ஞாயிறு, 31 ஜூலை, 2011

திமுக அல்லக்கையான கவிஞர்


கனிமொழி புத்திரன் சாரி மனுஷ்ய புத்திரன்(அப்போ நாம எல்லாம் மிருக புத்திரன்களா?) டுபுக்குமை சஞ்சிகையில் கனிமொழிக்கு ஜால்ராவோ ஜால்ரா அடித்திருக்கிறார்.அது மட்டுமன்றி அவரை பற்றி எழுதிய மற்ற சஞ்சிகைகள் பத்திரிகைகள் எல்லாவற்றையும் இடித்திருக்கிறார்!!திமுக தலைமை இவுரு ஜால்ரா பாட்டு(அதுவும் இவுரு முகநூலில் அதான் Facebook இல முரசொலி ரேஞ்சுக்கு திமுக பல்லவி தினம் பாடி மொக்க பிளேடால ஆட்டை அறுக்கும் வேலை செய்து வருகிறார்) சகிக்கல தயவு செஞ்சி இவருக்கு ஒரு கவுன்சிலர் போஸ்டாவது கொடுத்துடுங்க!!நாங்களும் நிம்மதியா இருப்போம்!!

புதன், 27 ஜூலை, 2011

ஆட்சியாளர்களுக்கு வியாதியோ வியாதி!!

(நன்றி தினமணி )

 (இது gif file அதனால் மேலே உள்ள படத்தை சொடுக்கி பார்க்கவும்.அப்போதுதான் animation தெரியும்!!)

செவ்வாய், 26 ஜூலை, 2011

கேஸ்ட்ரோவும், ஊழல பெருச்சாளியும்!!

"History will absolve me,former minister quotes Castro"-ஆ ராசா நீதிமன்றத்தில் சொன்னது.நீயும் Castro வும் ஒண்ணா?அவுரு பல வருஷம் காட்டிலேயே அடிப்படை வசதி இல்லாமல் போராடியவர் நாட்டுக்காக!!நீ?ஊழல பண்ணி நாட்ட சொரண்டிபுட்டு பேச்ச பாரு!!அவுரு ஜெயில்ல எத்தனை சித்ரவதைகளை அனுபவித்தார் தெரியுமா?ஒனக்கு கொசு கடியே பெரிய சித்ரவதைதான்!!நாராயணா இந்த கொசு தொல்ல தாங்களா!!தெனம் ஒரு கத அளக்குறான்!!எங்க போய் முடிய போகுதோ!!

ஞாயிறு, 24 ஜூலை, 2011

மாமா என்ன தெரியலை?

கல்மாடிக்கு ஞாபக மறதி நோயாம்!!அது சரி அவரிடம் போய்  "மாமா என்ன தெரியலை?நான்தான் கீழ்மாடி ஓங்களோட  பத்து பங்களாவ எனக்கு எழுதி தரதா சொன்னீங்க.எப்போ எழுதி குடுக்க போறீங்க?

வியாழன், 21 ஜூலை, 2011

இந்தியாவை சுற்றும் வல்லூறு!!

ஹிலாரி கிளிண்டன் இங்கு வந்து என்னத்த கிழித்தார் என சிலர் கேட்கலாம்.ஆந்திர மாநிலத்தில் 1200   ஏக்கர் பரப்பளவில்ஒரு "முக்கிய புள்ளி" க்கு சொந்த மான இடத்தில் யுரேனியம் இருப்பதை கண்டுபிடித்தார்.ஆனால் நைசா அதை மறைத்துவிட்டார்!!அப்புறம் அது அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டது.ஆக இப்போது யுரேனியதுக்கு போட்ட அணுசக்தி ஒப்பந்தம் வேஸ்டு!!!இங்கே உள்ள யுரேநியமே போதுமானது.இதை அமெரிக்கா தெரிந்து கொண்டது.சின்ன வல்லூறு ஹிலாரி உடனே இங்க வந்து சீட்டுல துண்டை போடும் விதமாக இங்கு வந்து  போயுள்ளார்.அது தவிர இந்தியா தனது சந்தையை  இன்னும் அமெரிக்காவுக்கு நல்லா தொறந்து உடனுமாம்!!(இதென்னா ஏ படமா?)அப்போதான இன்னும் ஓட்டுக்கா  நாட்டை சுரண்ட  முடியும்!!!

          எல்லாத்துக்கும் மேலே அணு விபத்து இழப்பீடு சட்டத்தை இன்னும் நீர்த்து போக வைக்கனுமாம்.அப்போதான் அமெரிக்க பணம் கொழுத்த பண்ணிகள் நாட்டை சூறையாட முடியும்!!அமெரிக்க நிறுவனங்கள் அணு உலைகளுக்கான உபகரணங்களை வழங்கும்.அதன்மூலம் எதாவது அணு உலைகளில் விபத்து என்றால் இவர்கள் அதற்கு இந்திய அரசு நிர்ணயித்துள்ள 1000கோடி(முன்பு அது 500 கோடியாக இருந்து பின்னர் கடும் எதிர்ப்பினால் உயர்த்தப்பட்டது).ஆக இங்கு அணு உலை விபத்து ஏற்பட்டு பல லட்சம் மக்கள் இறந்தாலும் அமெரிக்க பண முதலைகள் அதற்கு ஒரு பைசா தரமாட்டார் என்பதையே ஹிலாரி கிளிண்டன் இங்கே சொல்லிவிட்டு போயுள்ளார்.இதை எதிர்க்க வக்கில்லாத அமெரிக்க அடிவருடி மன்மோகன் சிங் அரசு வழக்கம் போல இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு "ஆமாஞ்சாமி" போட்டிருக்கிறது.இதென்ன ஆச்சரியம்?ஏக்கெனவே டவ் கம்பெனி போபால் விஷ வாயு விபதுக்கே இன்னும் சரியான நீதியோ நிதியோ குடுக்கலியே!!மக்கள் அணு விபத்தில் செத்தால் அமெரிக்காவிலிருக்கும் ஒபாமா மற்றும் ஹிலாரி கூட்டத்துக்கு என்ன கவலை?தங்கள் பிள்ளைகளின் படத்தை காரிலோ அல்லது ஆபீசிலோ ஒட்டி வைத்து மகிழ்வர்(டிபிகல் ஹாலிவுட் கிளீஷே இது!!பிச்சைகாரன்  கக்கூசில் பிள்ளைகளின் போட்டோவை ஒட்டி வைத்து தடவுவான்.அமெரிக்க சனாதிபதி தனது மேஜையில் தன பிள்ளைகளின்  போட்டவை வைத்து தடவுவார்.ஆமா இதென்ன உலக சாதனியா?புள்ளை  பெக்குறது?தலைய வலிக்குது இந்த காட்சியை பார்த்து!!)

புதன், 20 ஜூலை, 2011

அரசின் புல்லரிக்க வைக்கும் கொள்ளுகை!!!

பெட்ரோல் டீசல் கேஸ் மண்ணெண்ணெய் இதுக்கெல்லாம் உடனே விலையேற்றம் ஆனா கோடி கோடியா கொள்ளையடிக்கும் ஐபிஎல் லுக்கு வரி விதிக்க அரசு பரிசீளிக்குதாம்!!நாசமா போக!!மக்கள் செத்தாலும் கார்பரேட்டு கபோதிங்க வாழனும் அதான் அரசின் கொள்ளுகை

திங்கள், 18 ஜூலை, 2011

சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்துங்கள்

சமசீர் கல்வியை அமல்படுத்த உயர்நீதி மன்றத்தின் ஆணையை கோடி வணக்கத்தோடு வரவேற்கிறேன்.இதை கருணாநிதி கல்வின்னு பாக்காமல் மேல்முறையீடு செய்து மேலும் மூக்குடைபட்டுகொள்ளாமல் இப்போதே அமல்படுத்துங்கள் சமசீர் கல்வியை!!இது ஜெயா அரசுக்கு குட்டு கருணாநிதிக்கு ஷொட்டுனெல்லாம் சொல்லி மேலும் அரசியல் படுத்தாமல் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனே அமல்படுத்தவேண்டும் சமச்சீர் கல்வியை.
       சமச்சீர் கல்வியை அமல்படுத்த மறுக்கும் தனியார் பள்ளிகள் மற்றும் நைசாக சி பி எஸ் இ ஆக மாற்ற முயலும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். மற்றும் பழைய பாடத்திட்ட  புத்தகத்துக்கென பல ஆயிரம் பிடுங்கிய காசை திரும்ப வழங்க அரசு உத்தரவிட வேண்டும்.இதை மறுக்கும் எந்த பள்ளியின்  அங்கீகாரத்தையும் அரசு  ரத்து செய்துவிடலாம்!
     பல ஆயிரம்  பள்ளி(கொள்ளை) கட்டணத்துக்கும்  அரசு ஒரு முற்றுபுள்ளி வைக்க இதுவே சரியான நேரம்.

வியாழன், 14 ஜூலை, 2011

கார்பரேட் களவாணித்தனம்-2 (புற்றுநோயை பரப்புதல்)

கடலூர்(எனது சொந்த ஊர்) பெயர் பெற்றது கரும்பு சக்கரை பீச் இதெல்லாம் விட ஊர் உலகத்தில் தடை செய்யப்பட்ட தொழிர்சாலைகள்தான்.இப்போது சமீபத்தில் கெம்ப்ளாஸ்ட் நிறுவனம் மற்ற நாடுகள் மற்றும் மாநிலங்களில் நிறுவ மறுக்கப்பட்ட நிலையில் கடலூரை அடைந்தது.ஆட்சியாளர்களை "கவனித்ததில்" அனுமதி கிடைத்து தன பங்குக்கு ஊரை மாசு படுத்தி வருகிறது.இந்த நிலையில் சுற்றுசூழல் ஆர்வலர்கள் நடத்திய ஆய்வில் இந்த தொழிற்சாலைகளின் சுற்றுபுறத்தில் உள்ள காற்றில் புற்றுநோயை பரப்பும் உண்டாக்கும் ரசாயனங்கள் 2000 மடங்கு (Carcinogenic) கலந்திருப்பதாக குற்றம் சாட்டின.அப்புறம் நீரி(NEERI) அமைப்பு ஆய்வு கனிமொழியின் வீராவேச பேச்சு(நான் அப்பாவிடம் சொல்றேன்.அப்போதைய அமைச்சர்  மைதீன் கானிடம் சொல்றேன் blah blah)மக்களுக்கு சிறு நம்பிக்கையை உண்டாக்கியது.ஆனால் கார்பரேட்டுகள் +பணத்தின் முன்பு இதெல்லாம் எம்மாத்திரம்?
அப்படியும் பலரின் வற்புறுத்தலால் அந்த நிறுவனங்கள் சேர்ந்து அந்த தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களை புற்றுநோய் ஆய்வு முகாமுக்கு அழைத்தது.சரி ஏதோ செஞ்சி கிழிக்கபோராங்கன்னு பாத்தா கடைசியில் அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவரை "கவனித்து" யாரையும் பரிசோதனை செய்யாமல் யாருக்கும் புற்றுநோய் இல்லை என ஒரு அறிக்கையை வெளியிட வைத்தனர்.அது இப்போது வெளியே வந்து விட "வழக்கம் போல" ஊத்திமூடும் பணியில் தொழிற்சாலை முதலைகள்.
              ஆக இனி அந்த தொழிற்சாலைகள் வழக்கம் போல புற்றுநோயை பரப்பி கொண்டிருக்கும்.கேட்க ஆளில்லை.அப்படியே  யாரவது கேட்டால் இது போன்ற ஏமாற்று மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பூசி முழுகப்படும்.மக்கள் புற்றுநோய் வந்து செத்தால் இவர்களுக்கென்ன?கார்பரேட்டுகளுக்கு வேண்டியது மூன்று.
பணம் பணம் மற்றும் பணம்!!

ஞாயிறு, 3 ஜூலை, 2011

கார்பரேட் களவாணித்தனம்-1 (நிதி அமைச்சகத்தை உளவு பார்த்தல்)

கார்பரேட்டுகள் அல்லது எம் என் சி (எம்புள்ள எம் என் சில வேல பாக்குறான்.இது வழக்கமா கேக்கும் வசனம்.டுபுக்கு நிறுவனங்கள் கூட இரண்டு இடங்களில் மட்டும் கம்பனியை வைத்துகொண்டு எம் என் சி என தனக்குத்தானே அடைமொழி கொடுத்துகொள்கிறது(இந்த நேரத்தில் தமிழின தலிவரு ஞாபகம் வந்தா நான் பொறுப்பில்லை).1991 இஸ் ராஜீவ் மரணத்திற்கு பிறகு இந்தியா தாராளமயமாக்கபட்டது  .அதாவது எந்த கம்பெனி வேணும்னாலும் வந்து இந்தியாவை சொரண்ட வரிவிலக்கு லொட்டு லொசுக்கு எல்லாம் அரசே வழங்கும்.,ஒரு டவுசர் மட்டும் கொண்டுவந்தா போதும்.மிச்சத்தை அப்போதைய நிதி அமைச்சர் அமெரிக்க அடிவருடி முன்னாள் ஒலக வங்கி  ஊழியர்(இன்னும் 3000 $ பென்சன் வாங்குறார்) அவரும் ஊருல இருக்கும் களவாணிக்கேல்லாம்   ஆஜராகும் சிதம்பரமும் பார்த்துகொள்வர்.சிடுமூஞ்சி நரசிம்ம ராவ் இதுக்கு முழு எடுப்பு.(இந்த தாராளமயமாக்கவே  ராஜிவை சி ஐ ஏ முடித்ததுன்னும் சொல்லுவாங்க.நான் அந்த வெளையாட்டுக்கு வரவில்லை.டங்கன் காட் ஒப்பந்தம் பற்றியெல்லாம் கேக்க கூடாது).
1991 க்கு  முன்பே சுரண்டும் மொதலாளிகள் இருந்தனர் ஆனால் குறைவு.அம்பானி,டாடா,பிர்லா போன்றவர்கள்.அதன் பின் ஆப்பிளை காப்பியடித்தே பெரியாளான பில் கேட்சு முதல் பில்லு கிழிப்பவன் வரையில் இந்தியாவை சுரண்ட அனுமதிக்கப்பட்டனர்.
    இப்போது என்ன நிலைமை?அரசையே ஆட்டிவைக்கும் அளவுக்கு கார்பரேட்டுகள் வளர்ந்து  விட்டனர்.எந்த மந்திரி பதவிக்கு யார் வரணும் யார் வரக்கூடாது என்பதை முடிவெடுப்பதும் அவர்களே.(நீரா ராடியா உரையாடல்கள் ஒரு டிரைலர்தான். வெளியே வராத பல நீரா ராடியாக்கள் இன்னமும் உள்ளனர்).
    இப்போது சமீபத்தில் நிதி அமைச்சக அலுவலகத்தில் 16 இடங்களில் பபிள் கம் போன்று ஒட்டப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.அதை எடுத்தால் உள்ளே சிறிய அளவுக்கு சுவரில் துளை உள்ளதாம்.பிரணாப் முகர்ஜி ஐ பி இடம் இதை முதலில் சொல்லாமல் மத்திய வரி விதிப்பு ஆணையத்தை கூப்பிட்டு "எல்லாவற்றையும்" கிளியர் செய்து விட்டுதான் ஐ பி யை அழைத்துள்ளார்.கேட்டதற்கு "உளவெல்லாம்  ஒண்ணுமில்லை.யாரோ விளையாட்டாக ஒட்டியுள்ளனராம்" .அதென்ன  நிதி அமைச்சகமா இல்லை காலேஜா?கண்ட இடத்தில் பபிள் கம் ஓட்ட!
       உண்மை இரண்டு விதமாக இருக்கலாமென சொல்கின்றனர்.ஒன்று சோனியாவே தன அமைச்சர்களை உளவு பார்த்திருக்கலாம்.இரண்டு கார்பரேட்டுகள் உளவு பார்த்திருக்கலாம்.
      இதில் கார்பரேட்டுகள் உழவே பிரதானமாக இருக்கும்(ஏனெனில் பிரதமரே சோனியாவின் ரிமோட்டால் ஆட்டிவைக்கபடுபபவர்.அதனால் அவருக்கு  தெரியாமல் யாரும் எதுவும் செய்ய வாய்ப்பு மிக குறைவு) .யார் மந்திரியாக வரவேண்டுமேன்பதுவரை முடிவெடுக்கும் கார்பரேட்டுகள் அந்த மந்திரிகள் என்ன முடிவெடுக்கின்றனர் என்பதை தெரிந்துகொல்லாமலா இருப்பார்?
      இப்போது சின்ன வத்திபெட்டி அளவே உள்ள ஒரு சாதனம் உள்ளது.அதில் சிம் கார்டை சொருகிவிட்டு அறையில் வைத்துவிட்டால் உலகின் எந்த மூலையிலும் செல்போன் மூலம் ஒட்டுகேட்டுகொள்ளலாம்.அது தவிர குண்டூசி அளவு மைக், கேமரா என பல உளவு சாதனங்கள் சாதாரண மார்கெட்டிலேயே கிடைக்கின்றது.இது குறித்த விவரமான கட்டுரையை ரா முன்னாள் அதிகாரி பி.ராமன் இங்கே   எழுதியுள்ளார்.இவரின்  "நிழல் வீரர்கள்" என்ற புத்தகம் படித்திருக்கிறேன்.அதில் உளவு அமைப்புகளின் செயல்பாடுகள் விளக்கியிருப்பார்.
      சரி இதையெல்லாம் பயன்படுத்தி என்ன செய்வது?எப்படி இருந்தாலும் கார்பரேட்டுகளின் மக்கள் தொடர்பு அதிகாரி மூலமோ அல்லது ஊடகங்கள் மூலமோ அல்லது நிதி அமைச்சக அலுவலகத்தில் உள்ள எடுப்பு மூலமோ அமைச்சகத்தின் முடிவுகளை தெரிந்து கொள்ளலாமே.எதற்கு இந்த உளவு என கேக்கலாம்.
     இப்போது செய்தி கிடைப்பது பெரிய விசயமில்லை.தொழில்நுட்ப வசதியில் எப்படியும் அமைச்சக முடிவுகள் தெரிந்துவிடும்.ஆனால் அது எப்போது கிடைக்கிறது என்பதே கார்பரேட்டுகளுக்கு பல ஆயிரம் கோடி சொத்துமதிப்பை மாற்றி அமைக்க வல்லது.அதனாலேயே உடனடியாக அமைச்சக கூட்டத்தை உளவு பார்ப்பதன் மூலம் அதன் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
  இதனால் பங்கு சந்தையில் முதலீட்டு பங்குகள் (equity) மற்றும் முன்பேர சந்தையில்  (Futures & options) பல கோடி லாபம் பார்க்கலாம்.சாதாரண  ஒரு தனி முதலீட்டாளர் அதிகபட்சம் (அவர் போலி சாமியாராக இல்லாத பட்சத்தில்) சில ஆயிரம் ஈக்விட்டிகளையோ அல்லது சில ஆயிரம் முன்பேர  பங்குகளையோதான் வைத்திருப்பார்.ஆனால் நிறுவங்கள் பல ஆயிரம் ஈக்விடிக்களையும் லட்சகணக்கில் முன்பேர பங்குகளையும் வைத்திருக்கும்.அதனால் ஒரு பத்து பைசா வேறுபாடு கூட அவர்களின் சொத்துமதிப்பை  பல நூறு கோடி ரூபாய்  வரை  மாற்றிவிடும் .இதனாலேயே உளவு பார்த்ததென என்று கூறலாம்.அது மட்டுமன்றி போட்டி நிறுவனங்களின் நடவடிக்கை அதற்கு அரசு வழங்க உள்ள சலுகைகள் என பல நூறு தகவல்களை உளவு மூலம் பெற்று பயனடைந்திருப்பர்.வழக்கம் போல ஒன்னுமே நடக்கல என்று காங்கிரஸ் எல்லோரு வாயையும் மூடி விட்டது வாழ்க சன நாயகம்!!