செவ்வாய், 19 ஏப்ரல், 2011

குரூரமான நகைச்சுவை

எப்போதாவது இந்தியா வந்து செல்லும் இந்திய பிரதமர்(!!?) மன்மோகன் சிங் "இந்திய அணு உலைகள் பாதுகாப்பாக உள்ளது." என கூறியுள்ளது குரூரமான நகச்சுவையன்றி வேறு எப்படி விளக்குவதென எனக்கு தெரியவில்லை.ஏற்கெனவே 27   ஆண்டுகள் ஆகியும் இன்னும் போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட சந்ததி வழியாக பாதிப்புக்குள்ளாகியிருக்கும்  மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் வழங்கப்படாததும், இந்த கொடுமைக்கு காரணமான வாரன் ஆண்டர்சன் உள்ளிட்ட கேடிகள் தண்டிக்கபடாததுமே பல்லிளித்து கொண்டிருக்கும்போது இப்படி ஒரு அறிக்கையை மன்மோகன் சிங் விட்டிருப்பது சேடிசம் கலந்த குரூர நகைச்சுவை.
             அய்யா ஓங்க குடும்பமே அமெரிக்காவுல இருக்குன்னு எங்களுக்கு தெரியும்.ஏதாவது அணு விபத்து ஏற்பட்டால் நீங்க "வழக்கம் போல" விமானம் ஏறிடுவீங்கன்னும் தெரியும்.அதனால கொஞ்சம் சாத்துங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக