வியாழன், 4 நவம்பர், 2010

கடல் அலை ஓயட்டும் மீன் பிடிக்க போகிறேன்!!-காங்கிரஸ் அடிக்கும் கூத்து!!!


கடந்த சில மாதங்களாக பத்திரிகைகளில் நாரிக்கொண்டிருக்கும் ஐ .மு.கு அரசின் ஊழல் விவகாரங்கள்தான்.
முதலில் ராசாவின் அலைக்கற்றை ஓதிக்கீட்டில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி(எத்தனை பூஜ்யம் என நாட்டில் பாதி பேருக்கு தெரியாதென்பது வேறு விடயம்).அது டெல்லி வரை சென்று நாறிய பொது(தமிழனின் பெயர் எங்கெல்லாம் புகழ பெறக்கூடதோ அங்கெல்லாம் பெயர் பெறுகிறது) இங்கிருக்கும் முதல்வர் "ஹா ராசா தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்தான் தாக்குகிறீர்கள் எனவும் ராசாவோ பிரதமரின் அனுமதி பெற்றுதான் அனுமதி(அதான் ஊழல்) வாங்கித்தான் "அனைத்தையும்" செய்ததாகவும் கூறினார்.பின்பு சி பீ ஐ ரெய்டு நடத்திய பொது ஹா..வட நாட்டவரின் கைப்பிடி இறுகுகிறது எனவும் தமிழன் மேல் தொடுக்கப்படும் போர் போலவும் "உண்மை தமிழர்கள்" சிலர் கூப்பாடு போட பின்பு அந்த ஊழல் அலை ஓய்ந்தது.(அதாவது பத்திரிக்கைகள் பொறுத்தவரையில் நயன்தாரா பிரபுதேவாவுடன் ஓடிப்போன விவகாரம் முக்கியமாக்கபட்டது!)
பின்பு லலித் மோடி ஐ பி எல் முறைகேடு மற்றும் சசி தரூர் சுனந்தா புஸ்கருக்கு பங்கு வாங்கி கொடுத்தது என அது ஒரு சீசனில் செய்திகளை வந்தது.இதை புலனாய்வு பத்திரிக்கைகளும் நன்கு பயன் படுத்தி கொண்டு கல்லா கட்டின.(பிரபாகரன் உசுரோட இருப்பதாக கிராபிக்ஸ் படம் வெளியிட்டதை மறக்க முடியுமா?)
அதுவும் மறைந்து அடுத்து காமன் வெல்த் முறைகேடுகள் தினசரி வழக்கமாயின(கக்கூஸ் சரியில்லை தொடங்கி பாலம் இடிந்து விழுந்தது வரை..)
அப்போது காங்கிரஸ் சொன்னது "காமன் வெல்த் முதலில் முடியட்டும்.பின்பு நிச்சயமாக விசாரணை செய்து குற்றவாளிகள் தண்டிக்கபடுவர்" என கூறி அப்போதைக்கு எதிர்கட்சிகள் மட்டும் ஊடகங்களின் வாயை அடைத்தது!
அப்புறம் காமன் வெல்த் முடிந்ததும் ஏதோ விசாரணை செய்வது போல் பாவ்லா காட்டி கொண்டிருந்த பொது (சுரேஷ் களமாடி ஜாலியாக கடலை சப்பிட்டுகொடிருக்க)திடீரென மற்றோர் புகார்.
ஆதர்ஷ் சொசைடி ஊழல்.அதாவது இந்த கார்கில் போரில் உயிர் நீத்த வீர்களின் மனைவி மற்றும் அவர்களின் குடும்பத்தார்க்கு கவுரவிக்கும் வகையில் மும்பையின் மைய பகுதியில் பல மாடி அடுக்கு வீடு(பிளாட்) கட்டியதில் ஊழல் நடந்தது வெளிவந்து மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் ராஜினாமா வரை கொண்டுவிட்டது.மேலும் பெரிய தலைகள் உருளும் போல!இப்போது காங்கிரஸ் சொல்வது "ஒபாமா வந்து சென்றபின் இந்த ஊழலை பற்றி விசாரிப்போம்" யப்பா இவர்கள் சொல்வது எப்படி உள்ளதென்றால் கடலில் அலை ஓயட்டும் பின்பு நான் மீன் பிடித்துவருகிறேன் என்பதுபோல் உள்ளது.என்ன செய்து தொலைக்க!இதற்கு பெயர்தான் சனநாயகமாம்!நம்ப வேண்டுமாம்.எதிர்த்து பேசினால் நக்சல் அல்லது பிரிவினைவாதி முத்திரை இருக்கவே இருக்கிறது!
ஒபாமாவிற்கு இரத்தின கம்பள விரித்து அடிமைகள் வரவேற்க எசமான் ஒபாமாவிற்கு பல் இளித்து புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பர்(மன்மோகன் சிங்க் பற்றி சொல்லவே தேவையில்லை.32 பல்லும் தெரியும் புகைபடத்தில்!!!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக