சனி, 27 நவம்பர், 2010

வெளுத்து போன சாத்தான் டாடாவின் சாயம்

 இந்தியாவே மாமனிதன் இந்தியாவின் புகழை உயர்த்தியவர் அது இது என மக்கள் ரத்தன் டாடாவின் போலி  மாயையில் சிக்கவைக்கப்பட்டிருன்தனர்(பல வருடங்களாக..கிட்டத்தட்ட நூறு வருடங்களாக நம்ப வைக்கபட்டிருன்தனர்).சென்ற வாரம் கூட சத்தீஸ்கர்  மாநிலம் துவக்கப்பட்ட ஏழாவது ஆண்டு விழாவில் பேசிய(அதற்கு இவரை எதற்கு அழைத்தனர்?ஒன்னும் வெலங்கள்) டாடா தொன்னூறுகளில் தான் விமான சேவை துவங்க விரும்பயதாகவும் ஆனால் அப்போது விமான போக்குவரத்து அமைச்சராக இருந்த ஒருவர்(பெயரை டாடா சொல்லவில்லை) 15 கோடி லஞ்சம் கேட்டதாகவும் இவர் ஏதோ இந்தியன் பட தாத்தா போல் "லஞ்சம் கொடுக்க மாட்டேன்" என கூறியதால் விமான சேவை துவங்கும் தந்து கனவு தவிடு போடியானதாகவும் கூறினார்.இது பற்றி சென்ற வாரமே எழுதிய நான்(டாடா என்னும் சாத்தான் ஓதிய வேதம்) இவர் பெரிய ஒழுங்கா?தனது இத்தனை வருட வியாபார வாழ்கையில் இவர் யாருக்கும் லஞ்சம் கொடுக்கவில்லையா?என வினா எழுப்பியிருந்தேன்.


அதற்கு சிகரம் வைத்தாற்போல் சென்ற வாரம் ஊரே நாறிய நீரா ராடியா  என்ற பெண்மணி விவகாரமும் அதில் டாடாவின் "நேர்மையும்" விளங்கியது.
அதில் நீரா ராடியா  என்கிற அரசியல் மா..(சீ கொஞ்சம் நாகரீகமாக தரகர் என கூறுகிறேன்)வேலை பார்க்கும் பெண்ணிடம் கனிமொழி ராசா  உட்பட "கழக கண்மணிகள் " ஆற்றிய தமிழர் சேவை கண்டு அனைவருக்கும் புல்லரித்திருக்கும்  .
        அந்த கருமாந்திர உரையாடலை கேட்க கீழே உள்ள இணைப்பில் சொடுக்கவும்
.
http://www.filefactory.com/file/b473bd9/n/IMP-Ratan-Spectrumissue-20090611-155759.mp3


அந்த உரையாடல்களில் வந்த ஒன்றுதான் டாடா-நீரா ராடியா  உரையாடல்.
அதில் இந்த "உத்தமன்" "வெள்ளை மனசுக்காரன்" டாடா நீரா ராடியாவிடம்  பேசுகையில் தயாநிதி மாறன் தொலை தொடர்பு மந்திரியாக வந்துவிடக்கூடாது என்பதிலும் யார் வர வேண்டும்(அவர் பெயரை சொல்லவும் வேண்டுமா?) என்பதிலும் டாடா காட்டிய அக்கறை புல்லரித்தது.அப்படி இவர் நினைத்த ஆள் மந்திரியாகவில்லைஎனில் எப்படி ஜப்பான் கம்பெனியான NTT Docomo என்ற நிறுவனத்துடன் இணைந்து GSM சேவையான (ஏற்கெனவே  டாடா  CDMA சேவை பல ஆண்டுகளாக வைத்திருப்பது அனைவருக்கும் தெரியும்)Tata-Docomo என்ற சேவையை இவரால் தொடங்கி கொள்ளை.. சாரி சம்பாதித்திருக்க முடியும்?
இவரின் சாயம் வெளுத்த நிலையில் இதே போல்தான் அம்பானி உள்ளிட்ட "மக்கள் சேவகர்களின்" உண்மை முகம் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
அப்புறம் இந்த டாடாவின் நானோ தொழிற்சாலையை  மேற்குவங்க மாநில சிங்கூரில் அமைக்க டாடாவிற்கு  கைக்கூலியாக செயல்பட்ட(மேலும் அங்கிருந்த விவசாயிகளிடம் இருந்து காவல் துறை மூலம் விளை நிலங்களை பிடுங்கிய) இடதுசாரி அரசாங்கம் இப்போது இந்த டாடாவை கண்டித்து தனது கட்சி பத்திரிகையில் எழுதுவது கேலிக்கூத்து.இப்போது டாடா கெட்டவர் என்றால் அப்போது  இடதுசாரி அரசுக்கு இவர் நல்லவராக தெரிந்தாரா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக