ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

ஐயோ வட போச்சே!!!


கடந்த சில வாரங்களாக இது பற்றியே பேச்சு.,..இல்லை நான் சொல்வது எந்திரன் படத்தை பற்றியோ அல்லது வேறேதோ அல்ல..இது NDM-1 என்று சுருக்கமாக அழைக்கப்படும் New Delhi Metallo-beta-lactamase என்ற கிருமி அழிப்பான் எதிர்ப்பு நொதி (Enzyme) இந்தியாவிலிருந்து உருவானதாகவும் ஆதலால் தங்கள் நாட்டவர் யாரும் இந்தியாவிற்கு செல்ல வேண்டாமெனவும் பல நாடுகளில் எச்சரிக்கப்பட்டனர்.இதை கேள்விப்பட்ட நமது "தேசபக்தர்கள்" குய்யோ முறையோ என கூப்பாடு போட்டனர்.இது இந்தியாவில் வளர்ந்து வரும் மருத்துவ சுற்றுலாவை பாதிக்கும் எனவும் இது தேசத்திற்கு எதிரான ஒரு அறிவிப்பு எனவும் கூறினார்.
அப்படியா?!
முதலில் இந்த மருத்துவ சுற்றுலா பற்றி சிறிது பார்க்கலாம்.பல வெளிநாட்டவர் தங்கள் நாட்டில் ஒரு மருத்துவ சிகிச்சை பெற அல்லது ஒரு அறுவை சிகிச்சை செய்ய செலவு அதிகமாகும் என்பதால் அவர்கள் இந்தியா வந்து சிகிச்சை பெறுகின்றனர்.
இதனால் அரசுக்கு வருமானம் வருவதால் மற்ற நாடுகள் விஷ பிரசாரம் செய்கின்றன என எதிர் கட்சிகளும் ஆளும் கட்சியும் கூறினாலும் முதலில் இந்த மருத்துவ சுற்றுலாவல் யாருக்கு லாபம்?
ஒரு தலைவலி என போனாலும் அந்த ஸ்கேன் எடு இந்த ஸ்கேன் எடு என அது இதுவென்று பல ஆயிரங்களை பிடுங்கி "ஏன்டா இங்க சிகிச்சைக்கு வந்தோம் " என மக்கள் நொந்து போகும் அளவுக்கு அராஜகம் செய்யும் அபோல்லோ போன்ற இந்த தனியார் மருத்துவமனைகள் தான் .
மேலும் ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் "இந்தியா செல்ல வேண்டாம்" என சில நாடுகள் எச்சரித்தபோது பொங்கிஎழுந்தது தேசபக்தியால் அல்ல..இத்தகைய மேற்கூறிய மருத்துவமனைக்கு வருமானம் குறைந்து விடும்.(உள்நாட்டு மக்கள் பெரும்பாலும் இத்தகைய மருத்துவமனைகளின் அட்டூழியத்தை ஏற்கெனவே கேட்டதனாலோ அல்லது அனுபவப்படதனாலோ அங்கே செல்வதை தவிர்த்து விடுவதால் இந்த மருத்துவமனைகள் பெரும்பாலும் ஏதும் அறியாத வெளிநாட்டு நோயாளிகளின் பாக்கெட்டை பதம் பார்கின்றன.இப்போது இத்தைகைய எச்சரிக்கையால் வெளிநாட்டு நோயாளிகளின் வருகை குறைந்து போகுமானால் இவர்கள் தலையில் துண்டை போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.எனவே தான் தாங்கள் அவ்வப்போது ஊழியம் அழும் கட்சிகளை தூண்டிவிட்டு இத்தகைய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன .
இல்லையேல் இந்த கட்சிகள் வாய் மூடி மௌனியாக இருப்பதையே விரும்பும்.
மருத்துவ சுற்றுலா பாதிக்கப்படும் ஆதலால் வெளிநாட்டு நோயாளிகள் பாதிக்கபடுவர் என கவலைப்படும் கூப்பாடு போடும் எந்த கட்சியோ அமைப்போ முதலில் இங்கிருக்கும் சிகிச்சை பெற வசதியில்லாமல் அரசு மருத்துவமனைக்கு சென்றால் அங்கும் பணம் பிடுங்கும் பேய்களை அத்தகைய போக்கை கண்டிக்க துணிவுண்டா?
இல்லை.ஏனெனில் இந்த பாவப்பட்ட சிகிச்சை பெற வசதியில்லாத இந்தியர்களால் தேர்தல் நேரம் தவிர மற்ற நேரங்களில் இவர்களுக்கு எந்த பயனும் இல்லை என்று இவர்கள் நினைக்கின்றனர்.
அதே நேரம் இந்த வெளிநாட்டு நோயாளிகளின் வருகையால் தனியார் மருத்துவமனைகள் பணம் கொழிக்கும்.அதில் இவர்களுக்கு "பங்கு" வெட்டப்படும்.
ஆம் ஞ்யாயம்தான்.பணம்தானே முக்கியம் ஏழை மக்கள் எக்கேடு கெட்டா இவர்களுக்கு என்ன?
வாழ்க சன நாயகம்!!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக