்டது.இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் ஒரு நாள் கூட நடை பெற விடாமல் எதிர்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றன.எதிர்கட்சிகள் வலியுறுத்துவது நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடவேண்டும் என்பதை.ஆனால் காங்கிரஸ் அரசோ பொது கணக்கு குழு விசாரணையே போதும் என எதிர் கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து மறுத்து வருவதால் ஒரு முட்டுக்கட்டை ஏற்ப்பட்டது.
    எதிர் கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கேட்பதற்கு காரணம் இந்த அலைகற்றை ஊழலில் ராசா மாட்டுமில்லாமல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும், டாடா அம்பானி போன்ற கார்பரேட்டுகளும் ஈடுப்பட்டிருப்பதால் முழுமையான சுதந்திரமான ஞாயமான    விசாரணை வேண்டும் என்பதே.
   ஆனால் காங்கிரஸ் பொது கணக்கு குழு விசாரணையே போதும் என கூறி அதற்கு வலுசேர்க்கும் விதமாக பொது கணக்கு குழு தலைவர் பா.ஜா.க  கட்சியை சேந்தவர் என்பதால் அதுவே போதும் என்கிறது.
    இருபது நாட்களாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டதால் பல கோடி இழப்பு ஏற்ப்பட்டதாகவும் இதற்கு எதிர் கட்சிகள் காரணம் என காங்கிரஸ் பழி சுமத்தியது.
       இப்போது திடீரென ராசா வீட்டில் சி பீ ஐ ரெய்டு(அடங்கப்பா ஊழல் நடந்து மூணு வருடம் கழிச்சி போனா பைத்தியகாரன் கூட  எல்லா ஆதரங்களையும் அழித்து முடித்திருப்பான்!!!).அதோடு மட்டுமலாமல் ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற  நீதிபதி சிவ​ராஜ் பாட்​டீல் தலைமையில்(!!) ஒரு நபர்  விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது.

        மேலும் இந்த விசாரணை 2001 ஆண்டில் இருந்து நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.!!(பா கா சாவிற்கு செக் வைக்கும் விதமாக)அப்போ நிச்சயமாக யாரும் மாட்டபோவதில்லை. ஏனெனில் 2001-2004 ஆண்டுவரை ஆட்சியில் இருந்த பா ஜா க மட்டும் தாக சீலர்களாய் நிச்சயமாய் இருந்திருக்கமாட்டார்கள்.இப்போ இவர்கள் காங்கிரசுடன் ரகசிய பேச்சில் ஈடுபடுவார்கள்.நீயும் திருடன் நானும் திருடன்.எதுக்கு சண்டை?சேர்ந்து மக்களை தொடர்ந்து மேலும் திருடுவோம் வா!!!
        "வழக்கம் போல்" மற்றொரு விசாரணை கமிஷன்.வழக்கம் போல் பல மாதங்களுக்கு விசாரணை இழுத்தடிக்கப்படும்.அப்புறம் இந்த ஊழலில் ராசா மற்றும் பிறரின் தொடர்பிற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என கூறப்படும்.மேலும் ஒரு சம்பிரதாயத்திற்காக  சில கண்டன்களும் சில அறிவுரைகளும் வழங்கப்படும்.அதுதான் விசாரணை கமிஷன் பனி.இதற்கு பல கோடிகள் செலவழிக்கப்படும்.
         இந்த விசாரணை  கமிஷன் அமைக்கப்பட்ட காரணம் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடவேண்டும்  என தொடர்ந்து கூறிவரும் எதிர்கத்சிகளின் வாயை மூடுவது.
        இரண்டாவதாக "இதோ பார்  ஊழலுக்கு எதிராக நான் நடவடிக்கை எடுத்துவிட்டேன்" என்று காங்கிரஸ் தனது காலரை தூக்கி விட்டு கொள்ள.மேலும் இப்போது பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதால் அவை முடியும் வரை விசாரணை கமிஷன் தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்காமல் பார்த்துகொள்ளபடும்.
       மேலும் தேர்தல் பிரசாரத்தின்போது நாங்கள் ஊழலுக்கு  எதிரானவர்கள் என்ற  ஒரு போலி மாயையை காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் ஏற்படுத்தி ஒட்டு பொறுக்க முயலும்.
       இது வரை ஏதாவது ஒரு விசாரணை கமிஷனால் தண்டிக்கப்பட்ட அல்லது பொதுவாக ஊழால் செய்ததற்காக தண்டிக்கப்பட்ட ஒரு அரசியல்வாதியையும் நாம் காட்ட முடியாது.ஒன்று பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு இழுத்தடிக்கப்பட்டு பின்னர் "சரியான ஆதாரம் இல்லை" என கூறி விடுவிக்கப்பட்டனர்.இல்லையேல் நான் முன்பே கூறியதுபோல் விசாரணை கமிஷன்.
     இந்த விசாரணை கமிஷன் என்பது குறிப்பிட்ட ஆயுட்காலம் கொண்டது.உம்.இரண்டு ஆண்டுகள்.இரண்டு ஆண்டுகள் முடிந்தபின் அதன் ஆயுளை நீட்டிப்பதா வேண்டாமா என்பதை அப்போது ஆட்சியில் இருக்கும் அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.
    இதனால் என்ன ஆனது என்றால் ஆளும்கட்சி எதிர்கட்சியை சேர்ந்த ஒருவருக்கு எதிராக விசாரணை கமிஷன் அமைக்கும்.அதன் ஆயுள் அந்த குறிப்பிட்ட ஆளும் கட்சி இருக்கும்வரை.பின்னர் ஒரு வேலை எதிர்கட்சி ஆட்சிக்கு வருமெனில் அது இந்த கமிஷனின் ஆயுளை முடித்து வைக்கும்.இதுதான் விசாரணை கமிஷன் வரலாறு.
    இப்போது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்ச்சிக்கெதிராக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.,இதன் ஆயுட்காலம் சில ஆண்டுகள்.உதாரணமாக இரண்டு ஆண்டுகள் என்றால் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஊழல் விவகாரம் அதே சூட்டோடு இருந்தால்(சத்தியமாக இருக்க வாய்ப்பில்லை.இந்த இடத்தை வேறு ஊழல்கள் ஆக்கிரமிக்க வருகின்றன!!!இதுதான் இந்தியா ஊழல் வரலாறு ).காங்கிரஸ் இந்த கமிஷனின் ஆயுட்காலத்தை மேலும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கும்.அப்புறம் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிச்சயமாக இதன் ஆயுள் முடிக்கப்படும்.ஏனெனில் ஒருவேளை எதிர்கட்சிகள் ஆட்சிக்கு வந்துவிட்டால்?(அப்படியே அவர்கள் ஆயுட்காலத்தை நீட்டித்தாலும் யாரும் தண்டிக்கபடபோவதில்லை.ஏனெனில் அவர்களும் பல ஊழல்கள்முன்பு செய்திருப்பார்.)
      ஆக இந்த விசாரணை கமிஷன் என்னும் போலி மாயையே ஒரு கண்துடைப்புதான்.எதற்கு மக்கள் வரிப்பணத்தை வீணாக்க வேண்டும்?எப்படி இருந்தாலும் ஊழல் செய்தவர்கள் தண்டிக்கபடபோவதில்லை.ஆதலால் நான் இவ்வளவு ஊழல் பண்ணியிருக்கிறேன்.நீ ஆட்சிக்கு வந்தால் நீயும் பண்ணிக்கொள்.ரெண்டு பேரும் சேர்ந்து மக்களை ஓட்டாண்டி ஆக்குவோம் என கூறி எல்லா எழவு கமிஷனையும் ஒழித்து காட்டுங்கள்.வாழ்க சன நாயகம்!!!!!

வெள்ளி, 3 டிசம்பர், 2010

இப்படியும் சொல்வார் இவர்!!!

குலைன்ஜர் முரசொலியில் அறிக்கை: கழகக்கண்மணியே  நீரா ராடியா -ராசா உரையாடலை பதிவு செய்தது ஒரு பார்பன டேப் ரெகார்டர்.பார்த்தாயா ஆரிய சதியை?

வியாழன், 2 டிசம்பர், 2010

குற்றவாளியை விடு அதை வெளிப்படுத்தியவனை பிடி:அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அட்டகாசம்

கடந்த சில நாட்களாக விக்கிலீக்ஸ்    ஜூலியன் அச்சாஞ்  வெளியிட்ட Cable Gate என்கிற ஆவானங்கள்தான்  ஊடகங்களை கலக்கி கொட்னிருக்கிறது(தமிழ் ஊடகங்களை அல்ல!இங்கு வனிதா  ஓடிபோனாலா  என்பதுதான் முக்கிய செய்தி  .நாசமாய் போக!)
அப்படி என்ன இருக்கிறது இந்த ஆவணங்களில்?

                                          சரித்திரத்தில் ஒரு வீரன் -ஜூலியன்  அசாஞ்
அமெரிக்கா மற்ற நாட்டு விவகாரங்களில் எப்படி தன அக்டோபஸ்  விஷ கரங்களை நீட்டி ஆட்டுவித்திருக்கிறது என்பதுதான் இந்த ஆவங்களில் பெரும்பாலான செய்தி.
உதாரணமாக ஹிலரி கிளிண்டன் இந்தியா ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கேட்பதை "அலைகிறார்கள் அவர்கள்" என்று இந்தியாவை அசிங்கப்படுத்தியிருக்கிறார்.(இதை கண்டித்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை இந்தியா.ஆமா என்ன இருந்தாலும் எசமானர் இல்லையா.எப்படி எதிர்த்து பேசமுடியும்!!!)
               இதுதவிர இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாகவும் ஆவனைகள் வெளிவந்திருக்கிர்ன்றன.ஆனால் அதில் எல்லோருக்கும் தெரிந்த செய்தியே வெளி வந்திருக்கிறது.அதாவது ராஜபக்சே சகோதரர்கள் போற்குற்றவாளிகள் என்பது.ஆனால் தெரிந்து என்ன செய்து விட்டன அமெரிக்காவும் அதன் கைத்தடியான ஐநா சபையும்?
ஏற்கெனவே ஈராக் மற்றும் ஆப்கனில் அமெரிக்க மற்றும் நாட்டோ கூட்டுப்படைகள் நடத்திய அட்டூழியங்களை  வெளியிட்டுள்ளது இதே விக்கிலீக்ஸ்  .
ஆக புஷ் ஹிலரி கிளிண்டன் ஒபமா பிரிட்டனை பிரதமர் டோனி பளீர் ..etc..etc என இந்த இராக் மற்றும் ஆப்கன் போருக்கு உதவிய அனைவரும் போற்குற்றவாளிகளே!
ஊருக்கு நாட்டமை வேலை பார்க்கும் அமெரிக்கா(ஒரு நூறு ஆண்டாக இதைதான் செய்து வந்திருக்கிறது.சாட்சி:வரலாறு) தான் செய்த போர்குற்றங்கள் மற்றும் உளவு வேலைகளை  குற்றம் என ஒப்புகொள்ளாதது அதன் உண்மை முகத்தை உலகத்திற்கு காட்டியிருக்கிறது(விவரம் தெரிந்தவர்களுக்கு அமெரிக்காவின் விஷமத்தனம் சொல்லி விளங்க வேண்டியதில்லை.ஆனால் இன்னும் பெரும்பாலான இந்தியா பிரஜைகள் ஒபாமாவை காந்தி ரேஞ்சுக்கு பார்த்த பார்க்கும் அவல நிலைதான் நம் நாட்டில் உள்ளது.அவர்களுக்கு இந்த ஆவனைகள் ஒபாமாவின் இரட்டை முகத்தை அம்பலப்படுத்தியிஐக்கிறது.திருந்துங்கையா!)
அதுவும் இந்தியா சம்பந்தப்பட்ட ஆவணங்களும் வெளியாகி உள்ளன.ஆனால் இந்த ஆவணங்கள்  வெளியாகும் முன்பே அமெரிக்கா தன அடிமை இந்தியாவை எச்சரித்தது.(இந்த மாதிரி எங்கள் கேப்மாரித்தனம் வெளிவரப்போகிறது.அதெல்லாம் நம்ப வேண்டாம்.நாக ரொம்ப நல்லவங்க..அடங்கப்பா ஆள்பவர்களே இன்னும் அமெரிக்க அடிமையாகத்தான் நாம் இருக்க வேண்டுமா?உங்களுக்கு மூளை  கிடையாதா?அது சரி அரசியல் வாதிக்கு மூளையேது  ?அட்லீஸ்ட் தேசப்பற்று ? அதெல்லாம் இப்போது அருங்காட்சியகத்தில்தான் பார்க்கமுடியும்!!!)
அந்த ஆவன்னகளில் முக்கியமாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் தீவிரவாத எதிர்ப்பு நிதியை அவர்கள் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்துகிறார்கள்  என்பது தெரிந்தே அமெரிக்கா பாகிஸ்தானுக்கு நிதி உதவி தொடர்ந்து அளித்துவருகிறது.(ஏன் பேசாம அமெரிக்க ராணுவத்தையே பாகிஸ்தானுக்கு அனுப்பிடுங்களேன் .அட சை)
         இதை விட முக்கியமாக இந்தியாவின் தூதரக அதிகாரிகள் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் உளவாளிகள் ஆகியோரின் கைரேகை மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வோர்ட் மேலும் அவர்களின் கண்ணின் பாப்பா (Iris)அமைப்பு முகவரி மற்றும் மேலும்பல ரகசியங்களை உளவாளிகளை விட்டு கண்காணிக்க சொல்லியிருக்கிறார் அமெரிக்க Secretory of State  ஹிலரி கிளிண்டன்.
  
           பின்னே அடிமைகளை பற்றி எசமானர்கள் தெரிந்துவைத்து கொள்ள வேண்டாமா?அட கருமமே!!!இதுக்கு எதுக்குடா தனியா இந்தியா கொடி.. பிரதமர்.. பாராளுமன்றம்.. மட்டை..  எல்லாம்  ?பேசாம இந்தியா அமெரிக்காவின் காலனி நாடு   என அறிவித்து தொலைத்துவிடலாமே?
           சபாஷ்.இந்தியாவை ஆட்டிவைப்பது பிரதமர் என்னும் பொம்மை மூலம் ஒரு இத்தாலிய பிரஜை.இந்தியாவில் என்ன நடக்கிறது அதன் வெளியுறவுக்கொள்கை என்ன என்பதையெல்லாம் கண்காணிப்பது எசமான் அமெரிக்கா!!!இதுவல்லவோ தேசியம் ..தேசபக்தி...சுயசார்பு நிலை..நாசமாய் போக!!!
            இதில் நகைச்சுவை என்னவென்றால்(ஒபாமாவிற்கு அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கியது அல்ல.அது இந்த நூற்றாண்டின் நகைச்சுவை!!) இத்தனை உளவு வேலைகளையும் போற்குற்றங்களையும் புரிந்த இன்னும் பல களவானித்தனங்களை  செய்து கொண்டிருக்கும்   அமெரிக்கா  மற்றும் அதற்கு உதவிய நாடுகள் இல்லையாம்.இந்த களவானித்தனங்களை வெளியிட்ட விகிலீக்ஸ் உரிமையாளர் ஜூலியன் ஆசான்ஜாம்!!!சூப்பரப்பு கொலை செய்தவன் குற்றவாளி அல்ல அதை வெளியில் கண்டுபிடித்து சொல்பவன்தான் குற்றவாளி.மேலும் அவர் மீது கற்பழிப்பு புகார் வேறு ஜோடிக்கப்பட்டிருக்கிறது.அமெரிக்கான்னா சும்மாவா?ஹீ ஹீ ( இதற்கு முன் நான் எழுதியதுபோல் ரத்தன் டாடாவின் நீரா ராடியவுடனான பேச்சு(எ)பேரம் குற்றமல்ல என்றும் இதை பதிவு செய்தவர்களை தண்டிக்க வேண்டுமெனவும் டாடா வழக்கு தொடர்ந்திருக்கிறார்.)
          மேலும் அசாஞ்சை பிடிக்க சர்வதேச போலீசு (அதான் Interpol) முயற்சி    செய்து  வருகிறதாம் .ஆமா  அந்த  போர்  குற்றவாளி  ராஜபக்சேவையோ    அல்லது  கொத்ரோச்சியையோ  பிடிக்க  வக்கில்ல  ..சிரிப்பு  போலீசுதான்  நீங்க !!!  

             இப்போது புரிந்ததா?அமெரிக்க ஏகாதிபத்யதிற்கும் இந்தியா முதலாளித்துவத்திற்கும்    ஒரு சின்ன வேறுபாடு கூட இல்லை.
           An American has always two opinions.one for himself and second for the rest   என்று Mark Twain அமெரிக்கர்களின் இரட்டைதனமையை குறிப்பிடுகிறார்.இப்போது அது மற்றொரு  முறை நிரூபணம் ஆகியிருக்கிறது.

பி கு: இந்த  http://www.wikileaks.org/   என்னும்  வலைத்தளம்  பல  நேரங்களில்  வருவதில்லை ( ஹ்ம்ம் உண்மைய  சொன்னா கோவம்தான் வரும் எல்லாருக்கும்!!!..இவனே  இந்த  ஆவணங்கள்  வேண்டுவோர்    கீழே  உள்ள  இணைப்பை  தங்கள்  Browser இல்  காபி,பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்
   http://www.filefactory.com/file/b48a7g7/n/cablegate-201011301101.7z
      இது ஒரு 7Zip file.அதாவது  வின்சிப் போல.இதை extract சிய கீழ்கண்ட மென்பொருளை பயன்படுத்துங்கள்.
   http://www.7-zip.org/download.html

இன்னொரு லெட்டர் வந்துது.....


செய்தி: ராசா பிரதமருக்கு மரியாதை குறைவாக கடிதம் எழுதினார்.
மன்மோகன் சிங்க்: இன்னாதிது  லெட்டர் இப்படி அசிங்கமா இருக்கு..அவ்வவ் இன்னொரு கடிதம் இப்படி வந்துது சிங் செத்துடுவான்.ஆவ்வ்வ்வவ்