வெள்ளி, 31 டிசம்பர், 2010

இலவச மருத்துவம் பாத்தா கைது ஆயிரகணக்குல வாங்கி மருத்துவம் பாத்தா பத்மபூஷன்

ஆம் இதான் இந்த சனநாயகம் என்று "பெயரளவில்" சொல்லப்படும் இந்தியாவில் நடக்கிறது.பினாயக் சென் என்கிற வேலூர் சி.எம்.சி இல் குழந்தை வைத்தியம்(Paediatrics) படித்து விட்டு சட்டிஸ்கரில் வசிக்கும் பழங்குடி மலைவாழ் மக்களுக்கு இலவச மருத்துவம் செய்து வந்தார்.அந்த மலைவாழ மக்கள் வசிக்கும் பகுதிகளில் மருந்துக்கு(இந்த மருந்து வேற!!) கூட மருத்துவர்கள் கிடையாது.அதேபோல்தான் மருந்துகளும். எனவே இந்த மக்களுக்கு தான் படித்த மருத்துவம் பயனுற வேண்டும் என நினைத்த பினாயக் சென் அங்கு சென்று மக்களுக்கு இலவசமாகவும் குறைந்த செலவிலும் மருத்துவம் பார்த்து வந்தார்.

        இது பொறுக்குமா கார்பரேட் கைகூலியாய் மாறிவிட்ட அரசுக்கு?இதில் காங்கிரஸ் பா.ஜா.க. வேறுபாடு ஒரு மண்ணும் கிடையாது(கம்யூனிஸ்டும் அப்படி ஆகிவிட்டது வேறு கதை).சத்திஸ்கர் மாநில பா.ஜா.க மட்டும் இதற்கு விதிவிலக்கு ஆகிவிடுமா என்ன?கண்ணுக்கு தெரியாத ராமருக்கு கோவில்கட்ட காடும் அக்கறையை இவர்கள் கண்ணுக்கு தெரியும் மக்களின் மேல் என்றாவது காட்டியிருக்கின்றனரா  ?இதில் காங்கிரஸ் பா ஜ க வேறுபாடில்லை.இது நாட்டின் சாபக்கேடு.
        ஏற்கெனவே பினாயக் சென் 2008 ஆம் ஆண்டு இதே போல் போலி ஆவணங்கள்  மூலம் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு படுத்தி கைது செய்யப்பட்டார்.அதன் பின் அவரின் கூட படித்தவர்களும் வேலைபார்த்த மருத்துவர்களும் வேலூர் சி.எம் சி கல்லூரியும் போராடியதால் விடுதலை செய்யப்பட்டார்.ஆனால் இப்போது அதே கேப்மாரிதனத்தை அரசு மீண்டும் செய்திருக்கிறது.
         இவர் மாவோயிஸ்டுகளுக்கு தூதுவராக இருந்தாராம்.அதற்காக "புனையப்பட்ட" சில கடிதங்களை  அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது.
         சூப்பரப்பு  .அப்படியே நாடு பூரா ஏழை மக்கள், பழகுடியினருக்கு இலவச மருத்துவம் செய்யும் மருத்துவர்களை பிடித்து உள்ளே போடுங்கடா.அப்போதானே அப்போலோ போர்டிஸ் etc..etc.. போன்ற தனியார் கார்பரேட் கழிசடைகள் கொள்ளையடிக்க முடியும்.
         அரசு என்பது மக்களுக்கு என்பது மாறி அரசு என்பது முதலாளிகளுக்கும்  கார்பரேட்டுகளுக்கும் என எப்போதோ மாறிவிட்டது.
         இலவச மருத்துவம் பார்த்தால் கைது.ஆனால் ஆயிரக்கணக்கில் "பிடுங்கி" வைத்தியம் பார்த்தால் அவர்களுக்கு பத்மபூஷன் விருது.சூப்பர்.
          அப்போலோ  மருத்துவமனை ரெட்டிக்கு  பத்மபூஷன்.எதுக்கு?ஒரு சின்ன தலைவலிக்கு போனா கூட அந்த ஸ்கேன் இந்த எக்ஸ் ரென்னு மக்களை ஓட்டாண்டி ஆக்குனதுக்கா?என்னாங்கடா இது?
          அரசு மருத்துவமனை எந்த லட்சணத்தில் இயங்குகிறது என்பதை பார்க்க வக்கில்லாத மந்திரிகள் மற்றும் அமைச்சர்கள் தனியார் மருத்துவமனையில் ஒரு கக்கூஸ் கட்டினாலும் கூட  "ஆஹா ஓஹோ" என புகன்ழ்து போஸ் கொடுப்பது கூட்டி கொடுப்பதை விட கேவலமானது.வாழ்க சன நாயகம்.

வியாழன், 9 டிசம்பர், 2010

வழக்கம் போல் விசாரணை கமிஷன்-எதற்கு மக்கள் வரிப்பணத்தை வீணடிக்க வேண்டும்?

ஸ்பெக்ட்ரம்  பிரச்சனையை இந்தியாவையும் தாண்டி உலகமே காரி முழிந்த விவகாரமாகிவிட்டது.இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் ஒரு நாள் கூட நடை பெற விடாமல் எதிர்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றன.எதிர்கட்சிகள் வலியுறுத்துவது நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடவேண்டும் என்பதை.ஆனால் காங்கிரஸ் அரசோ பொது கணக்கு குழு விசாரணையே போதும் என எதிர் கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து மறுத்து வருவதால் ஒரு முட்டுக்கட்டை ஏற்ப்பட்டது.
    எதிர் கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கேட்பதற்கு காரணம் இந்த அலைகற்றை ஊழலில் ராசா மாட்டுமில்லாமல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும், டாடா அம்பானி போன்ற கார்பரேட்டுகளும் ஈடுப்பட்டிருப்பதால் முழுமையான சுதந்திரமான ஞாயமான    விசாரணை வேண்டும் என்பதே.
   ஆனால் காங்கிரஸ் பொது கணக்கு குழு விசாரணையே போதும் என கூறி அதற்கு வலுசேர்க்கும் விதமாக பொது கணக்கு குழு தலைவர் பா.ஜா.க  கட்சியை சேந்தவர் என்பதால் அதுவே போதும் என்கிறது.
    இருபது நாட்களாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டதால் பல கோடி இழப்பு ஏற்ப்பட்டதாகவும் இதற்கு எதிர் கட்சிகள் காரணம் என காங்கிரஸ் பழி சுமத்தியது.
       இப்போது திடீரென ராசா வீட்டில் சி பீ ஐ ரெய்டு(அடங்கப்பா ஊழல் நடந்து மூணு வருடம் கழிச்சி போனா பைத்தியகாரன் கூட  எல்லா ஆதரங்களையும் அழித்து முடித்திருப்பான்!!!).அதோடு மட்டுமலாமல் ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற  நீதிபதி சிவ​ராஜ் பாட்​டீல் தலைமையில்(!!) ஒரு நபர்  விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது.

        மேலும் இந்த விசாரணை 2001 ஆண்டில் இருந்து நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.!!(பா கா சாவிற்கு செக் வைக்கும் விதமாக)அப்போ நிச்சயமாக யாரும் மாட்டபோவதில்லை. ஏனெனில் 2001-2004 ஆண்டுவரை ஆட்சியில் இருந்த பா ஜா க மட்டும் தாக சீலர்களாய் நிச்சயமாய் இருந்திருக்கமாட்டார்கள்.இப்போ இவர்கள் காங்கிரசுடன் ரகசிய பேச்சில் ஈடுபடுவார்கள்.நீயும் திருடன் நானும் திருடன்.எதுக்கு சண்டை?சேர்ந்து மக்களை தொடர்ந்து மேலும் திருடுவோம் வா!!!
        "வழக்கம் போல்" மற்றொரு விசாரணை கமிஷன்.வழக்கம் போல் பல மாதங்களுக்கு விசாரணை இழுத்தடிக்கப்படும்.அப்புறம் இந்த ஊழலில் ராசா மற்றும் பிறரின் தொடர்பிற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என கூறப்படும்.மேலும் ஒரு சம்பிரதாயத்திற்காக  சில கண்டன்களும் சில அறிவுரைகளும் வழங்கப்படும்.அதுதான் விசாரணை கமிஷன் பனி.இதற்கு பல கோடிகள் செலவழிக்கப்படும்.
         இந்த விசாரணை  கமிஷன் அமைக்கப்பட்ட காரணம் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடவேண்டும்  என தொடர்ந்து கூறிவரும் எதிர்கத்சிகளின் வாயை மூடுவது.
        இரண்டாவதாக "இதோ பார்  ஊழலுக்கு எதிராக நான் நடவடிக்கை எடுத்துவிட்டேன்" என்று காங்கிரஸ் தனது காலரை தூக்கி விட்டு கொள்ள.மேலும் இப்போது பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதால் அவை முடியும் வரை விசாரணை கமிஷன் தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்காமல் பார்த்துகொள்ளபடும்.
       மேலும் தேர்தல் பிரசாரத்தின்போது நாங்கள் ஊழலுக்கு  எதிரானவர்கள் என்ற  ஒரு போலி மாயையை காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் ஏற்படுத்தி ஒட்டு பொறுக்க முயலும்.
       இது வரை ஏதாவது ஒரு விசாரணை கமிஷனால் தண்டிக்கப்பட்ட அல்லது பொதுவாக ஊழால் செய்ததற்காக தண்டிக்கப்பட்ட ஒரு அரசியல்வாதியையும் நாம் காட்ட முடியாது.ஒன்று பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு இழுத்தடிக்கப்பட்டு பின்னர் "சரியான ஆதாரம் இல்லை" என கூறி விடுவிக்கப்பட்டனர்.இல்லையேல் நான் முன்பே கூறியதுபோல் விசாரணை கமிஷன்.
     இந்த விசாரணை கமிஷன் என்பது குறிப்பிட்ட ஆயுட்காலம் கொண்டது.உம்.இரண்டு ஆண்டுகள்.இரண்டு ஆண்டுகள் முடிந்தபின் அதன் ஆயுளை நீட்டிப்பதா வேண்டாமா என்பதை அப்போது ஆட்சியில் இருக்கும் அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.
    இதனால் என்ன ஆனது என்றால் ஆளும்கட்சி எதிர்கட்சியை சேர்ந்த ஒருவருக்கு எதிராக விசாரணை கமிஷன் அமைக்கும்.அதன் ஆயுள் அந்த குறிப்பிட்ட ஆளும் கட்சி இருக்கும்வரை.பின்னர் ஒரு வேலை எதிர்கட்சி ஆட்சிக்கு வருமெனில் அது இந்த கமிஷனின் ஆயுளை முடித்து வைக்கும்.இதுதான் விசாரணை கமிஷன் வரலாறு.
    இப்போது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்ச்சிக்கெதிராக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.,இதன் ஆயுட்காலம் சில ஆண்டுகள்.உதாரணமாக இரண்டு ஆண்டுகள் என்றால் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஊழல் விவகாரம் அதே சூட்டோடு இருந்தால்(சத்தியமாக இருக்க வாய்ப்பில்லை.இந்த இடத்தை வேறு ஊழல்கள் ஆக்கிரமிக்க வருகின்றன!!!இதுதான் இந்தியா ஊழல் வரலாறு ).காங்கிரஸ் இந்த கமிஷனின் ஆயுட்காலத்தை மேலும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கும்.அப்புறம் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிச்சயமாக இதன் ஆயுள் முடிக்கப்படும்.ஏனெனில் ஒருவேளை எதிர்கட்சிகள் ஆட்சிக்கு வந்துவிட்டால்?(அப்படியே அவர்கள் ஆயுட்காலத்தை நீட்டித்தாலும் யாரும் தண்டிக்கபடபோவதில்லை.ஏனெனில் அவர்களும் பல ஊழல்கள்முன்பு செய்திருப்பார்.)
      ஆக இந்த விசாரணை கமிஷன் என்னும் போலி மாயையே ஒரு கண்துடைப்புதான்.எதற்கு மக்கள் வரிப்பணத்தை வீணாக்க வேண்டும்?எப்படி இருந்தாலும் ஊழல் செய்தவர்கள் தண்டிக்கபடபோவதில்லை.ஆதலால் நான் இவ்வளவு ஊழல் பண்ணியிருக்கிறேன்.நீ ஆட்சிக்கு வந்தால் நீயும் பண்ணிக்கொள்.ரெண்டு பேரும் சேர்ந்து மக்களை ஓட்டாண்டி ஆக்குவோம் என கூறி எல்லா எழவு கமிஷனையும் ஒழித்து காட்டுங்கள்.வாழ்க சன நாயகம்!!!!!

வெள்ளி, 3 டிசம்பர், 2010

இப்படியும் சொல்வார் இவர்!!!

குலைன்ஜர் முரசொலியில் அறிக்கை: கழகக்கண்மணியே  நீரா ராடியா -ராசா உரையாடலை பதிவு செய்தது ஒரு பார்பன டேப் ரெகார்டர்.பார்த்தாயா ஆரிய சதியை?

வியாழன், 2 டிசம்பர், 2010

குற்றவாளியை விடு அதை வெளிப்படுத்தியவனை பிடி:அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அட்டகாசம்

கடந்த சில நாட்களாக விக்கிலீக்ஸ்    ஜூலியன் அச்சாஞ்  வெளியிட்ட Cable Gate என்கிற ஆவானங்கள்தான்  ஊடகங்களை கலக்கி கொட்னிருக்கிறது(தமிழ் ஊடகங்களை அல்ல!இங்கு வனிதா  ஓடிபோனாலா  என்பதுதான் முக்கிய செய்தி  .நாசமாய் போக!)
அப்படி என்ன இருக்கிறது இந்த ஆவணங்களில்?

                                          சரித்திரத்தில் ஒரு வீரன் -ஜூலியன்  அசாஞ்
அமெரிக்கா மற்ற நாட்டு விவகாரங்களில் எப்படி தன அக்டோபஸ்  விஷ கரங்களை நீட்டி ஆட்டுவித்திருக்கிறது என்பதுதான் இந்த ஆவங்களில் பெரும்பாலான செய்தி.
உதாரணமாக ஹிலரி கிளிண்டன் இந்தியா ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கேட்பதை "அலைகிறார்கள் அவர்கள்" என்று இந்தியாவை அசிங்கப்படுத்தியிருக்கிறார்.(இதை கண்டித்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை இந்தியா.ஆமா என்ன இருந்தாலும் எசமானர் இல்லையா.எப்படி எதிர்த்து பேசமுடியும்!!!)
               இதுதவிர இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாகவும் ஆவனைகள் வெளிவந்திருக்கிர்ன்றன.ஆனால் அதில் எல்லோருக்கும் தெரிந்த செய்தியே வெளி வந்திருக்கிறது.அதாவது ராஜபக்சே சகோதரர்கள் போற்குற்றவாளிகள் என்பது.ஆனால் தெரிந்து என்ன செய்து விட்டன அமெரிக்காவும் அதன் கைத்தடியான ஐநா சபையும்?
ஏற்கெனவே ஈராக் மற்றும் ஆப்கனில் அமெரிக்க மற்றும் நாட்டோ கூட்டுப்படைகள் நடத்திய அட்டூழியங்களை  வெளியிட்டுள்ளது இதே விக்கிலீக்ஸ்  .
ஆக புஷ் ஹிலரி கிளிண்டன் ஒபமா பிரிட்டனை பிரதமர் டோனி பளீர் ..etc..etc என இந்த இராக் மற்றும் ஆப்கன் போருக்கு உதவிய அனைவரும் போற்குற்றவாளிகளே!
ஊருக்கு நாட்டமை வேலை பார்க்கும் அமெரிக்கா(ஒரு நூறு ஆண்டாக இதைதான் செய்து வந்திருக்கிறது.சாட்சி:வரலாறு) தான் செய்த போர்குற்றங்கள் மற்றும் உளவு வேலைகளை  குற்றம் என ஒப்புகொள்ளாதது அதன் உண்மை முகத்தை உலகத்திற்கு காட்டியிருக்கிறது(விவரம் தெரிந்தவர்களுக்கு அமெரிக்காவின் விஷமத்தனம் சொல்லி விளங்க வேண்டியதில்லை.ஆனால் இன்னும் பெரும்பாலான இந்தியா பிரஜைகள் ஒபாமாவை காந்தி ரேஞ்சுக்கு பார்த்த பார்க்கும் அவல நிலைதான் நம் நாட்டில் உள்ளது.அவர்களுக்கு இந்த ஆவனைகள் ஒபாமாவின் இரட்டை முகத்தை அம்பலப்படுத்தியிஐக்கிறது.திருந்துங்கையா!)
அதுவும் இந்தியா சம்பந்தப்பட்ட ஆவணங்களும் வெளியாகி உள்ளன.ஆனால் இந்த ஆவணங்கள்  வெளியாகும் முன்பே அமெரிக்கா தன அடிமை இந்தியாவை எச்சரித்தது.(இந்த மாதிரி எங்கள் கேப்மாரித்தனம் வெளிவரப்போகிறது.அதெல்லாம் நம்ப வேண்டாம்.நாக ரொம்ப நல்லவங்க..அடங்கப்பா ஆள்பவர்களே இன்னும் அமெரிக்க அடிமையாகத்தான் நாம் இருக்க வேண்டுமா?உங்களுக்கு மூளை  கிடையாதா?அது சரி அரசியல் வாதிக்கு மூளையேது  ?அட்லீஸ்ட் தேசப்பற்று ? அதெல்லாம் இப்போது அருங்காட்சியகத்தில்தான் பார்க்கமுடியும்!!!)
அந்த ஆவன்னகளில் முக்கியமாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் தீவிரவாத எதிர்ப்பு நிதியை அவர்கள் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்துகிறார்கள்  என்பது தெரிந்தே அமெரிக்கா பாகிஸ்தானுக்கு நிதி உதவி தொடர்ந்து அளித்துவருகிறது.(ஏன் பேசாம அமெரிக்க ராணுவத்தையே பாகிஸ்தானுக்கு அனுப்பிடுங்களேன் .அட சை)
         இதை விட முக்கியமாக இந்தியாவின் தூதரக அதிகாரிகள் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் உளவாளிகள் ஆகியோரின் கைரேகை மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வோர்ட் மேலும் அவர்களின் கண்ணின் பாப்பா (Iris)அமைப்பு முகவரி மற்றும் மேலும்பல ரகசியங்களை உளவாளிகளை விட்டு கண்காணிக்க சொல்லியிருக்கிறார் அமெரிக்க Secretory of State  ஹிலரி கிளிண்டன்.
  
           பின்னே அடிமைகளை பற்றி எசமானர்கள் தெரிந்துவைத்து கொள்ள வேண்டாமா?அட கருமமே!!!இதுக்கு எதுக்குடா தனியா இந்தியா கொடி.. பிரதமர்.. பாராளுமன்றம்.. மட்டை..  எல்லாம்  ?பேசாம இந்தியா அமெரிக்காவின் காலனி நாடு   என அறிவித்து தொலைத்துவிடலாமே?
           சபாஷ்.இந்தியாவை ஆட்டிவைப்பது பிரதமர் என்னும் பொம்மை மூலம் ஒரு இத்தாலிய பிரஜை.இந்தியாவில் என்ன நடக்கிறது அதன் வெளியுறவுக்கொள்கை என்ன என்பதையெல்லாம் கண்காணிப்பது எசமான் அமெரிக்கா!!!இதுவல்லவோ தேசியம் ..தேசபக்தி...சுயசார்பு நிலை..நாசமாய் போக!!!
            இதில் நகைச்சுவை என்னவென்றால்(ஒபாமாவிற்கு அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கியது அல்ல.அது இந்த நூற்றாண்டின் நகைச்சுவை!!) இத்தனை உளவு வேலைகளையும் போற்குற்றங்களையும் புரிந்த இன்னும் பல களவானித்தனங்களை  செய்து கொண்டிருக்கும்   அமெரிக்கா  மற்றும் அதற்கு உதவிய நாடுகள் இல்லையாம்.இந்த களவானித்தனங்களை வெளியிட்ட விகிலீக்ஸ் உரிமையாளர் ஜூலியன் ஆசான்ஜாம்!!!சூப்பரப்பு கொலை செய்தவன் குற்றவாளி அல்ல அதை வெளியில் கண்டுபிடித்து சொல்பவன்தான் குற்றவாளி.மேலும் அவர் மீது கற்பழிப்பு புகார் வேறு ஜோடிக்கப்பட்டிருக்கிறது.அமெரிக்கான்னா சும்மாவா?ஹீ ஹீ ( இதற்கு முன் நான் எழுதியதுபோல் ரத்தன் டாடாவின் நீரா ராடியவுடனான பேச்சு(எ)பேரம் குற்றமல்ல என்றும் இதை பதிவு செய்தவர்களை தண்டிக்க வேண்டுமெனவும் டாடா வழக்கு தொடர்ந்திருக்கிறார்.)
          மேலும் அசாஞ்சை பிடிக்க சர்வதேச போலீசு (அதான் Interpol) முயற்சி    செய்து  வருகிறதாம் .ஆமா  அந்த  போர்  குற்றவாளி  ராஜபக்சேவையோ    அல்லது  கொத்ரோச்சியையோ  பிடிக்க  வக்கில்ல  ..சிரிப்பு  போலீசுதான்  நீங்க !!!  

             இப்போது புரிந்ததா?அமெரிக்க ஏகாதிபத்யதிற்கும் இந்தியா முதலாளித்துவத்திற்கும்    ஒரு சின்ன வேறுபாடு கூட இல்லை.
           An American has always two opinions.one for himself and second for the rest   என்று Mark Twain அமெரிக்கர்களின் இரட்டைதனமையை குறிப்பிடுகிறார்.இப்போது அது மற்றொரு  முறை நிரூபணம் ஆகியிருக்கிறது.

பி கு: இந்த  http://www.wikileaks.org/   என்னும்  வலைத்தளம்  பல  நேரங்களில்  வருவதில்லை ( ஹ்ம்ம் உண்மைய  சொன்னா கோவம்தான் வரும் எல்லாருக்கும்!!!..இவனே  இந்த  ஆவணங்கள்  வேண்டுவோர்    கீழே  உள்ள  இணைப்பை  தங்கள்  Browser இல்  காபி,பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்
   http://www.filefactory.com/file/b48a7g7/n/cablegate-201011301101.7z
      இது ஒரு 7Zip file.அதாவது  வின்சிப் போல.இதை extract சிய கீழ்கண்ட மென்பொருளை பயன்படுத்துங்கள்.
   http://www.7-zip.org/download.html

இன்னொரு லெட்டர் வந்துது.....


செய்தி: ராசா பிரதமருக்கு மரியாதை குறைவாக கடிதம் எழுதினார்.
மன்மோகன் சிங்க்: இன்னாதிது  லெட்டர் இப்படி அசிங்கமா இருக்கு..அவ்வவ் இன்னொரு கடிதம் இப்படி வந்துது சிங் செத்துடுவான்.ஆவ்வ்வ்வவ்

சனி, 27 நவம்பர், 2010

வெளுத்து போன சாத்தான் டாடாவின் சாயம்

 இந்தியாவே மாமனிதன் இந்தியாவின் புகழை உயர்த்தியவர் அது இது என மக்கள் ரத்தன் டாடாவின் போலி  மாயையில் சிக்கவைக்கப்பட்டிருன்தனர்(பல வருடங்களாக..கிட்டத்தட்ட நூறு வருடங்களாக நம்ப வைக்கபட்டிருன்தனர்).சென்ற வாரம் கூட சத்தீஸ்கர்  மாநிலம் துவக்கப்பட்ட ஏழாவது ஆண்டு விழாவில் பேசிய(அதற்கு இவரை எதற்கு அழைத்தனர்?ஒன்னும் வெலங்கள்) டாடா தொன்னூறுகளில் தான் விமான சேவை துவங்க விரும்பயதாகவும் ஆனால் அப்போது விமான போக்குவரத்து அமைச்சராக இருந்த ஒருவர்(பெயரை டாடா சொல்லவில்லை) 15 கோடி லஞ்சம் கேட்டதாகவும் இவர் ஏதோ இந்தியன் பட தாத்தா போல் "லஞ்சம் கொடுக்க மாட்டேன்" என கூறியதால் விமான சேவை துவங்கும் தந்து கனவு தவிடு போடியானதாகவும் கூறினார்.இது பற்றி சென்ற வாரமே எழுதிய நான்(டாடா என்னும் சாத்தான் ஓதிய வேதம்) இவர் பெரிய ஒழுங்கா?தனது இத்தனை வருட வியாபார வாழ்கையில் இவர் யாருக்கும் லஞ்சம் கொடுக்கவில்லையா?என வினா எழுப்பியிருந்தேன்.


அதற்கு சிகரம் வைத்தாற்போல் சென்ற வாரம் ஊரே நாறிய நீரா ராடியா  என்ற பெண்மணி விவகாரமும் அதில் டாடாவின் "நேர்மையும்" விளங்கியது.
அதில் நீரா ராடியா  என்கிற அரசியல் மா..(சீ கொஞ்சம் நாகரீகமாக தரகர் என கூறுகிறேன்)வேலை பார்க்கும் பெண்ணிடம் கனிமொழி ராசா  உட்பட "கழக கண்மணிகள் " ஆற்றிய தமிழர் சேவை கண்டு அனைவருக்கும் புல்லரித்திருக்கும்  .
        அந்த கருமாந்திர உரையாடலை கேட்க கீழே உள்ள இணைப்பில் சொடுக்கவும்
.
http://www.filefactory.com/file/b473bd9/n/IMP-Ratan-Spectrumissue-20090611-155759.mp3


அந்த உரையாடல்களில் வந்த ஒன்றுதான் டாடா-நீரா ராடியா  உரையாடல்.
அதில் இந்த "உத்தமன்" "வெள்ளை மனசுக்காரன்" டாடா நீரா ராடியாவிடம்  பேசுகையில் தயாநிதி மாறன் தொலை தொடர்பு மந்திரியாக வந்துவிடக்கூடாது என்பதிலும் யார் வர வேண்டும்(அவர் பெயரை சொல்லவும் வேண்டுமா?) என்பதிலும் டாடா காட்டிய அக்கறை புல்லரித்தது.அப்படி இவர் நினைத்த ஆள் மந்திரியாகவில்லைஎனில் எப்படி ஜப்பான் கம்பெனியான NTT Docomo என்ற நிறுவனத்துடன் இணைந்து GSM சேவையான (ஏற்கெனவே  டாடா  CDMA சேவை பல ஆண்டுகளாக வைத்திருப்பது அனைவருக்கும் தெரியும்)Tata-Docomo என்ற சேவையை இவரால் தொடங்கி கொள்ளை.. சாரி சம்பாதித்திருக்க முடியும்?
இவரின் சாயம் வெளுத்த நிலையில் இதே போல்தான் அம்பானி உள்ளிட்ட "மக்கள் சேவகர்களின்" உண்மை முகம் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
அப்புறம் இந்த டாடாவின் நானோ தொழிற்சாலையை  மேற்குவங்க மாநில சிங்கூரில் அமைக்க டாடாவிற்கு  கைக்கூலியாக செயல்பட்ட(மேலும் அங்கிருந்த விவசாயிகளிடம் இருந்து காவல் துறை மூலம் விளை நிலங்களை பிடுங்கிய) இடதுசாரி அரசாங்கம் இப்போது இந்த டாடாவை கண்டித்து தனது கட்சி பத்திரிகையில் எழுதுவது கேலிக்கூத்து.இப்போது டாடா கெட்டவர் என்றால் அப்போது  இடதுசாரி அரசுக்கு இவர் நல்லவராக தெரிந்தாரா?

செவ்வாய், 23 நவம்பர், 2010

பறி சுத்தம் -பார்த்ததில் பிடித்தது

 நன்றி தினமணி

http://www.dinamani.com/edition/photoonStory.aspx?&SectionName=Cartoon&artid=336333&SectionID=221&MainSectionID=221&SEO=&Title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%27%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%27%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D!

திங்கள், 22 நவம்பர், 2010

என் சிண்ட நீ புடி உன் சிண்ட நான் புடிக்கிறேன்

 கடந்த ஒரு வாரமாக இந்தியாவே நாரி கொண்டிருக்கும் இரு விவகாரங்கள்.முதலில் ஊழலில் வெள்ளைகாரனை விட அதிகம் சுரண்டி சாதனை படைத்த அலைகற்றை ஊழல் இரண்டு எடயூரப்பா 6000 கோடி நிலா மோசடி .கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தை முடக்கி வந்த பாஜகவிற்கு செக் வைக்கும் வகையில் எட்யூர்ப்பாவின் ஊழல் தோண்டி எடுக்கப்பட்டிருக்கிறது.இது காங்கிரசின் களவானித்தனத்தில் ஒரு வண்ணம்.அதற்காக எடயூரப்பா அப்பாவி என்று நான் சொல்லவில்லை.எல்லாரும் கேப்மாரிங்கதான்.
ஆனால் தனது அமைச்சரவையில் இருந்த ஊழல் மன்னன் ராசாவை நீக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடித்த  காங்கிரஸ் இப்போது பாஜக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கூறுவது கேலிக்கூத்து  .


இப்போது  நடக்கபோவது என்ன?அதான் எல்லாருக்கும் தெரியுமே..இப்படியே கொஞ்ச நாள் ஆர்பாட்டம் செய்துவிட்டு சிறிது காலம் ஆனவுடன் இரண்டு கேபமாரிதனங்களும் மூடி மறைக்கப்படும்.
ஊழல் பணத்தை மீட்கவோ அல்லது அலைகற்றை பெற்ற நிறுவங்களை தடை செய்வதோ இந்தியா சனநாயகத்தில் நடக்கும் என எதிர்பார்ப்பவன் அடிமுட்டாள்.
ஏற்கெனவே இந்த ஊழல் பணத்தை கொண்டு சிலர் அமேசான் காட்டில் ஆயிரம் ஏக்கர் நிலம் வாங்கி போட்டுள்ளதாக "இந்தியன் எக்ஸ்பிரஸ்" செய்தி வெளியிட்டுள்ளது.இது வெறும் சாம்பிள்தான்.நிலம் வாங்குவது தீவு வாங்குவது சொத்து வாங்குவது என ஊழல் பணம் அனைத்தும் கரைக்கப்படும்.மீதம் இருக்கும் பணம் ஸ்விஸ் பாங்கில் பத்திரமாக போடப்படும்.அதை இங்க கொண்டுவர நாதியற்ற ஒரு அரசுதான் இங்கு நடந்து வருகிறது என அனைவருக்கும் தெரியும்.
அப்புறம் வழக்கம் போல் அம்பானி போன்ற இந்த ஊழலால் லாபமடைந்தவர்களின் துணையுடன் மீண்டும் இவர்களே ஆட்சி பிடிப்பார்கள்..the cycle goes on....வாழ்க சன நாயகம்

திங்கள், 15 நவம்பர், 2010

டாட்டா என்கிற சாத்தான் ஓதிய வேதம்!

இப்போது எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என பத்திரிகை மற்றும் பிற ஊடகங்களில் இதே தினசரி பேச்சாகிப்போன நிலையில் ரத்தன் டாட்டா நேற்று திருவாய் மலர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில்  தான் விமான சேவை தொடங்க தொன்னூறுகளில் விரும்பியதாகவும் அதற்கு அனுமதி பெற மூன்று பிரதம மந்திரிகளை சந்தித்ததாகவும்  கூறினார்.மேலும் அவர் கூறுகையில் இந்த பிரதம மந்திரிகள் போடாத முட்டுக்கட்டையை ஒரு விமான போக்குவரத்து அமைச்சரால் (யார் என இவர் பெயர் சொல்லவில்லை) தடைபட்டது என்றார்.
அந்த பெயரிடப்படாத விமான போக்குவரத்து அமைச்சர் இதன் டாடாவிடம் 15 கோடி லஞ்சம் கேட்டதாகவும் அதற்கு இவர் இசைந்து கொடுக்காததால் விமான சேவை தொடங்கும் தனது கனவு தரைமட்டமாகிவிட்டதாம்!
இவர் இத்தனை வருடங்களாக இதுபற்றி வாயை திறக்காமல் இப்போது திறந்தது ஏன் என பல கேள்விகள் எழுந்தாலும் இவர் அந்த மந்திரி லஞ்சம் கேட்டவுடன் அப்போதே ஊழல் ஒழிப்பு துறைக்கோ அல்லது பிரதமருக்கோ(இவர் பிரதமரை சந்திப்பது சாமான்ய மக்களை போல் அவ்வளவு கடினம் இல்லை) புகார் தெரிவித்திருக்கலாம்.அல்லது ஊடகங்களுக்கு சொல்லியிருக்கலாம்.
அப்போதெல்லாம் வாய் மூடி மௌனியாக இருந்துவிட்டு இப்போது "ஹோ!  அவர் லஞ்சம் கேட்டார் நான் கொடுக்கவில்லை!" என்பதுபோல் கூறி தன்னை ஒழுக்க சீலர்  போல் காட்டிகொள்வது வெறும் விளம்பரத்துக்காக அன்றி வேறெதற்கு?
அப்போது இவர் கூற வருவது இத்தனை வருட வியாபார வாழ்க்கையில் ஒருமுறை கூட கம்பெனி தொடங்குவதற்கோ அல்லது விரிவாக்கதிற்கோ  இவர் லஞ்சம் கொடுக்கவில்லை என கூற தயாரா?
 மேற்கு வாங்க மாநில சிங்கூரில் தனது நானோ சார் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவுவதற்கு இவர் செய்த தகிடுதத்தங்கள் யாருக்கும் தெரியாது அல்லது மறந்திருப்பார் என நினைத்தாரா?
சிங்கூரில் விவசாய விளைநிலங்களை விவசாயகளிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கிவிட்டு "நிலத்தை கொடுக்க முடியாது" என போராடியவர்களை அங்கிருந்த டாடாவின் ஏவல் அரசாய் மாறிப்போன இடதுசாரி அரசின் காவல் துறையை விட்டு தடியடி ,கைது போன்ற அராஜகங்களை அரங்கேற்றியத்தை யாரும் மறந்திருக்க முடியாது.இந்த சிங்கூர் சம்பவம்  வெறும் ஒரே ஒரு உதாரணம் மட்டுமே.
இவர் நிலம் பறித்து அதில் கட்டிய தொழிற்சாலைகள் பலப்பல.
இப்போது அவர்கள் லஞ்சம் கேட்டார்கள் .நான் கொடுக்கவில்லை என கூறுவது சாத்தான் வேதம் ஒதுவதுபோல் உள்ளது.அடங்கப்பா இது அந்தர்பல்டிடா சாமி!

ஞாயிறு, 14 நவம்பர், 2010

எடையில ஒரு சின்ன தமாசு

அரசியல் பற்றியே எழுதி வரும் நேரத்தில் தமாசுக்கு இடையில் சரத்குமாரின் பேட்டி.கொஞ்சம் பழசுதான்!பாருங்கள் மனுஷனின் தன்னம்பிக்கையை!!!!
***************


விடியல் படத்தின் பிரஸ் மீட்டில்  சரத் பேசியவயே    பின்வருவன! 
விடியல் படத்தைவிட வேறு விவகாரங்கள் பற்றியே அவர் பேச்சு அதிகமாக இருந்தது.

ஒரு கட்டத்தில் ஆஸ்கர் விருது பற்றி அவர் பேச்சு திரும்பியது. அப்போது அவர் இப்படிச் சொன்னார்:
நான் சினிமாவில் 27 வருஷமா இருக்கேன். சொல்லிக் கொள்ளும் அளவு பெரிய வெற்றிப் படங்களில் நடித்தவன் நான்.

நடிக்க வந்ததிலிருந்தே ஆஸ்கர் விருது மீது எனக்கு பெரிய கனவு இருந்தது.
எப்படியாவது ஆஸ்கர் விருதினை வெல்ல வேண்டும். அதற்கான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று.

நம்ம ஊர் ரஹ்மானும் ரசூல் பூக்குட்டியும் அந்த விருதினை வென்றதும் எனது நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. ரசூல் பூக்குட்டிகூட என்னிடம், 'உங்க ஸ்கிரீன் பிரசன்ஸ் சூப்பரா இருக்கு. நீங்க பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் நடிக்கலாம்' என்றார்.

இப்போது நான் நிறைய மலையாளப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். ஒரு கன்னடப் படம் பண்ணுகிறேன். பாலிவுட் படமும் பண்ணுகிறேன். ஹாலிவுட்டிலும் வாய்ப்புகள் வந்தால் பண்ணுவேன். நிச்சயம் ஆஸ்கர் வெல்வேன்.

ஏன்... நமது ரஜினி, கமல் போன்றவர்களும் ஆஸ்கர் வெல்லலாம். {விட்டு கொடுக்கும் மனப்பான்மை? }

எப்படியும் 90 வயது வரை நான் இருப்பேன். அதற்கான உடல் மன பலம் எனக்கு இருக்கிறது. 85 வயதில் கூட டூயட் பாட முடியும். டூயட் பாட கால்கள் நன்றாக இருந்தால் போதும். மற்றபடி வயது ஒரு தடையில்லை.

**************************************************************************
.

                                                       (ஒரு சின்ன கற்பனை..ஹீ ஹீ மட்டமான Graphics-க்கு மன்னிக்கவும்! ;))


அடங்கப்பா!தன்னம்பிக்கையின் அளவுகோல் உடைந்தது!
மனுஷன் இன்னா  மாதிரி கனவு காணுறார்!முதல்ல இவுரு கட்சியே பூட்ட கேசு.முதல்ல திமுகவுல இருந்து விலகி அப்புறம் அதிமுகவுல ஒரு வாரம் அடுத்த வாரம் சொந்த கட்சி.....அப்புறம் மறுபடியும் கலிஞ்சருக்கு ஜால்ரா!!!!
இப்போ ஆஸ்கார் விருது வாங்க போறாராம்!
ரசூல் பூக்குட்டி மற்றும் ரெஹ்மான் வாங்கும்போது நான் வாங்க கூடாதா என கேட்கிறார்.
அது சரி அந்த இருவருக்கும் அவார்டு கொடுத்ததின் காரணமே டன்னி பாயில் என்ற வெள்ளைகார இயக்குனர் ச்லம்டாக் படத்த எடுத்ததால்தான்(அதே 2008 வருடத்தில் வெளியான ரீடர் படத்த விட இது சிறந்த படமாம் ..தமாசு!)
இது பற்றி ஷாஜி ஏற்கெனவே எழுதியிருக்கிறார்.(Curious case of Benjamin button படத்தின் பின்னணி இசை பற்றி அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.)
சரி இப்போ சரத்துக்கு இன்னா ஆச்சி ஒன்னியும் வெளங்கல!ஓவரா வெயில்ல சூட்டிங் போனதால ஏற்பட்ட பக்கவிளைவா இருக்கலாம்! ராதிகா சித்தி எதுக்கும் ஒருதபா சரத்த  டாக்டராண்ட கூட்டிகினு போறது நல்லது.
இப்படிதான் கடந்த இருபது ஆண்டா ஒரு ஒலக நாயகன் சொல்லிகினு இருந்தார்.அப்பால "சீ! இந்த பழம் புளிக்கும்!" கதையா "நான் அவர்களுக்கு கமல்ஹாசன் விருது கொடுக்கத்தான் ஆசை" என்று அந்தர் பல்டி அடித்தார்.
நீங்களும் "நான் அவர்களுக்கு சரத் விருது கொடுக்கத்தான் ஆசை" என பல்டி அடிக்கலாம்!
அப்புறம் நீங்க "நான் நூறு வயசு வாழ்வேன் தொண்ணூறு வயசு வரை டூயட் பாடுவேன்" என்பதெல்லாம் என் கவலை  இல்லை நீங்கள் SN.லக்ஷ்மி கூட வேணும்னா டூயட் பாடுங்கள்.நான் உங்கள் படம் பார்ப்பதில்லை(ரிஸ்க் எடுக்க முடியல சார்!!.அதான்!) 
எடையில அந்த ரஜினிய ஏன் இழுத்தார்னு பிரியல..அவுரே "நான் நேத்து வருவேன்! நாளைக்கு வருவேன் அவன் சொன்னா வருவேன் இவன் சொன்னா வருவேன்" என அரசியில்ல கொரலி வித்த காட்டிகினு இருந்தார்.இப்போதான் கொஞ்சம் தெளிஞ்சிருக்கார் .இமயமலை அதிகமா போறதுக்கெல்லாம் ஆஸ்கார் குடுப்பாங்களான்னு தெரியலேயே ராசா!

வெள்ளி, 12 நவம்பர், 2010

படித்ததில் பிடித்தது

உணர்ச்சி வேகத்தில் என்கவுண்ட்டருக்கு சபாஷ் போடும் பரிதாப மக்கள்..!


http://truetamilans.blogspot.com/2010/11/blog-post_09.html
*
எல்லாம் காக்க காக்க போன்ற என்கௌன்டருக்கு  ஜால்ரா போடும் படங்கள் மற்றும் ஊடகங்களால் வந்த வினை போல!!!ஹ்ம்ம் என்னத்த சொல்ல!

சந்துல சிந்து பாடும் ஜெ!!!

ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பல திசைகளிலிருந்தும் குரல் எழும்பி வரும் நிலையில்(சட்டசபை பக்கம் தலைவைத்தும் படுக்காத!!!) எதிர்கட்சி தலைவி இது குறித்து குடியரசு தலைவருக்கு தந்தி அனுப்புங்கள் என கூக்குரலிட்டார்  .அவ்வாரே  அம்மாவின் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று Times Now தொலைகாட்சிக்கு ஜெ    அளித்த பெட்டியில் ராசாவை பதவி நீக்கம் செய்ய காங்கிரஸ் தயங்குவது ஏன் என தனது யூகத்தை கூறினார்.அதில் காங்கிரஸ் தனது கட்சியில் ஊழல் குற்றசாட்டில் ஈடுபட்ட கல்மாடி மற்றும் சவானை நீக்கி விட்டதாகவும் ராசாவை நீக்கினால் எங்கே திமுக மத்தியில் ஆதரவை வாபஸ் வாங்கிவிடும் என்ற அச்சத்தினால்தான் என ஜெ கூறினார்.
மேலும் அவர் கூறும்போது ராசா மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் திமுக ஆதரவை விளக்கி கொண்டாலும் தனது கட்சி மற்றும் தனது கூட்டணி கட்சிகள் மத்தியில் காங்கிரசுக்கு ஆதரவளிக்க தயார் எனவும் சந்துல சிந்து பாடினார்.
அதாவது காங்கிரசிற்கு திமுக கூட்டணியை சேர்ந்த  18 எம்.பிக்கள்  தற்போது ஆதரவளிப்பதாகவும் ஒரு வேலை ராசா மீது எடுக்கும் நடவடிக்கையால் அவர்கள் வாபஸ் வாங்கினால் தனது அதிமுக -வை சேர்ந்த ஒன்பது எம்பிக்களும் மேலும் கூட்டணி கட்சி எம்பிக்களும் சேந்து அதே பதினெட்டு எம்பிக்கள் ஆதரவை எந்த முன் நிபந்தனை இன்றியும் ஆதரவளிக்க தயார் என அறிவித்துள்ளார்.
ஆகா! இதுவல்லவோ அரசியலுக்கு அழகு!
கடந்த ஆண்டு இலங்கையில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் தமிழர் கொன்று குவிக்க ராஜபக்சே அரசுக்கு ஆயுதம் கொடுத்து உதவிய தமிழர் விரோத காங்கிரசு அரசுக்கு அம்மையார் ஆதரவளிக்க தயாராம்!
ஏற்கெனவே இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் புதைமணலில் சிக்கி கொண்டிருப்பதாகவும்  தன பக்கம் வருமாறும் தூது விட்டார் அம்மையார்.ஆனால் பலிக்கவில்லை!
அப்போ விடுதலைப்புலி கோஷம் விடாமல் தூக்கத்திலும் எழுப்பும் வைகோவின் கதி?
ஒரு பிரச்னையும் அவருக்கு இல்லை.இப்போ நம்ம திருமா ஒரு பக்கம் காங்கிரசு கூட்டணி அரசில் அங்கம் வகித்து கொண்டே மறு பக்கம் தினமும் தமிழக மீனவர் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தவில்லையா? தமிழன் செத்தால் எவனுக்கென்ன?
அப்போ இந்த அம்மையார் கடந்த ஆண்டு இலகையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்தும் தினமும் தமிழக மீனவர் கொல்லப்படுவதை கண்டித்தும் ராமேஸ்வரத்தில் நடத்திய ஆர்பாட்டங்கள்,மற்றும் பெட்ரோல் விலையேற்றம்,முன்பேர  வணிகம் ..etc..etc.. ஆகியவற்றை கண்டித்தும் நடத்திய ஆர்பாட்டங்கள்   வெறும் வெற்று கூச்சல் என இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது!
 இருக்கவே இருக்கு பன்ச்    டயலாகு :"அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை"   
வாழ்க  சன நாயகம்!

வியாழன், 11 நவம்பர், 2010

சுனாமியான அலைகற்றை விவகாரம்(ஊழல் பாகம் இரண்டு!)

என்னடா இவன் ஊழல் பாகம் ஒன்று, இரண்டு என வரிசைப்படுத்தி  சொல்கிறான் என நினைக்க வேண்டாம்.நம்ம "சனநாயக" இந்தியாவில் முடியாத பாகங்கள் பல உண்டு.
அவற்றை தொகுத்தால் இந்த வலைப்பூவே  இடம் காணாது போல!!!
சரி இப்போ அந்த அலைகற்றை ஊழல் விவகாரத்திற்கு வருவோம்.
எதிர்கட்சிகள் கடந்த சில ஆண்டுகளாக காட்டுக்கத்தல்    நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும்  , மேலும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போதும் இந்த அலைகற்றை ஊழல் பற்றியும் அதில் ராசாவின் பங்கு பற்றியும் பத்தி பதியாக பேசியும் எழுதியும் வந்த போதும் காங்கிரஸ் அரசு அதை கண்டுகொள்ளவில்லை.(மக்களும் தான்!.பின்ன  2009 இல் இவர்கள் மீண்டும் மத்தியில் ஆட்சி பிடித்திருக்க முடியாது)
இப்போ ஊழல் சீசன் போல!!!
ஐ பி எல் ஊழல் காமன்வெல்த்  மற்றும் ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டம் என வரும் செய்திகள் அனைத்தும் ஊழல் மயமான இத்தகைய நேரத்தில் இந்த அலைகற்றை ஊழல் மீண்டும் சுனாமியாகி ஆட்சியாளர்களை தாக்கியிருக்கிறது.
இந்த அலைகற்றை ஊழல் விவகாரத்தை பெரும்பாலான  தமிழ் பத்திரிகைகளும் தொலைகாட்சிகளும் மழுங்கடித்து(பிரபுதேவா நயன்தாராவுடன் ஓடிப்போன விஷயத்தை பெரிதாக போடுவர் .ஆனால் இத்தகைய ஊழல் விஷயங்களை மறைத்து அல்லது ஆட்சியாளர்களால் மறைக்கப்பட வைக்கப்பட்டன) விட்டன.

அலைகற்றை என்பது நாட்டின் சொத்து.அதை ஏல முறையில் நிறுவனங்களுக்கு விற்காமல் முதலில் வந்தோருக்கு முன்னிரிமை என விற்கப்பட்டது.இதனால் அதுவரை செல்பேசி வியாபாரத்திலேயே ஈடுபடாத unitech , swan போன்ற நிறுவனங்கள் இந்த அலைகற்றையை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு வேறு நிறுவனங்களுக்கு விற்று விட்டன.
  இப்படி செய்ததால் அரசுக்கு இழப்பு 1,76,379 கோடியாம்.மத்திய தணிக்கைதுறையின் (Comptroller and Auditor General)அறிக்கையிலேயே இது குறிப்பிடபட்டிருக்கிறது.


எதிர்கட்சி   தலைவி  வெளியிட்ட  ஒரு  அறிக்கையில்  வெள்ளைக்காரன்  நம்மை  ஆண்ட  பொது  கொள்ளையடித்தது  வெறும்  தொள்ளாயிரம்  கோடிதானாம்!  இதை படிக்கும் பொது பெரியார் கூறியது நினைவுக்கு வந்தது "இந்தியா சுதந்திரம் அடைந்த நாளை நாம் துக்க தினமாக கடைபிடிக்க வேண்டும்".

எதிர் கட்சிகள் மற்றும் நடுநிலையாளர்கள்  கூறுவது இந்த அலைகற்றையை குறைந்த நிலைக்கு ஏன் விற்க வேண்டும்?
மேலும் அரசிடம் அலைகற்றை வாங்கிய நிறுவனங்கள் வேறு யாருக்கும் விற்க கூடாது என அரசு தடை போடாதது ஏன்?
ஏன் ஏல முறையை பின்பற்றாமல் முதலில் வந்தோருக்கு  முன்னுரிமை என வழங்க வேண்டும்?
ஏன் செல்பேசி தொழிலில் ஈடுபடாத  நிறுவனங்களுக்கும் அலைகற்றை வழங்கப்பட்டது?
..........

இப்படி பல கேள்விகளுக்கு அரசு தரும் பதில்கள் வெறும் வெற்று மழுப்பல்களே."கூட்டணி தர்மமா?ஆல்லது கூட்டு கொள்ளை தர்மமா?" என தெரியவில்லை.
காங்கிரஸ் கூறுவது எங்கள் கட்சியில் யாராவது ஊழல் செய்தால் நாங்கள் நடவடிக்கை  எடுப்பது(போல் ) எடுப்போம்.ஆனால் ராசா தி மு க என்பதால் நடவடிக்கையை திமுக தலைமைதான் எடுக்க வேண்டுமாம்.(அது சரி நம்ம  "நிதி" அய்யாகிட்ட நீதி எதிர்பார்க்கலாமோ?)
மேலும் உச்ச நீதி மன்றமே(தேதி அக். 29 2010) இந்த ஊழல் விசாரணை எம்புட்டு காலம்தான்  நடக்கும் என கடுப்படித்தது. சிபிஐ தொலை தொடர்பு அலுவலங்களை ரெய்டு செய்தது .ஆனால் அத்தகைய நேரங்களில் நம்ம திமுக மூலம் நெருக்கடி கொடுக்கப்பட்டது  சொல்லி தெரிய வேண்டியதில்லை.

சமீப  செய்தி: கனிமொழி டில்லி சென்று பிரணாப் முகர்ஜியை சந்தித்து ராசா எந்த ஊழலும் செய்யவில்லை என கூறியிருக்கிறார்!அடங்கப்பா உங்களுக்கு பதவி வேனும்னாலோ அல்லது பதவி தக்க வைக்கவோ நீங்க டில்லி உடனே போவீங்க. ஆனால் இலங்கை தமிழர் விவகாரத்திலோ அல்லது தினம் தினம் செத்து கொண்டிருக்கும் தமிழக மீனவர் பற்றியோ வெறும் கடிதம் மட்டுமே எழுதுவீங்க.புல்லரிக்குது உங்க மக்கள் சேவை!
அதாவது நம்ம "உலகம் சுற்றும் முதியவர்", "எப்போவாவது இந்தியாவிற்கு வரும்" மன்மோகன்  சிங்  இன்று இந்தியா திரும்பிய உடன் ராசா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட உடன் மகளை டில்லி அனுப்பிவிட்டார் நம்ம தலிவர்!ஆஹா இதுவல்லவோ தமிழனுக்கு ஆற்றும் தொண்டு!
எவனாவது நூறு ஆயிரம் லஞ்சம் வாங்குவதை மட்டும் பிடிக்கும் நம்ம லஞ்ச  ஒழிப்பு துறை(அட நம்புங்க! அப்படி ஒரு துறை இருக்காமே!!) பெரிய ஊழல்வாதிகளையும் லஞ்சம் பெரும் பெரிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளையும் கைது செய்து நடவடிக்கை எடுத்ததாக சரித்திரம் இல்லை.
இப்போது காட்டு கத்தல் கத்தும் ஊடகங்கள் அடுத்த வாரத்தில் வேறு செய்தியை (உம். நடிகை குலுக்குஸ்ரீ வீட்டு நாய் நான்கு குட்டிகளை ஈன்றது!!!..இது பற்றி எமது அம்பத்தூர் செய்தியாளர் கூறும்போது....Blah blah) பிரதானமாக்கிவிடும் என்பதில் ஐயமில்லை

ஊழல் பாகம் ஒன்று

ஒபாமா இந்தியாவிலிருந்து புறப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் காமன் வெல்த் ஊழல் புகழ் கல்மாடி மற்றும் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் இருவரும் நீக்கப்பட்டனர்.
  

(பின்னர் சிறிது காலத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் காங்கிரசில்  வேறு சில பதவிகள் வழங்கப்படும்.அது வேறு விஷயம்!காங்கிரசின் பல ஆண்டு உக்தி அது .)
இது பிள்ளையாரை பிடிக்க எதுவோ ஆன கதையாய் ஆனது!.காங்கிரஸ் இவ்விருவரையும் நீக்கிய நோக்கம் ஏதோ ஊழலுக்கு எதிரான போர்! ஆஹா! ஓஹோ! என ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயன்றது.
                                                        (நன்றி:தினமணி)

விசாரணை கமிஷன் வைப்பது எதற்கு என சின்ன குழந்தைக்கும் தெரியும்!பல ஆண்டுகள் ஊழல் விசாரணை ஒய்வு பெற்ற நீதியரசர் குழுவால் நடத்தப்படும்.பின்னர் "இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்க படவில்லை" என கூறி அனைவரும் விடுதலை செய்யப்படுவர்.அல்லது ஒரு சில கீழ் மட்ட தொழிலாளர்கள் தண்டிக்கப்படுவர்(அவர்களைத்தானே இவர்களால் தண்டிக்க முடிகிறது!!!).அப்புறம் அந்த கமிஷனின் ஆயுட்காலம் முடிக்கப்படும்.அம்புட்டுதேன்.
காங்கிரஸ் இவ்வுருவரையும் நீக்கிய காரணம் மற்றொன்று இருக்கிறது.அது தலையை காப்பாற்ற வாலை வெட்டிவிடும் தந்திரம்.ஊழலில் "பெரிய தலைகள்" பல ஈடுபட்டதால் அவர்களை காப்பாற்ற இவ்விருவரும் நீக்கப்பட்டனர்(அதற்காக கல்மாடி மற்றும் சவானிர்காக  நான் வக்காலத்து வாங்குவதாக நினைக்க கூடாது).அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.அதே நேரம் இந்த ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள், கார்பரடே நிறுவனங்கள் (இந்த கார்பரடே நிறுவனங்கள் மட்டும் ஒவ்வொரு ஊழல் விவகாரத்திலும் சம்பந்தம் இருந்தாலும் அவர்கள் தப்பிவிடுகின்றனர்!!)
வெறும் ராஜினாமா நாடகங்கள் ஊழலை ஒழித்து விடாது!விரைவு நீதிமன்றங்கள் மூலம் விரைவாக(முக்கியமாக வாய்தா கொடுக்காமல்) விசாரணை  நடத்தி ஊழலில் ஈடுபட்ட அனைவரும் (கார்பரடே நிறுவனங்கள் உட்பட) தண்டிக்கப்பட வேண்டும்.அப்போதுதான் காங்கிரஸ் Clean image மாயை கொஞ்சமாவது நிசமாகும்.இல்லையேல் வழக்கம் போல் மக்கள் மறந்து, பத்திரிகைகள் மறந்து, ஊழல் செய்தவரே அந்த ஊழலை மறக்கும் (வழக்கமான!) நிலைமை மாறும்.

செவ்வாய், 9 நவம்பர், 2010

எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்கத் தயார்: மன்மோகன் சிங்!!!!

அனைத்து பிரச்னைகள் குறித்தும் எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.!!!! -செய்தி
.
செம்பட்ட சேகர்: அது சரி நீங்க எப்பனாசும்தான் இந்தியாவுக்கு வரீங்க. எப்போ இந்தியாவுல இருப்பீங்கன்னு  சொன்னா அவுகளுக்கு(எதிர்கட்சிகளுக்கு)  சுளுவா இருக்குமில்ல!

ஒபாமா வருகை சில காட்சிகள்!!!!










சும்மா தமாசுக்குதான் !!சீரியசா எடுத்துகாதீங்க!!! ;)

வியாழன், 4 நவம்பர், 2010

ஒபாமா விஜயம்!!


ஒபாமா இந்தியாவிற்கு வருகிறாராம்!அதுவும் தீபாவளி நேரத்தில் தனது இந்திய பயணம் அமையுமாறு பார்த்து கொண்டாராம்!
மும்பையில் ஒபாமா உருவம் பதித்த டி ஷர்டுகள் வியாபாரம் .அறிவிலிகள் அதை வாங்கி அணிந்து கொள்வதும் காண சகிக்காததாகிவிட்டது.ஏனென்றால் அமெரிக்காவிலேயே உள்ளாட்சி போன்ற தேர்தலில் ஒபாமாவின் சனநாயக கட்சி படு தோல்வி என தகவல் மேலும் அமெரிக்க மக்கள் மதியில் ஒபாமா மீது வெறுப்பு அதிகரிப்பதாவும் தகவல்.அப்படியிருக்க இங்கிருக்கும் அடிமைகள் சாரி இந்திய இளைஞ்சர்கள் ஒபமாவின் உருவம் படித்த டி ஷர்ட் அணிவது கேலிகூத்து.
அவரின் இந்திய வருகைக்காக தினமும் 900 கோடி பாதுகாப்புக்காக மட்டும் இந்திய அரசு செலவழிப்பதாக செய்தி.அருமை!இதுவல்லவோ சனநாயகத்திற்கு அழகு!எசமானிர்காக அடிமைகள் பல கோடி செலவழிப்பது.
மேலும் அவுட் சோர்சிங்கை தடையை ஞாயபடுத்தி பேசும் ஒபாமா (அதாவது தனது அமெரிக்க மக்களும் வேலை பார்க்க வேண்டுமாம்.ஆதலால் இந்த தடை அவசியமாம்!) அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க இருக்கும் முட்டுகட்டைகளை இந்திய அரசு நீக்க வேண்டுமாம்.
அடங்கப்பா! புல்லரிக்குது.இதையும் இந்திய ஆட்சியிலிருக்கும் அடிமைகள் மண்டையை ஆட்டி "இந்தியாவில் உங்கள் நிறுவனங்கள் எதுவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்" என விரைவ்ல் ஒரு அறிக்கையை எதிர்பார்க்கலாம்.
ஏற்கெனவே போபால் விட வாயு விவகாரத்தில் லட்சகணக்கில் மக்கள் இறந்தும் நோய்வாய்ப்பட்டும் இப்போது பிறக்கும் குழந்தைகளும் ஊனத்தோடு பிறப்பதும் அன்றாடம் நடக்கும் ஒரு வழக்கம் ஆகி விட்ட நிலையில் யூனியன் கார்பைட் தலைவர் வாரன் ஆண்டர்சன்னை கைது செய்து இந்திய அனுப்புமாறு ஒபாமாவிடம் கேட்க துணிவுண்டா?
அல்லது மும்பை தாக்குதல் நடப்பதற்கு பல ஆண்டுகள் முன்பே அது பற்றி தெரிந்தும் இந்திய அரசுக்கு தகவல் தராமலும், மேலும் தாக்குதல் நடந்த பின்பு ஹெட்லியை விசாரிக்க இந்திய அதிகாரிகளுக்கு லேசிலா அனுமதி கிடைத்தது?(ஆனால் அமெரிக்க அதிகாரிகள் ஏதோ திறந்த வீட்டில் ஏதோ நுழைவது போல் இந்திய வந்து அஜ்மல் கசாபை விசாரித்து சென்றனர்.என்ன இருந்தாலும் எசமான் இல்லையா?)
இப்போதும் ஒபாமா இங்கு வருவது அமெரிக்க அணு சக்தி உற்பத்தி நிறுவனகள் அங்கு காயிலாங்கடை போல் போட்டு வைத்திருக்கும் அணுசக்தி உபகரணங்களை இந்தியா தலையில் கட்டுவதற்கும்,விவசாயத்தை முழுமையாக அபகரிப்பதற்கும் மேலும் ஒரிசா,ஜார்கண்ட் போன்ற கனிமவளம் நிறைந்த மலைப்பகுதியை கைப்பற்றவும் ஒப்பந்தம் போடத்தான்.நம் இந்திய ஆட்சியலார்களும் இளித்து கொண்டே அடிமை சாசனத்தில் கையெழுத்து போடத்தான் போகின்றனர்.
வாழ்க சன நாயகம்!!!!!

கடல் அலை ஓயட்டும் மீன் பிடிக்க போகிறேன்!!-காங்கிரஸ் அடிக்கும் கூத்து!!!


கடந்த சில மாதங்களாக பத்திரிகைகளில் நாரிக்கொண்டிருக்கும் ஐ .மு.கு அரசின் ஊழல் விவகாரங்கள்தான்.
முதலில் ராசாவின் அலைக்கற்றை ஓதிக்கீட்டில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி(எத்தனை பூஜ்யம் என நாட்டில் பாதி பேருக்கு தெரியாதென்பது வேறு விடயம்).அது டெல்லி வரை சென்று நாறிய பொது(தமிழனின் பெயர் எங்கெல்லாம் புகழ பெறக்கூடதோ அங்கெல்லாம் பெயர் பெறுகிறது) இங்கிருக்கும் முதல்வர் "ஹா ராசா தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்தான் தாக்குகிறீர்கள் எனவும் ராசாவோ பிரதமரின் அனுமதி பெற்றுதான் அனுமதி(அதான் ஊழல்) வாங்கித்தான் "அனைத்தையும்" செய்ததாகவும் கூறினார்.பின்பு சி பீ ஐ ரெய்டு நடத்திய பொது ஹா..வட நாட்டவரின் கைப்பிடி இறுகுகிறது எனவும் தமிழன் மேல் தொடுக்கப்படும் போர் போலவும் "உண்மை தமிழர்கள்" சிலர் கூப்பாடு போட பின்பு அந்த ஊழல் அலை ஓய்ந்தது.(அதாவது பத்திரிக்கைகள் பொறுத்தவரையில் நயன்தாரா பிரபுதேவாவுடன் ஓடிப்போன விவகாரம் முக்கியமாக்கபட்டது!)
பின்பு லலித் மோடி ஐ பி எல் முறைகேடு மற்றும் சசி தரூர் சுனந்தா புஸ்கருக்கு பங்கு வாங்கி கொடுத்தது என அது ஒரு சீசனில் செய்திகளை வந்தது.இதை புலனாய்வு பத்திரிக்கைகளும் நன்கு பயன் படுத்தி கொண்டு கல்லா கட்டின.(பிரபாகரன் உசுரோட இருப்பதாக கிராபிக்ஸ் படம் வெளியிட்டதை மறக்க முடியுமா?)
அதுவும் மறைந்து அடுத்து காமன் வெல்த் முறைகேடுகள் தினசரி வழக்கமாயின(கக்கூஸ் சரியில்லை தொடங்கி பாலம் இடிந்து விழுந்தது வரை..)
அப்போது காங்கிரஸ் சொன்னது "காமன் வெல்த் முதலில் முடியட்டும்.பின்பு நிச்சயமாக விசாரணை செய்து குற்றவாளிகள் தண்டிக்கபடுவர்" என கூறி அப்போதைக்கு எதிர்கட்சிகள் மட்டும் ஊடகங்களின் வாயை அடைத்தது!
அப்புறம் காமன் வெல்த் முடிந்ததும் ஏதோ விசாரணை செய்வது போல் பாவ்லா காட்டி கொண்டிருந்த பொது (சுரேஷ் களமாடி ஜாலியாக கடலை சப்பிட்டுகொடிருக்க)திடீரென மற்றோர் புகார்.
ஆதர்ஷ் சொசைடி ஊழல்.அதாவது இந்த கார்கில் போரில் உயிர் நீத்த வீர்களின் மனைவி மற்றும் அவர்களின் குடும்பத்தார்க்கு கவுரவிக்கும் வகையில் மும்பையின் மைய பகுதியில் பல மாடி அடுக்கு வீடு(பிளாட்) கட்டியதில் ஊழல் நடந்தது வெளிவந்து மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் ராஜினாமா வரை கொண்டுவிட்டது.மேலும் பெரிய தலைகள் உருளும் போல!இப்போது காங்கிரஸ் சொல்வது "ஒபாமா வந்து சென்றபின் இந்த ஊழலை பற்றி விசாரிப்போம்" யப்பா இவர்கள் சொல்வது எப்படி உள்ளதென்றால் கடலில் அலை ஓயட்டும் பின்பு நான் மீன் பிடித்துவருகிறேன் என்பதுபோல் உள்ளது.என்ன செய்து தொலைக்க!இதற்கு பெயர்தான் சனநாயகமாம்!நம்ப வேண்டுமாம்.எதிர்த்து பேசினால் நக்சல் அல்லது பிரிவினைவாதி முத்திரை இருக்கவே இருக்கிறது!
ஒபாமாவிற்கு இரத்தின கம்பள விரித்து அடிமைகள் வரவேற்க எசமான் ஒபாமாவிற்கு பல் இளித்து புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பர்(மன்மோகன் சிங்க் பற்றி சொல்லவே தேவையில்லை.32 பல்லும் தெரியும் புகைபடத்தில்!!!)

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

ஒபாமாவும் கக்கூசும்!!!





கடந்த சில நாட்களாக இந்தியாவை பார்த்து கைகொட்டி சிரிக்காத நாடில்லை என கூறலாம்(உகாண்டா உட்பட.நான் அந்த நாட்டை இழிவாக கூறவில்லை!மற்றவர்களின் மாய பிம்பத்தை உடைக்க எத்தனம்!) எல்லாம் இந்த Congress Wealth சாரி Corrupted Wealth அட மன்னிச்சிருங்க அது சரியாகவே எழுத வரமாட்டேங்கிறது!Common wealth games யப்பா கடைசியாக சரியாக!இந்த காமன் வெல்த் போட்டிக்கு பங்கேற்க வரும் வீரர்களுக்கு தங்குமிடமாக காமன் வெல்த் கிராமம் என்ற பெயரில் தங்கும் விடுதி (ஏதோ அவசர "இந்திய" கதியில்!!!) தயார் என "நினைத்து" பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் வீரர்கள் பத்திரிகையாளர்கள் இன்ன பிறர் பார்த்து அட!?! என்ன சொல்ல அதிர்ச்சி அடைந்தனர் என்பதை தவிர வேறென்ன வார்த்தை சொல்ல?!
அந்த கிராமத்தில் இருந்த கழிப்பறையின் நிலைமையை BBC தொலைக்காட்சி விவரித்து படங்களுடன் காட்டியது!


இன்ன பிற நாடுகளும்(எதிரி என கூறப்படும் பாக் உட்பட) இந்தியாவின் டங்குவாரை அத்துபுட்டன (மெட்ராஸ் பாஷைக்கு மன்னிக்கவும்)
சுரேஷ் கலைவாணி சாரி சுரேஷ் கல்மாடி அனைத்து கலவாணிதனதிற்கும் தானே பொருபேற்பதாக இப்போது ஒப்புகொண்டிருப்பது பல தலைகளை காப்பாற்ற ஒரு தலையை பலி கொடுக்கும் இந்தியாவின் பாரம்பர்யம் (போபால் வழக்கில் அன்றேசனை யார் தப்ப விட்டதென்ற பழிக்கு ராஜிவை காப்பாற்ற சமாதியிலிருக்கும் நரசிம்ம ராவ் பலி கொடுக்கப்பட்டார் என்பது நாடறிந்தது) இப்போதும் பின்பற்றபட்டிருக்கிறது என்பதை சொல்லவும் வேண்டியதில்லை.
மேலும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பூசல்(வழக்கம் போல்)வெடித்து பூதாகரமாகிவிட்டது.முதலில் இந்த பிரச்னையை கிளப்பிய மணிசங்கருக்கு பாராட்டு போய்கொண்டிருக்கிறது என்பதும் சரத் பவர் சுரேஷ் கல்மாடியை பகடி செய்திருப்பதும்(அதாவது சுரேஷ் அவமானம் தாங்காமல் தூக்கு போட்டுக்கொள்ள முயன்றதாகவும் தூக்குமேடையும் ஊழலால் செய்ததால் உடைந்து இவர் உயிர் பிழைததாகவும் கிண்டலடித்தார்),.
இப்போ அரசு என்ன செய்யும்?எப்படியோ கெஞ்சி கூத்தாடி பங்கேற்கமாட்டோம் என அறிவித்த நாடுகள் பலவும் சரி வந்து தொலைக்கிறோம் என்ற நிலைக்கு கொண்டு வந்துவிட்டது.இப்போது என்ன?போட்டிகள் நடக்கும்..முடியும்..வழக்கு கல்மாடி மேல்..பதவி விலக வற்புறுத்தல்(ராசா விவகாரம் போல்)..கூச்சல் ..தர்ணா..பின் என்ன?வழக்கம் போல் இந்தியாவும் தேசிய குணமான மறதி முன்னுக்கு வர மற்ற அனைத்தும் பின்னுக்கு தள்ளப்படும்.
அப்புறம் என்ன?
நம்ம வெளி நாட்டில் வசிக்கும் எப்போதாவது இந்தியா வருகை தரும் மன்மோகனின் எசமான் ஒபாமா நவம்பரில் இந்திய விசயமாம்.அதற்குள் கக்கூசெல்லாம் அமெரிக்க பெனாயில் போட்டு கழுவப்பட்டு பளீச்சென்று ஆகிவிடும் .பின்னே?சிறந்த பிரதமர் விருதை தனது அடிமையான மன்மோகனுக்கு சமீபத்தில்தான் வழங்கியது எசமான் அமெரிக்கா.அதற்கு விசுவாசமாக ஏற்கெனவே அணுசக்தி ஒப்பந்தம் ,போபால் விவகார மூடி மறைப்பு என பல வகையில் "நன்றி கடனை" அடிமை செய்துவிட்டாலும் இப்போது மேலும் ஒரு கைமாறாக ஒபாமா தங்கவிருக்கும் அறையிலாவது தெருநாய் தூங்குவதோ(காமன் வெல்த் கிராமம் போல்) அல்லது கக்கூஸ் மகாகேவலமாக இல்லாமலோ பார்த்து கொள்ளப்படும்.ஏனென்றால் எசமானருக்கு அடிமை சேவை செய்ய அல்லவே பிறந்திருக்கிறோம்!!!

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

ஐயோ வட போச்சே!!!


கடந்த சில வாரங்களாக இது பற்றியே பேச்சு.,..இல்லை நான் சொல்வது எந்திரன் படத்தை பற்றியோ அல்லது வேறேதோ அல்ல..இது NDM-1 என்று சுருக்கமாக அழைக்கப்படும் New Delhi Metallo-beta-lactamase என்ற கிருமி அழிப்பான் எதிர்ப்பு நொதி (Enzyme) இந்தியாவிலிருந்து உருவானதாகவும் ஆதலால் தங்கள் நாட்டவர் யாரும் இந்தியாவிற்கு செல்ல வேண்டாமெனவும் பல நாடுகளில் எச்சரிக்கப்பட்டனர்.இதை கேள்விப்பட்ட நமது "தேசபக்தர்கள்" குய்யோ முறையோ என கூப்பாடு போட்டனர்.இது இந்தியாவில் வளர்ந்து வரும் மருத்துவ சுற்றுலாவை பாதிக்கும் எனவும் இது தேசத்திற்கு எதிரான ஒரு அறிவிப்பு எனவும் கூறினார்.
அப்படியா?!
முதலில் இந்த மருத்துவ சுற்றுலா பற்றி சிறிது பார்க்கலாம்.பல வெளிநாட்டவர் தங்கள் நாட்டில் ஒரு மருத்துவ சிகிச்சை பெற அல்லது ஒரு அறுவை சிகிச்சை செய்ய செலவு அதிகமாகும் என்பதால் அவர்கள் இந்தியா வந்து சிகிச்சை பெறுகின்றனர்.
இதனால் அரசுக்கு வருமானம் வருவதால் மற்ற நாடுகள் விஷ பிரசாரம் செய்கின்றன என எதிர் கட்சிகளும் ஆளும் கட்சியும் கூறினாலும் முதலில் இந்த மருத்துவ சுற்றுலாவல் யாருக்கு லாபம்?
ஒரு தலைவலி என போனாலும் அந்த ஸ்கேன் எடு இந்த ஸ்கேன் எடு என அது இதுவென்று பல ஆயிரங்களை பிடுங்கி "ஏன்டா இங்க சிகிச்சைக்கு வந்தோம் " என மக்கள் நொந்து போகும் அளவுக்கு அராஜகம் செய்யும் அபோல்லோ போன்ற இந்த தனியார் மருத்துவமனைகள் தான் .
மேலும் ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் "இந்தியா செல்ல வேண்டாம்" என சில நாடுகள் எச்சரித்தபோது பொங்கிஎழுந்தது தேசபக்தியால் அல்ல..இத்தகைய மேற்கூறிய மருத்துவமனைக்கு வருமானம் குறைந்து விடும்.(உள்நாட்டு மக்கள் பெரும்பாலும் இத்தகைய மருத்துவமனைகளின் அட்டூழியத்தை ஏற்கெனவே கேட்டதனாலோ அல்லது அனுபவப்படதனாலோ அங்கே செல்வதை தவிர்த்து விடுவதால் இந்த மருத்துவமனைகள் பெரும்பாலும் ஏதும் அறியாத வெளிநாட்டு நோயாளிகளின் பாக்கெட்டை பதம் பார்கின்றன.இப்போது இத்தைகைய எச்சரிக்கையால் வெளிநாட்டு நோயாளிகளின் வருகை குறைந்து போகுமானால் இவர்கள் தலையில் துண்டை போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.எனவே தான் தாங்கள் அவ்வப்போது ஊழியம் அழும் கட்சிகளை தூண்டிவிட்டு இத்தகைய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன .
இல்லையேல் இந்த கட்சிகள் வாய் மூடி மௌனியாக இருப்பதையே விரும்பும்.
மருத்துவ சுற்றுலா பாதிக்கப்படும் ஆதலால் வெளிநாட்டு நோயாளிகள் பாதிக்கபடுவர் என கவலைப்படும் கூப்பாடு போடும் எந்த கட்சியோ அமைப்போ முதலில் இங்கிருக்கும் சிகிச்சை பெற வசதியில்லாமல் அரசு மருத்துவமனைக்கு சென்றால் அங்கும் பணம் பிடுங்கும் பேய்களை அத்தகைய போக்கை கண்டிக்க துணிவுண்டா?
இல்லை.ஏனெனில் இந்த பாவப்பட்ட சிகிச்சை பெற வசதியில்லாத இந்தியர்களால் தேர்தல் நேரம் தவிர மற்ற நேரங்களில் இவர்களுக்கு எந்த பயனும் இல்லை என்று இவர்கள் நினைக்கின்றனர்.
அதே நேரம் இந்த வெளிநாட்டு நோயாளிகளின் வருகையால் தனியார் மருத்துவமனைகள் பணம் கொழிக்கும்.அதில் இவர்களுக்கு "பங்கு" வெட்டப்படும்.
ஆம் ஞ்யாயம்தான்.பணம்தானே முக்கியம் ஏழை மக்கள் எக்கேடு கெட்டா இவர்களுக்கு என்ன?
வாழ்க சன நாயகம்!!!!


சனி, 29 மே, 2010

"Secular India" a funny mask

India has always been boasting of its so called "Secular" nature stating that all Indians are like brothers and sisters.But this continuous barking sorry boasting has always been during ceremonies like Independence day(i dont know from whom we got independence!!that;s a different topic indeed).This has been done by Ruling parties and rubber stamps (President and Governors) to show off to other nations.That;s all..Nothing has been put to practice in terms of religious or caste tolerance and generosity.
Recent case a couple was hacked to death by stone just because the girl from Reddy caste married a Dalit guy by a six people group just for so called useless & meaningless word "Honour".
That six people group included the brainless barbaric parents of the girl herself who did that for caste or family honour.
Wow..This is the Secular India..always overflowing with hell alot of honour killings like this just for useless caste religion and THE INVISIBLE ABSCONDING GOD.
Already adding feather to the secular cap of India was the murder of Rizwanur Rehman who married a industrialist Ashok Todi's daughter Priyanka Todi.After that the girl was threatened by the hooliganic father to confess falsely that she signed the marriage papers with a "Blank mind" and she didnt know the consequences.
Rizwanur was threatened by the servants of the Elite people called Police force.And later he was found dead in railway tracks and the barbaric Ashok Todi used money to establish it as suicide.
Wow..Secularism is best prevalent in India than in other countries it seems..
Another case was a girl was thrown off the roof of her house by her barbaric father for marrying a guy of another caste.
So let these babaric people better marry caste religion and God.If a father cant offer a life her daughter or son aspires then i dont know what the hell he can offer more than that for his offspring.Just forcing one's daughter or son marry a bride or groom of their caste or religion wont make them happy.
I dont know what these people going to achieve by maintaining the so called useless honour of their caste or religion.Let these people show their own caste or religion in their blood or DNA.
It all happens only because of one reason GOD .I dont know where he is hiding when so called His sons or daughters being harrassed in the name of His.
let the parents allow the life of their son or daughter to decide in their own way afterall its their life..who the hell are these people to interfere in their child's interests?

huh..only Rationalism can save people from these barbaric acts..

புதன், 17 பிப்ரவரி, 2010

Pune blast another wreath in UPA's cap!!!

Just weeks after Chidambaram boasted that after he took charge of the Home Minstry no blast has occured in 18 months another blast occured in Pune in German Bakery.
So it has put a stop to the continuous record of PC's non blast situation.
As usual all UPA's top persons has said their grief to the dead and condemn to the terrorists.As usual PM has said "we will spring back"(Dont know what's the elasticity&resilience limit of that spring!!).So another blast another condemn and obituary report another enquiry comission(as usual) another longgg case in the court and the next one will occur.huh..
what has the Govt done in earlier case blasts in Mumbai Train blast ,Jaipur,Ahmedabad,Hyderabad and so on...Has atleast in one blast case anyone got punished?Has anyone blast case been solved?Has in any one case the main root cause was found?
A big NO is the answer.So they'll be investigating and filing a case "As usual" it'll take place for monthsss and yearsss..and another balst will erase this bloody stain..huh..long live democracy

புதன், 10 பிப்ரவரி, 2010

Ban Bt brinjal "Forever" not "For now"

The recent announcement by Minister of Environment and Forests Jairam Ramesh was that the Govt has taken a decision to ban Bt brinjal "For now" and more research will be made before bringing it back.So the Monsanto's (the American Bio-Tech company which was behind this Bt brinjal) "Funds" hasnt worked out for time being but they will "Try" to bring GM(Genetically Modified) crops to India.
Why they are so desperate?the main reason is the price of the seeds.
For ex. While 15 Grams of normal seeds cost say Rs.50 The price of 15gm of GM seeds will be Rs.5000.
Also unlike normal crops which yield seeds when they ripen these GM crops will never produce any seeds.This is to make sure that the farmers should keep begging these money fattened companies like Monsanto.Also when Bt cotton was introduced in Vidharba the land became sterile after harvesting the cotton and lead to around 1 lakh farmer suicides.So why the Govt is so desperate to bring in GM crops?who knows?
Also its said that GM crops when taken in can cause severe side effects ranging from loss of fertility to cancer in extreme cases.
Does the Govt had the guts to ban such a dangerous thing?no.Dont they know the ill-effects of these GM crops even before trying to introduce them?
Americans have a strange habit.They'll use the best for their own use and when it comes to others they'll focus only on money no matter the people using its product.
When the Americans have slowly shifted to Organic farming which is free of pesticides and insecticides they have also banned GM crops for their use.But they dont care about other countries because money is the most important thing for them.
Already in the name of Green Revolution all lands have been spoilt by insecticides and pesticides(GReen Revolution was mainly to promote these insecticide & pesticide companies) the lands have been damaged to the most possible extent and a weaker present generation is the most visible result of it.Hail MS .Swaminathan for more Doctors to groom and earn due to a poor immune generation.
So introduce GM crops and make the next generation worst than the previous one.huh..

வியாழன், 28 ஜனவரி, 2010

Goa:A shameful blot on India's fake democracy

Goa in the past was the paradise of a tourist spot for the foreigners(particularly Russians) not after Scarlet Keeling a 15 years old child's rape and Murder Samson D'Souza was charged with rape and murder while Placido Carvalho was charged with the intoxicating her.But till now no action has been taken against them owing to some invisible "support".
So the media as usual digested the news and people and activists as usual forgot the Scarlet's case and jumped to Ruchika case(they'll switch to other case soon!!long live media!!)

The latest incident comes after last month's rape of a 25-year-old Russian girl allegedly by local politician, John Fernandes.

In another incident, on December 26, two Russian girls had to hide in forest for almost four hours after a taxi driver chased them.
The recent one being a nine-year-old Russian girl was raped by an unidentified man at Arambol beach in North Goa.So what's the action the Govt has taken i the past and what its going to do to safeguard the tourists that too particularly teen childs getting raped often this is not a matter to be left off like Sikh riot case or the Q case which the Congress safeguarded all the useless stinking fellows known to its rotten party.
Its easy for them to hide these kind of rapes and murders because everyday new problems keep arising which the media constantly shifts itself to sell its useless matters.But they never showed any public interest in the left off cases..
While India celebrated its 61th Republic another rape has occured..huh...hail India for providing such "Quick" justices...